search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தம்பி பலி
    X

    மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தம்பி பலி

    • வேலை முடிந்ததும் ஒரே மோட்டார் சைக்கிளில் அண்ணன், தம்பி 2 பேரும் வீட்டிற்கு சென்றனர்.
    • ஈரோடு-பவானி சாலை சுண்ணாம்பு ஓடை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டன.

    ஈரோடு:

    ஈரோடு ஆர்.என்.புதூர் பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(44). இவரது தம்பி தேவராஜ்(41). இருவருக்கும் திருமணம் ஆகி அருகருகே வசித்து வருகின்றனர்.

    பன்னீர்செல்வம், தேவராஜ் 2 பேரும் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைலில் பேல் போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

    2 பேரும் தினமும் ஒன்றாக மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்து பணி முடிந்ததும் மீண்டும் வீட்டுக்கு ஒன்றாக செல்வது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் வேலை முடிந்ததும் ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வீட்டிற்கு சென்றனர். பன்னீா்செல்வம் வண்டியை ஓட்டி செல்ல தேவராஜ் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

    ஈரோடு-பவானி சாலை சுண்ணாம்பு ஓடை அருகே சென்றபோது முன்னால் சென்ற தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த தங்கவேல் (40) என்பவரது மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டன.

    இதில் நிலை தடுமாறி பன்னீர்செல்வம், தேவராஜ் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். பன்னீர்செல்வத்துக்கு வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. தங்கவேலுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம்பக்கத்தினர் பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீசார் இறந்த தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×