search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் ரெயில்வே பாலம்-சாலையை இணைக்க மணல் நிரப்பும் பணி தீவிரம்
    X

    நாகர்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் ரெயில்வே பாலம்-சாலையை இணைக்க மணல் நிரப்பும் பணி தீவிரம்

    • ரூ.2100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன.
    • சாலை பணிகள் இருபுறமும் முடிந்த நிலையில் பாலப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், நவ.4-

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இரு வழி சாலை தற்பொழுது உள்ளது. இங்கு இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் திருவனந்த புரத்திற்கு சென்று வருவ தால் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து நான்கு வழி சாலை பணிகள் தொடங்கப்பட்டது. இத ற்காக ரூ.2100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. நிலம் கையகப்படு த்தும் பணி நடைபெற்றதை தொடர்ந்து சாலை அமை க்கும் பணி மேற்கொ ள்ளப்பட்டது. பல்வேறு இடங்களில் இந்த பணி துரிதமாக நடைபெற்று வந்த நிலையில் மணல் கட்டுப்பாடு காரணமாக பணி கிடப்பில் போடப்ப ட்டது.

    நான்கு வழி சாலை பணியை துரிதமாக முடிக்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. மத்திய மந்திரி யிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ண னும் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்தார். இந்த நிலை யில் சாலை பணியை மீண்டும் தொட ங்க நடவ டிக்கை எடுக்க ப்பட்டது. வேறு மாவட்ட த்திலிருந்து மணல் கொண்டு வந்து சாலை பணியை தொடங்க நட வடிக்கை மேற்கொண்ட னர். தற்பொழுது நான்கு வழி சாலை பணியில் ஒரு சில இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 64 இடங்களில் சிறிய பாலங்கள் அமைக்க வேண்டி யது உள்ளது. ஏற்கனவே நாகர்கோவில் அருகே ரெயில்வே மேம்பா லம் நான்கு வழிச்சாலையில் அமைக்கப்பட்டு உள்ளது. சாலை பணிகள் இருபுறமும் முடிந்த நிலையில் பாலப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சாலையையும், பாலத்தையும் இணை க்கும் வகையில் இருபுறமும் மணல்கள் நிரப்பப்ப டாத நிலை இருந்து வருகிறது. மணல் தட்டுப்பாடு காரண மாக பல மாதங்களாக மணல் நிரப்பப்ப டாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்த பாலத்தை யும், சாலையையும் இணைக்கும் வகை யில் இருபுறமும் மணல்கள் நிரப்பி விட்டால் வாகன போக்குவரத்து மேற்கொள்ளலாம். ஏற்க னவே பொற்றைய டியில் இருந்து புத்தேரி வரை பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளது. இந்த பாலம் மட்டுமே தற்பொழுது மணல் நிரப்பப்படாமல் உள்ளதால் அந்த வழியாக வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளது. அந்த பாலத்தின் இருபுறமும் மணல் நிரப்பி விட்டால் வாகன போக்குவரத்து தொடங்கி விடலாம். நாகர்கோ வில் நகருக்கு வரும் மக்கள் இந்த சாலை வழியாக வருவதற்கு வசதி யாக அமையும். எனவே இந்த பாலத்தின் இருபுறமும் மணல் நிரப்பும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நான்கு வழிச்சாலையையும், பால த்தையும் இணைக்கும் வகையில் மணல் நிரப்பு வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தடுப்புக்கற்கள் அமைக்க ப்பட்டு மணல்கள் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணி முழுமை பெறும் பட்சத்தில் அந்த வழியாக போக்கு வரத்து தொடங்கப்படும். மேலும் மற்ற இடங்களிலும் நான்கு வழி சாலை பணியை புனிதமாக முடிக்க அதிகா ரிகள் நடவடிக்கை மேற்கொ ண்டு வருகிறார்கள். பாலம் அமைக்க வேண்டிய இடங்க ளில் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை களும் எடுக்க ப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் நான்கு வழிசா லை பணியை முழுமை யாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×