search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே பாலம்"

    • ரூ.2100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன.
    • சாலை பணிகள் இருபுறமும் முடிந்த நிலையில் பாலப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், நவ.4-

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இரு வழி சாலை தற்பொழுது உள்ளது. இங்கு இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் திருவனந்த புரத்திற்கு சென்று வருவ தால் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து நான்கு வழி சாலை பணிகள் தொடங்கப்பட்டது. இத ற்காக ரூ.2100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. நிலம் கையகப்படு த்தும் பணி நடைபெற்றதை தொடர்ந்து சாலை அமை க்கும் பணி மேற்கொ ள்ளப்பட்டது. பல்வேறு இடங்களில் இந்த பணி துரிதமாக நடைபெற்று வந்த நிலையில் மணல் கட்டுப்பாடு காரணமாக பணி கிடப்பில் போடப்ப ட்டது.

    நான்கு வழி சாலை பணியை துரிதமாக முடிக்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. மத்திய மந்திரி யிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ண னும் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்தார். இந்த நிலை யில் சாலை பணியை மீண்டும் தொட ங்க நடவ டிக்கை எடுக்க ப்பட்டது. வேறு மாவட்ட த்திலிருந்து மணல் கொண்டு வந்து சாலை பணியை தொடங்க நட வடிக்கை மேற்கொண்ட னர். தற்பொழுது நான்கு வழி சாலை பணியில் ஒரு சில இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 64 இடங்களில் சிறிய பாலங்கள் அமைக்க வேண்டி யது உள்ளது. ஏற்கனவே நாகர்கோவில் அருகே ரெயில்வே மேம்பா லம் நான்கு வழிச்சாலையில் அமைக்கப்பட்டு உள்ளது. சாலை பணிகள் இருபுறமும் முடிந்த நிலையில் பாலப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சாலையையும், பாலத்தையும் இணை க்கும் வகையில் இருபுறமும் மணல்கள் நிரப்பப்ப டாத நிலை இருந்து வருகிறது. மணல் தட்டுப்பாடு காரண மாக பல மாதங்களாக மணல் நிரப்பப்ப டாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்த பாலத்தை யும், சாலையையும் இணைக்கும் வகை யில் இருபுறமும் மணல்கள் நிரப்பி விட்டால் வாகன போக்குவரத்து மேற்கொள்ளலாம். ஏற்க னவே பொற்றைய டியில் இருந்து புத்தேரி வரை பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளது. இந்த பாலம் மட்டுமே தற்பொழுது மணல் நிரப்பப்படாமல் உள்ளதால் அந்த வழியாக வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளது. அந்த பாலத்தின் இருபுறமும் மணல் நிரப்பி விட்டால் வாகன போக்குவரத்து தொடங்கி விடலாம். நாகர்கோ வில் நகருக்கு வரும் மக்கள் இந்த சாலை வழியாக வருவதற்கு வசதி யாக அமையும். எனவே இந்த பாலத்தின் இருபுறமும் மணல் நிரப்பும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நான்கு வழிச்சாலையையும், பால த்தையும் இணைக்கும் வகையில் மணல் நிரப்பு வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தடுப்புக்கற்கள் அமைக்க ப்பட்டு மணல்கள் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணி முழுமை பெறும் பட்சத்தில் அந்த வழியாக போக்கு வரத்து தொடங்கப்படும். மேலும் மற்ற இடங்களிலும் நான்கு வழி சாலை பணியை புனிதமாக முடிக்க அதிகா ரிகள் நடவடிக்கை மேற்கொ ண்டு வருகிறார்கள். பாலம் அமைக்க வேண்டிய இடங்க ளில் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை களும் எடுக்க ப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் நான்கு வழிசா லை பணியை முழுமை யாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இரட்டை ரெயில் பாதை பணி நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் மடை அடைக்கப் பட்டு மணல் நிரப்பப்பட் டுள்ளது.
    • வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ெரயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பார்வதிபுரம் பகுதியிலும் இரட்டை ெரயில் பாதை அமைப்பதற்கு மணல்கள் நிரப்பப்பட்டு தண்ட வாளங்கள் போடப்பட்டு வருகிறது.

    பார்வதிபுரம் ெரயில்வே மேம்பாலம் அருகில் தண்டவாளத்தின் அடியில் தண்ணீர் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு செல்வதற்கு மடை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இரட்டை ரெயில் பாதை பணி நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் மடை அடைக்கப் பட்டு மணல் நிரப்பப்பட் டுள்ளது.

    இதனால் மழை நேரங்க ளில் ராஜீவ் காந்தி நகர், பார்வதிபுரம் குடியிருப்பு, இலந்தையடி பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள், மேயர் மகேசிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மேயர் மகேஷ் இன்று காலை அந்த பகுதியை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக ெரயில்வே அதிகாரிகளுடன் பேசினார்.

    பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது

    ராஜீவ் காந்தி நகர், பார்வதிபுரம் குடியிருப்பு, இலந்தையடி பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரு கிறார்கள். இந்த பகுதியில் உள்ள பொதுப்பணித்து றைக்கு சொந்தமான குளங்களில் இருந்து வெளி யேறும் தண்ணீர் ெரயில்வே தண்டவா ளத்தின் கீழ் உள்ள மடை வழியாக அடுத்த பகுதிக்கு சென்றது. தற்பொழுது இரட்டை ரெயில்வே பாதை பணி நடைபெற்று வரும் நிலை யில் தண்டவாளத்திற்கு கீழ் மடை அமைக்கப்பட வில்லை. எனவே வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதிகாரி கள் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து ள்ளனர். நாகர்கோவில் நகரில் கழிவு நீர் ஒடைகளை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு புத்தன்அணை யில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது மழை பெய்து வரும் நிலையில் தண்ணீர் பிரச்ச னைக்கு தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், திமுக மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த் மற்றும் நிர்வாகிகள் வேல்முருகன், ஷேக் மீரான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கரூர் சேலம் இடையே, புதிய ெரயில்வே பாதை அமைக்கும் போது, மண்மங்கலம் - வாங்கல் இடையே வாகனங்கள் செல்ல வசதியாக, மாரிக்கவுண்டன் பாளையத்தில் பாலம் கட்டப்பட்டது.
    • ெரயில்வே பாலம் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும், மின் விளக்குகள் அமைக்கப் படவில்லை.

    கரூர் :

    கரூர் சேலம் இடையே, புதிய ெரயில்வே பாதை அமைக்கும் போது, மண்மங்கலம் - வாங்கல் இடையே வாகனங்கள் செல்ல வசதியாக, மாரிக்கவுண்டன் பாளையத்தில் பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலத்தின் வழியாக வேலாயுதம்பாளையம், மண்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், வாங்கல், நாமக்கல் மாவட்டம், மோகனூர், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    ஆனால், ெரயில்வே பாலம் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும், மின் விளக்குகள் அமைக்கப் படவில்லை. இதனால், இரவு நேரத்தில் இப்பாலம் இருளில் மூழ்கி கிடப்பதால் பொதுமக்கள், இருசக் கர வாகன ஓட்டிகள் இப்பாலத்தை கடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.

    எனவே, மாரிக்கவுண்டன்பாளையம் ெரயில்வே பாலத்தில், மின் விளக்குகள் அமைக்கபடுமா என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ×