search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நான்கு வழிச்சாலை"

    • நேரில் ஆய்வு செய்தபின் விஜய்வசந்த் எம்.பி. பேட்டி
    • இந்த பணிகளுக்காக கூடுதலாக ரூ.1041 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி முதல் கேரள எல்லை வரையிலான நான்கு வழி சாலைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அது பாதியில் கைவிடப்பட்டது.

    விஜய்வசந்த் எம்.பி. மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகி யோரை சந்தித்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இந்த பணிகளுக்கான மறு ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த பணிகளுக்காக கூடுதலாக ரூ.1041 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

    கடுமையான முயற்சி களின் பலனாக நான்கு வழி சாலைக்கான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த சாலை மொத்தம் 53.714 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. ஏற்கனவே 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட் டுள்ளது.

    இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகள் மேற் கொள்ள வேண்டியதுள்ளது.தற்பொழுது ஒதுக்கப்பட் டுள்ள நிதியில் 25 பெரிய பாலங்களும், 16 சிறிய பாலங்களும் அமைக்கப்படு கிறது. இந்த பணிகளை விஜய்வசந்த் எம்.பி. நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார். இந்த பணிக்கான திட்ட இயக்கு னர் வேல்ராஜ், இந்த பணிக்கான ஒப்பந்தக்கா ரர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் இந்த பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த பணிகள் நடைபெறும் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட விஜய்வசந்த் எம்.பி. இந்த பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு இதனை திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் எடுப்ப தற்கு தடை இருந்ததால் பக்கத்து மாவட்டத்திலிருந்து மண் கொண்டு வருவதற்கு உள்ள நடைமுறை சிர மங்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கினர்.

    நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்ப டும் என துறை அதிகாரி களுக்கு உறுதி அளித்தார்.

    • ரூ.2100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன.
    • சாலை பணிகள் இருபுறமும் முடிந்த நிலையில் பாலப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், நவ.4-

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இரு வழி சாலை தற்பொழுது உள்ளது. இங்கு இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் திருவனந்த புரத்திற்கு சென்று வருவ தால் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து நான்கு வழி சாலை பணிகள் தொடங்கப்பட்டது. இத ற்காக ரூ.2100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. நிலம் கையகப்படு த்தும் பணி நடைபெற்றதை தொடர்ந்து சாலை அமை க்கும் பணி மேற்கொ ள்ளப்பட்டது. பல்வேறு இடங்களில் இந்த பணி துரிதமாக நடைபெற்று வந்த நிலையில் மணல் கட்டுப்பாடு காரணமாக பணி கிடப்பில் போடப்ப ட்டது.

    நான்கு வழி சாலை பணியை துரிதமாக முடிக்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. மத்திய மந்திரி யிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ண னும் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்தார். இந்த நிலை யில் சாலை பணியை மீண்டும் தொட ங்க நடவ டிக்கை எடுக்க ப்பட்டது. வேறு மாவட்ட த்திலிருந்து மணல் கொண்டு வந்து சாலை பணியை தொடங்க நட வடிக்கை மேற்கொண்ட னர். தற்பொழுது நான்கு வழி சாலை பணியில் ஒரு சில இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 64 இடங்களில் சிறிய பாலங்கள் அமைக்க வேண்டி யது உள்ளது. ஏற்கனவே நாகர்கோவில் அருகே ரெயில்வே மேம்பா லம் நான்கு வழிச்சாலையில் அமைக்கப்பட்டு உள்ளது. சாலை பணிகள் இருபுறமும் முடிந்த நிலையில் பாலப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சாலையையும், பாலத்தையும் இணை க்கும் வகையில் இருபுறமும் மணல்கள் நிரப்பப்ப டாத நிலை இருந்து வருகிறது. மணல் தட்டுப்பாடு காரண மாக பல மாதங்களாக மணல் நிரப்பப்ப டாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்த பாலத்தை யும், சாலையையும் இணைக்கும் வகை யில் இருபுறமும் மணல்கள் நிரப்பி விட்டால் வாகன போக்குவரத்து மேற்கொள்ளலாம். ஏற்க னவே பொற்றைய டியில் இருந்து புத்தேரி வரை பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளது. இந்த பாலம் மட்டுமே தற்பொழுது மணல் நிரப்பப்படாமல் உள்ளதால் அந்த வழியாக வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளது. அந்த பாலத்தின் இருபுறமும் மணல் நிரப்பி விட்டால் வாகன போக்குவரத்து தொடங்கி விடலாம். நாகர்கோ வில் நகருக்கு வரும் மக்கள் இந்த சாலை வழியாக வருவதற்கு வசதி யாக அமையும். எனவே இந்த பாலத்தின் இருபுறமும் மணல் நிரப்பும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நான்கு வழிச்சாலையையும், பால த்தையும் இணைக்கும் வகையில் மணல் நிரப்பு வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தடுப்புக்கற்கள் அமைக்க ப்பட்டு மணல்கள் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணி முழுமை பெறும் பட்சத்தில் அந்த வழியாக போக்கு வரத்து தொடங்கப்படும். மேலும் மற்ற இடங்களிலும் நான்கு வழி சாலை பணியை புனிதமாக முடிக்க அதிகா ரிகள் நடவடிக்கை மேற்கொ ண்டு வருகிறார்கள். பாலம் அமைக்க வேண்டிய இடங்க ளில் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை களும் எடுக்க ப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் நான்கு வழிசா லை பணியை முழுமை யாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கப்பலூர் நான்கு வழிச்சாலையில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை தடுக்க ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • டிரைவர் இல்லாத லாரிகளில் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது அதிகரித்துள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சிப்காட் தொழிற்சாலை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்பட்டு வருகின்றனர். வெளி மாநில மற்றும் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் லாரிகள் மூலம் சரக்குகள் வந்த வண்ணம் இருக்கும்.

    சரக்குகளை கொண்டு வரும் லாரி டிரைவர்கள் வாகனத்தை கப்பலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் நிறுத்தி ஓய்வு எடுப்பது வழக்கம். இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் ஆள் நடமாட்டம் குறைந்து இருக்கும்.

    இதை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களில் வரும் வழிப்பறி கும்பல்கள் லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறிப்பது தொடர் கதையாக நடந்து வருகிறது. டிரைவர் இல்லாத லாரிகளில் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது அதிகரித்துள்ளது.

    இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் டிரைவர்கள் வாகனங்களை நிறுத்த அச்சமடைந் துள்ளனர். நெடுஞ்சாலை களில் குற்றங்களை தடுக்கவும், விபத்தின் போது துரிதமாக செயல்ப டவும் ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கப்பலூர் நான்கு வழிச்சாலை பகுதியில் போலீசாரின் மெத்தனம் காரணமாக சமூக விரோத கும்பல்கள் லாரி டிரைவர், தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூடுதல் கவனம் செலுத்தி நான்கு வழிச்சாலைகளில் கைவரிசை காட்டும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது.

    லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் பணம் பறிப்பு

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது21). லாரி டிரைவரான இவர் சென்னையில் இருந்து நெல்லைக்கு லாரியை ஓட்டி வந்தார். மதுரை மாவட்டம் கப்பலூர் அருகே உள்ள கருவேலம்பட்டி பிரிவு பகுதிக்கு சென்ற போது அங்கு 2 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது. இதை பார்த்த ராஜேஷ் உடனே லாரியை நிறுத்தி காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் இல்லை. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராஜேசை மிரட்டி செல்போன், ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதே போல் கவாஸ்கர் என்பவரிடம் வழிப்பறி கும்பல் பணத்தை பறித்துக் கொண்டு சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரமேஷ் பால்துரைக்கு சொந்தமான நிலம் ஆலங்குளம்-நெல்லை சாலையில் உள்ளது.
    • சாலை அமைக்க வந்த ஊழியர்களை ரமேஷ் பால்துரை தடுத்து நிறுத்தினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பால்துரை(வயது 41). இவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் ஆலங்குளம்-நெல்லை சாலையில் உள்ளது.

    இதில் முகப்பு பகுதியில் உள்ள குறைந்த அளவு நிலத்தை நான்கு வழச்சாலை விரிவாக்க பணிக்கு கையகப்படுத்தப்பட்டதாகவும், இதுவரை நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் அந்த இடத்தில் சாலை அமைக்க வந்த ஊழியர்களை ரமேஷ் பால்துரை தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து அவர் தனது குடும்பத்தினருடன் கருப்புக் கொடியுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    உடனே ஆலங்குளம் தாசில்தார் கிருஷ்ணவேல், சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் நான்கு வழிச்சாலை திட்ட அலுவலர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய ஆவணங்கள் சமர்பிக்குமாறும், மறுநாளே இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தர்ணாவைக் கைவிட்டார்.

    • நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணிகள் 36 மாதங்களை கடந்தும் நடைபெற்று வருகிறது.
    • போதுமான தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் அமைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் காரசார விவாதங்கள் நடைபெற்றது.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

    நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் இந்த மாதத்தில் முடியும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் இன்னும் நிறைய பணிகள் நிலுவையில் உள்ளது. சாலைப் பணிகளை முடிக்கக்கூடிய இலக்கு தேதி மட்டும் மாறுகிறதே தவிர, பணிகள் முடிந்தபாடில்லை. 18 மாதங்களில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணிகள் 36 மாதங்களை கடந்தும் நடைபெற்று வருகிறது.

    பாவூர்சத்திரம் மற்றும் ராமசந்திரப்பட்டணம் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. விபத்துகளை தடுக்க அதிகாரிகளின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. ஒன் டு ஒன் பஸ்கள் அசுர வேகத்தில் சென்று தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. சாலை பாதுகாப்பில் போதுமான நடவடிக்கைகள் எடுத்து சாலை விபத்துகளை தடுக்காவிட்டால் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்து நீதிமன்றம் வரை சென்று அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முறையிடுவோம். சாலை பாதுகாப்பு குறித்து போதுமான நடவடிக்கைகள் எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    உடனே மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், அங்கு அமர்ந்திருந்த அதிகாரிகளை பார்த்து ஆலங்குளத்தில் இருந்து தென்காசி வரையிலான நான்கு வழிச்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். போதுமான தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் அமைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள திறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளில், சாலை பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதுமான எச்சரிக்கை பலகைகள் மற்றும் தடுப்புகள் அமைத்தல், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்றார்.

    • 64 புதிய பாலங்களும் கட்டப்படுகின்றன
    • நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ரூ.ஆயிரத்து 600 கோடி செலவானது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலை இரு வழிச்சாலையாக உள்ளது . இந்த சாலையில் தினமும் ஆறு வழி பாதையில் செல் லும் அளவிற்கு வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. விபத்துகளும் நடந்து வருகின்றன.

    இதையடுத்து கன்னியா குமரி-திருவனந்தபுரம் இடையே 4 வழிச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.2 ஆயிரத்து 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ரூ.ஆயிரத்து 600 கோடி செலவானது. மீதமுள்ள 500 கோடியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டது. குழித்துறையில் மிகப்பெரிய பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு இடங்களில் சிறிய பாலங்களும், நாகர்கோவில் அருகே ரெயில்வே பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே பாலம் அமைக்கப்பட்டாலும் அந்த பாலத்தின் இரு புறமும் மணல்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

    இந்த பகுதியில் மணல்கள் நிரப்பப்படாததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொற்றையடியில் இருந்து புத்தேரி குளத்தின் கரை வரை உள்ள 4 வழி சாலை பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த பாலப்பணி முற்றிலும் முடிவடையும் பட்சத்தில் இந்த வழியாக வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும். எனவே இந்த பாலத்தின் இருபுறமும் மணல்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழியாக வாகனங்கள் சென்றால் நாகர்கோவில் நகரில் போக்கு வரத்து நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது. அப்டா மார்க்கெட் மற்றும் திருவனந்தபுரத்திற்கு செல்லும் வாகனங்கள் கன்னியாகுமரியில் இருந்து இந்த புறவழிச்சாலை வழியாக சென்று விடலாம். தற்பொழுது இந்த சாலை பணியை பொருத்த மட்டில் மணல் தட்டுப்பாடு காரணமாக கடந்த 5 மாதங்களாக கிடப்பில் போடப் பட்டுள்ளது. மீண்டும் இந்த பணியை தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இதற்காக ரூ.1041 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து குளத்தின் மேல் பாலம் அமைக்கும் பணி உட்பட பல்வேறு இடங்களில் ராட்சத பாலங்கள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக புத்தேரி குளத்தில் மிகப்பெரிய பாலம் அமைக்கப்படுகிறது. 450 மீட்டர் நீளத்திற்கு சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்படுகிறது.

    இதே போல் தோட்டியோடு பகுதியில் 325 மீட்டர் நீளத்திற்கும் பொற்றையடி பகுதியில் 50 மீட்டர் நீளத்திற்கும் குளத்தில் பாலம் அமைக்கப்படுகிறது. வழுக்கம் பாறை பகுதியில் 4 வழிச்சா லையின் மேல் மேம்பாலம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொ ழுது ஒதுக்கப்பட் டுள்ள நிதியில் 25 இடங்களில் பெரிய பாலமும், 16 இடங் களில் சிறிய பாலமும், அதைவிட சிறிய பாலங்கள் என மொத்தம் 64 பாலங்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை இன்னும் ஒரிரு நாட்களில் தொடங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. 4 வழிச்சாலை பணியை 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த 4 வழிச்சாலை குமரி மாவட்டத்தின் முதுகெலும் பாக விளங்கும். போக்கு வரத்து நெருக்கடியும் குறையும். இந்த சாலை மொத்தம் 53.714 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. ஏற்கனவே 30 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகள் மேற்கொள்ள வேண்டியதுள்ளது. குளங்களில் மணல் நிரப்பாமல் இருக்கும் வகையில் பல்வேறு இடங்களில் குளத்தின் நடுவே பாலம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். பாலம் அமைக்கப்படும்போது குளத்தின் இருபுறமும் மணல்கள் நிரப்பிவிட்டு நடுவே பாலங்கள் அமைக்கப்படும்.

    அதன் பிறகு அந்த மணல்கள் அகற்றப்படும். மணல் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்பொழுது பக்கத்து மாவட்டங்களில் இருந்து மணல் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. பணிகளை இந்த மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிட்டு உள்ளோம். பணிகள் தொடங்கப்படும் போது முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்படும். 2 ஆண்டுகளுக்குள் பணி நிறைவு பெறும் என்றார்.

    • குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு குறைய வாய்ப்புள்ளது.
    • குளம், ஏரிகளின் பரப்பளவையோ குறைக்கும் செயலில் ஈடுபடுவது சட்டவிரோத குற்றமாகும்.

    தென்காசி:

    தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலை விரி வாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நாகல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள குளத்தின் மீது சாலையின் இடது பக்கம் சுமார் 25 அடியும், வலது பக்கம் சுமார் 50 அடியும் சாலை அமைப்பதற்காக பணிகள் நடை பெற்று வருகிறது. இதற்காக சுமார் 6.5 ஏக்கர் பரப்பளவு கையகப் படுத்த ப்பட்டு மண்ணைக் கொட்டி சாலை அமைக்கின்றனர்.

    இந்த குளத்தின் நீர் பாசனத்தை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும், நீர் ஆதாரத்திற்காக ஏராளமான பொதுமக்களும் இருந்து வரும் நிலையில் தற்போது குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு குறைய வாய்ப்புள்ளது என அப்பகுதியினர் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே குளத்தின் மேலே பாலம் அமைத்து சாலை அமைக்க வேண்டும் என்பது அவர் களின் கருத்தாக உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு தமிழக அரசு ஆக்கிரமிப்பு களில் இருந்து நீர் நிலை களை பாதுகாக்க குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிர மிப்புகள் அகற்றும் சட்ட த்தை கொண்டு வந்தது. அதன்படி தமிழ்நாடு ஏரி களை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றல் சட்டம் 2007 -ன் படி நீர்நிலைகள் அதாவது குளம் மற்றும் ஏரிகளின் பரப்பளவையோ அல்லது நீரின் கொள்ளளவையோ குறைக்கும் செயலில் ஈடுபடுவது சட்டவிரோத குற்றமாகும்.

    எனவே இந்த சட்டவிரோத செயலில் தலையிட்டு சாலை அமைக்கும் பணியை நிறுத்தி குளத்தின் நடுவே மேம்பாலம் அமைத்து நீர்நிலை ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரும், பா.ஜனதா மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளருமான மருது பாண்டியன், தமிழ்நாடு கோட்ட பொறியாளர் மற்றும் சாலை மேம்பாட்டு வாரிய அலுவலகங்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    • பழமையான ஆலமரத்தை அகற்ற இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் வந்தனர்.
    • போலீசார் அங்கு கூடியிருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தென்காசி:

    நெல்லை- தென்காசி நான்கு வழி சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தில் சாலையோரம் உள்ள மிகப் பழமையான மூனால் முப்புடாதி அம்மன் கோவிலை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கோவிலில் இருந்த சிலைகளை வேறு இடத்திற்கு மாற்றவும், கோவிலை ஒட்டி நின்ற மிக பழமையான ஆலமரத்தை அகற்றுவதற்காகவும் தென்காசியில் இருந்து இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் போலீசார் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவிலில் உள்ள பீடங்களை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பெண், ஆண் சாமியாடிகள் திடீரென சாமி ஆடி குறி சொல்ல தொடங்கினர்.

    அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து தூக்கி சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் போலீசார் அங்கு கூடியிருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோவில் பீடங்களை மாற்றியதோடு பழமையான ஆலமரத்தையும் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிலைகளை ஊர் பொதுமக்களின் அனுமதி பெறாமல் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் தென்காசிக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நவநீதகிருஷ்ண புரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் எடுத்து செல்லப்பட்ட விக்கிரகங்களை கொண்டு வராததால் ஊர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று காலையில் எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை இரவு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஊர் பொதுமக்களிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் ஊருக்கு பொதுவான கட்டிடத்தில் அம்மன் விக்கிரகங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபட தொடங்கினர்.

    நான்கு வழிச்சாலை பணிகள் தேவையான ஒன்றுதான் இருப்பினும் பழமையான கோவில் மற்றும் ஆலமரங்களை நவநீதகிருஷ்ணபுரத்தில் அகற்றாமல் சாலையில் படர்ந்த ஆலமரத்தின் கிளைகளை மற்றும் அகற்றிவிட்டு நான்கு வழி சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் இந்து அறநிலையத்துறை மற்றும் சாலை அமைத்து வரும் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • மஞ்சவாடி கணவாய் தருமபுரி மாவட்ட எல்லை வரை நான்கு வழி பாதை அமைக்க 170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மஞ்சவாடி கணவாய் முதல் மாவட்ட எல்லை முடியும் வரை உள்ள 2 வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக உயர்த்த வேண்டும் எனக் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக வாணியம்பாடி முதல் ஏ.பள்ளிப்பட்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நிறைவடைந்து தற்பொழுது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    பிறகு, ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரை மீதமுள்ள 18 கிலோமீட்டர் இரண்டுவழிச் சாலையை, நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்த வேண்டும். இதற்காக, மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதில், சேலம்- திருப்பத்தூர்- வாணியம்பாடி நான்குவழிச் சாலை NH179 தருமபுரி மாவட்டத்தில் உள்ள மீதமுள்ள 18 கிலோமீட்டர் ஏ.பள்ளிப்பட்டியிலிருந்து வெள்ளையப்பன் கோவில் மஞ்சவாடி கணவாய் தருமபுரி மாவட்ட எல்லை வரை நான்கு வழி பாதை அமைக்க 170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும்.

    இச்சாலையால் சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, அரூா், வாணியம்பாடி வழியாக சென்னை செல்பவர்களுக்கு பயண தூரம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சம்பந்தப்பட்ட கடை களுக்கு நோட்டீஸ் அனுப்ப ப்பட்டது.இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடைகளை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொ ண்டனர்.
    • ஓட்டல்கள் பேக்கரிகள் உள்பட 7 கடைகளை இடித்து அகற்றினார்கள். மேலும் இரண்டு கடைகளை இடிப்பதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. கடைகள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில்,

    ஜூன். 17-

    கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட் பகுதியில் நான்கு வழி சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை அடுத்து அந்த பகுதியில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இணைப்பு சாலை யில் ரவுண்டானா அமைக்கப்ப டுகிறது.இந்த ரவுண்டானா அப்டா மார்க்கெட்டில் முன்பகுதியில் அமைப்ப தற்கு கடைகள் இடையூறாக இருந்தது. இதையடுத்து அந்த கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சம்பந்தப்பட்ட கடை களுக்கு நோட்டீஸ் அனுப்ப ப்பட்டது.இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடைகளை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொ ண்டனர். இன்று காலை ஜேசிபி எந்திரம் உதவியு டன் அப்டா மார்க்கெட் முன் பகுதியில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டது.

    ஓட்டல்கள் பேக்கரிகள் உள்பட 7 கடைகளை இடித்து அகற்றினார்கள். மேலும் இரண்டு கடைகளை இடிப்பதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. கடைகள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×