search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒதுக்கீடு"

    • வனவிலங்குகளின் தொல்லை அதிகரிப்பு எதிரொலி
    • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுதிட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த தோட்டங்களில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகளின் தொல்லை அதிகரித்து ள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது.

    தொழிலாளர்கள் வசிக்கும் பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து கிடப்பதாலேயே வனவிலங்குகள் இருப்பது தெரிவதில்லை.

    எனவே தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என மக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்ைக விடுத்தனர். இதையடுத்து, அமுல்கந்த சாமி எம்.எல்.ஏ., மேற்படி இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பெரியகல்லார், அய்யர் பாடி, மாணிக்க என்.சி, லோயர்பாரளை, அய்யர்பாடி அந்தோணியார் கோவில், கக்கன் காலனி, கருமலை எஸ்டேட், வில்லோனி அப்பர் டிவிசன், கல்யாண பந்தல் மாரியம்மன் கோவில், ரொட்டிக்கடை பாறைமேடு உள்ளிட்ட 11 இடங்களில் சோலார் எல்இடி விளக்குகள் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 74 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனை அறிந்த தோட்டத் தொழிலாளர்கள் எம்.எல்.ஏ.வை அவரது அலு வலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, நகர அ.தி.மு.க செயலாளர் மயில் கணேசன், அவை தலைவர் சுடர் பாலு, செந்தில் பாலு, செல் கணேசன், சண்முகவேல், எஸ்.கே.ஸ்.பாலு, சீனிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ரூ. 47 லட்சத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெறுவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.13 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர னுக்கு வழக்கப்ப ட்டுள்ள அரசின் வாகனத்தி ன் சாவியை கலெக்டர் மகாபாரதி வழங்கி தொடங்கிவைத்தார். அப்போது நகராட்சி ஆணை யர் ஹேமலதா, துணை தலைவர் சுப்புராயன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், முழுமதி இமயவரம்பன், மேலாளர் லதா, வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து பழுதடைந்த மணிமண்டபத்தினை தமிழ்நாடு அரசின் உத்தரவு ப்படி, ரூ. 47லட்சத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெ றுவதை கலெக்டர் மகாபா ரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒவ்வொரு பணியையும் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் பணிக ளை தரமாகவும், விரைவாக வும் முடிக்க அறிவுறு த்தினார்.

    இதில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.13 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு முதலமை ச்சர் அரசாணை வெளியி ட்டுள்ளார். அதன்படி, பொது ப்பணி த்துறையி னரால் தளவாட பொருட்க ள் வாங்கும் பணிகள் நடைபெற்று கொண்டி ருக்கின்றது.

    இந்த ஆய்வின்போது பொது ப்பணித்துறை செயற்பொ றியாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு பணிகள்) பாலரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் ராமர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 64 புதிய பாலங்களும் கட்டப்படுகின்றன
    • நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ரூ.ஆயிரத்து 600 கோடி செலவானது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலை இரு வழிச்சாலையாக உள்ளது . இந்த சாலையில் தினமும் ஆறு வழி பாதையில் செல் லும் அளவிற்கு வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. விபத்துகளும் நடந்து வருகின்றன.

    இதையடுத்து கன்னியா குமரி-திருவனந்தபுரம் இடையே 4 வழிச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.2 ஆயிரத்து 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ரூ.ஆயிரத்து 600 கோடி செலவானது. மீதமுள்ள 500 கோடியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டது. குழித்துறையில் மிகப்பெரிய பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு இடங்களில் சிறிய பாலங்களும், நாகர்கோவில் அருகே ரெயில்வே பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே பாலம் அமைக்கப்பட்டாலும் அந்த பாலத்தின் இரு புறமும் மணல்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

    இந்த பகுதியில் மணல்கள் நிரப்பப்படாததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொற்றையடியில் இருந்து புத்தேரி குளத்தின் கரை வரை உள்ள 4 வழி சாலை பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த பாலப்பணி முற்றிலும் முடிவடையும் பட்சத்தில் இந்த வழியாக வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும். எனவே இந்த பாலத்தின் இருபுறமும் மணல்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழியாக வாகனங்கள் சென்றால் நாகர்கோவில் நகரில் போக்கு வரத்து நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது. அப்டா மார்க்கெட் மற்றும் திருவனந்தபுரத்திற்கு செல்லும் வாகனங்கள் கன்னியாகுமரியில் இருந்து இந்த புறவழிச்சாலை வழியாக சென்று விடலாம். தற்பொழுது இந்த சாலை பணியை பொருத்த மட்டில் மணல் தட்டுப்பாடு காரணமாக கடந்த 5 மாதங்களாக கிடப்பில் போடப் பட்டுள்ளது. மீண்டும் இந்த பணியை தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இதற்காக ரூ.1041 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து குளத்தின் மேல் பாலம் அமைக்கும் பணி உட்பட பல்வேறு இடங்களில் ராட்சத பாலங்கள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக புத்தேரி குளத்தில் மிகப்பெரிய பாலம் அமைக்கப்படுகிறது. 450 மீட்டர் நீளத்திற்கு சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்படுகிறது.

    இதே போல் தோட்டியோடு பகுதியில் 325 மீட்டர் நீளத்திற்கும் பொற்றையடி பகுதியில் 50 மீட்டர் நீளத்திற்கும் குளத்தில் பாலம் அமைக்கப்படுகிறது. வழுக்கம் பாறை பகுதியில் 4 வழிச்சா லையின் மேல் மேம்பாலம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொ ழுது ஒதுக்கப்பட் டுள்ள நிதியில் 25 இடங்களில் பெரிய பாலமும், 16 இடங் களில் சிறிய பாலமும், அதைவிட சிறிய பாலங்கள் என மொத்தம் 64 பாலங்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை இன்னும் ஒரிரு நாட்களில் தொடங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. 4 வழிச்சாலை பணியை 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த 4 வழிச்சாலை குமரி மாவட்டத்தின் முதுகெலும் பாக விளங்கும். போக்கு வரத்து நெருக்கடியும் குறையும். இந்த சாலை மொத்தம் 53.714 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. ஏற்கனவே 30 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகள் மேற்கொள்ள வேண்டியதுள்ளது. குளங்களில் மணல் நிரப்பாமல் இருக்கும் வகையில் பல்வேறு இடங்களில் குளத்தின் நடுவே பாலம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். பாலம் அமைக்கப்படும்போது குளத்தின் இருபுறமும் மணல்கள் நிரப்பிவிட்டு நடுவே பாலங்கள் அமைக்கப்படும்.

    அதன் பிறகு அந்த மணல்கள் அகற்றப்படும். மணல் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்பொழுது பக்கத்து மாவட்டங்களில் இருந்து மணல் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. பணிகளை இந்த மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிட்டு உள்ளோம். பணிகள் தொடங்கப்படும் போது முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்படும். 2 ஆண்டுகளுக்குள் பணி நிறைவு பெறும் என்றார்.

    • ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேைவக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பேரூராட்சி 9-வது வார்டில் கபடி போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதுகுளத்தூர் அருகே செல்லூர் கிராமத்தில் இமானுவேல் சேகரன் சிலை விரைவில் தனியார் இடத்தில் அமைக்கப்படும். கன்னிராஜபுரத்தில் காம ராஜர் சிலையும், கமுதி அருகே ராமசாமி பட்டியில் வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலையும் அமைக்கப்படும். முதுகுளத்தூரில் முத்துராமலிங்கதேவர் பெயரில் திருமண மண்டபம் கட்டப்படும்.

    ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு ரூ.2800 கோடியை முதல்- அமைச்சர் ஒதுக்கி கொ டுத்துள்ளார். இதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. பார்த்திபனூர், சாயல்குடி யில் புறவழிச்சா லைகள் அமைய உள்ளன. முதுகு ளத்தூர் தொகுதி முன்னேறி வரும் தொகுதியாக மாறி வருகிறது.

    தற்போது முதுகுளத்தூர் தொகுதியில் 19 மெகா வாட் மின்சாரம் செலவாகிறது. சாலைகளில் கார்கள் நிரம்பி உள்ளன.

    பரமக்குடியிலும் இமானுவேல் சேகரன் சிலை அமைக்க முருகேசன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்ய வேண்டும். நான் முதுகுளத்தூர் தொகுதிக்கு மட்டும் அமைச்சர் இல்லை. தமிழ்நாடு முழுவதற்கும் அமைச்சர்.

    மாவடட தேவைகளை முதலமைச்சரிடம் கூறி பெற்றுத் தருகிறேன். நமது மாவட்டத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய முதலமைச்சர் தயாராய் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் முருகேசன் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் ஷாஜஹான், கவுன்சிலர் பால்சாமி, தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கோவிந்தராஜ், பூபதி மணி, ஆறுமுகவேல், குலாம் முகைதீன், மணலூர் ராமர், வடமலை கிருஷ்ணாபுரம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 6 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது
    • கிருஷ்ணன்கோவிலுக்கு பைப்லைன் அமைக்கப்பட்டு தண்ணீர் வெள்ளோட்டம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. போதுமான அளவு தண்ணீர் இல்லாத தையடுத்து புதிய திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.

    ரூ.299 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. புத்தன் அணையில் இருந்து பைப் லைன் மூலமாக நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    தற்போது புத்தன் அணையில் இருந்து கிருஷ்ணன்கோவிலுக்கு பைப்லைன் அமைக்கப் பட்டு தண்ணீர் வெள்ளோட்டம் பணி நடந்தது. ஒரு சில இடங் கல் பைப்லைனில் நீர்க்க சிவு இருந்ததையடுத்து அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மேயர் மகேஷ், கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதை தொடர்ந்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை 3 மாத காலத்திற்குள் முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியுடன் தெங்கம்புதூர், ஆளூர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளுக்கும் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை வழங்க மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் கட்டமாக தெங்கம்புதூர் பகுதியில் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் மாநகராட்சிக் குட்பட்ட 50, 51, 52-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.34கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணன் கோவிலில் இருந்து தெங்கம்புதூருக்கு பைப் லைன் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக 6 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    3 வார்டுக்குட்பட்ட 4000 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். புத்தன் அணை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் போது பொதுமக்களுக்கு தங்குதடையின்றி தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் ஒரு நபருக்கு 135லிட்டர் தண்ணீர் வழங்க நடவ டிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    • தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டு ரூ.10.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • கடந்த பத்து வருடங்களில் இத்திட்டத்தில் பயன் பெற்றிருக்க கூடாது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் வாழ்க்கை தரத்தினை சீராக மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டு ரூ.10.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய தீவனம் பயிர் அபிவிருத்தி மற்றும் அதன் பயன்பாட்டு மேலாண்மை குறித்து கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 50 சதவீதம் மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் 60 எண்ணிக்கை சிறு, குறு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போருக்கு ரூ. 9.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தீவன விரயத்தை 30-40 சதவீதம் குறைக்கலாம். இத்திட்ட த்தின் கீழ் இரண்டு குதிரை திறன் கொண்ட மின்சா ரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படும்.

    இந்த திட்ட த்தில் பயன்பெற குறைந்த பட்சம் 2 கால்நடைகள் அல்லது 2 கால்நடை அலகுகள் மற்றும் 0.5 ஏக்கர் நிலத்தில் அதிக மகசூல் தரும் பசுந்தீவனம் வைத்திருக்க வேண்டும். கடந்த பத்து வருடங்களில் இத்திட்டத்தில் பயன் பெற்றிருக்க கூடாது. சிறு, குறு மகளிர், எஸ்.சி, எஸ்.டி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இதன் கீழ் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பசுந்தீவன புற்களை தோட்டங்களில் ஊடுபயிராக வளர்க்க ஏக்கருக்கு ரூ. 3000 வீதம் மானியம் வழங்க ரூ. 60,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விவசாயிகள் சொந்தமாக கால்நடைகளும் குறைந்த பட்சம் 0.50 ஏக்கர் தீவனம் ஊடுபயிராக பயிர் செய்ய இடமும் வைத்திருக்க வேண்டும். அதிக பட்சமாக ஒரு ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற சிறு, குறு, மகளிர், எஸ்.சி, எஸ்.டி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் பயன்பெறும் விவசாயிகள் முறையாக நீர் சேகரிப்பு மேலாண்மை செயல்படுத்த வேண்டும். அதிகமாக மகசூல் செய்யப்படும் தீவனங்களை ஊறுகாய் புல்லாக மாற்றி சேகரிக்கலாம். அதை அருகில் உள்ள விவசாயிகள் விற்பனை செய்யலாம். இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை நிலையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
    • 28 சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்

    கன்னியாகுமரி :

    சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட கிள்ளியூர் மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றி யங்க ளுக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பல சாலைகள் சீரமைத்து பல வருடங்கள் ஆகிய தாலும், புயல் மற்றும் பெரு கனமழை யினாலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது.

    எனவே கிள்ளியூர் மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த பல சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து நான் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் தற்போது கீழ்காணும் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய 28 சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 56 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த சாலை பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கி சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
    • அமைச்சர் மா.சுப்பிர மணியன், ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    கன்னியாகுமாரி:

    தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆறுதேசம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளி கள் சிகிச்சைக்கு வருகின்றனர். மாதந்தோறும் 5 முதல் 10 பிரசவம் நடைபெற்று வருகிறது. பிரசவித்த தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் நடைபெற்று வருகிறது.

    இங்குள்ள ஆய்வக பிரிவு, புற நோயாளிகள் பிரிவு மற்றும் குடும்ப நலப்பிரிவு கட்டிடம் போன்றவை பழுதடைந்து உள்ளதால் அவற்றை மாற்றி, புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டி மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை-குடும்ப நலத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் வழங்கினேன். தொடர்ந்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து குரல் கொடுத்தேன்.

    இதன் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன், ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், தேசிய சுகாதார திட்டம் சார்பில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை கட்டிடங்கள் அமைக் கப்படும் என்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகி யோருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் எனது சார்பிலும், தொகுதி மக்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

    மேலும் இந்த கட்டிட பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்பதனையும் தொகுதி மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • நுண்ணீர் பாசனம் அமைக்க 290 ஹெக்டருக்கு ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • பயிர் சாகுபடியில் நீர்ப்பற்றா க்குறை மிகப்பெ ரியபிரச்சினையாக உள்ளது.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வட்டா ரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க 290 ஹெக்டருக்கு ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கப்ப ட்டுள்ளது. இது குறித்து மடத்து க்குளம் வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:- தற்போதைய சூழலில் பயிர்சாகுபடியில் நீர்ப்பற்றா க்குறை மிகப்பெ ரியபிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு காணபிரச்சனைக்கு நுண்ணீர் பாசன திட்டம் சிறந்ததாகும்.சாதாரண முறையைக்காட்டிலும் 50 முதல் 65 சதவீதம் வரை நீர் சேமிக்கப்படுவதோடு பயிர் வளர்ச்சி, மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட பலன்கள் கிடை க்கிறது. மனித உழைப்பு 50 முதல் 75 சதவீதம் வரை மிச்சமாகிறது.

    மேலும் திரவ உரங்கள், நீரில் கரையக்கூடிய உரங்க ளை, பாசன நீரில் கலந்து நேரடியாக பயிர்களுக்கு வழங்க முடியும். நீரும், உரமும் வேர்ப்பகுதியில் பயிருக்கு கிடைப்பதால் பயிர் வளர்ச்சி நடவு முதல் அறுவடை வரை நன்கு அமைத்து விளைச்சல் அதிகரிக்கிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு ஒருஹெக்டருக்கு அதிகப்பட்சமாக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 855 ரூபாயும், இதர விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 530 ரூபாய் வழங்கப்படுகிறது. பயிர் இடைவெளிக்கேற்ப மானியத்தொகை வழங்க ப்படுகிறது.

    நுண்ணீர்ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா,அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு, ஆதார், வங்கி புத்தக நகல், புகைப்படம் - 2, ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, துங்காவி, தாந்தோணி, மைவாடி, கடத்தூர்,கணியூர், மெட்ராத்தி விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், கொமரலிங்கம், சங்கராமநல்லூர், வேடபட்டி, கொழுமம், சோழமாதேவி, அக்ரஹாரகண்ணா டிபுத்தூர், பாப்பான்குளம், சர்கார்கண்ணாடிபுத்தூர் விவசாயிகள்உதவி தோட்டகலை அலுவலர் நித்யராஜ் 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற இணையதளத்தில் விவசாயிகளே நேரடியாக விண்ணப்பித்து, சொட்டு நீர் பாசன விபரங்கள் மற்றும் மானிய விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்தார். 

    • காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.
    • உதவி செயற்பொறியாளர் (மதுரை) வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை தகுந்த தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்து தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் காரைக்குடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சிறு, குறு தொழிலாளர் நல சங்க கட்டிடத்தில் தொழில்துறை கூடுதல் செயலாளர் பல்லவி பல்தேவ், கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினார்.

    இதில் தொழில் அதிபர்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்ற விதத்தையும், விற்பனை விகித முறையையும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள படித்து முடித்த இளைஞர்கள் காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை பயன்படுத்தி, தொழிற் முனைவோர்களாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் பங்கேற்ற காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பல்வேறு வசதிகள் குறித்து தெரிவித்தனர்.

    இந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில்துறை கூடுதல் செயலாளர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

    சிட்கோ கிளை மேலாளர் கலாவதி, காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, உதவி செயற்பொறியாளர் (மதுரை) வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஹூப்ளியிலிருந்து தஞ்சாவூருக்கு சிறப்பு ரெயில் சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
    • மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரெயில் தடத்துக்கு நிகழாண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர்-ஹூப்ளி இடையே விரைவு ரெயில் சேவை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக இயக்கும் விதமாக ஹூப்ளியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்த ரெயில் தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் ஹூப்ளி நோக்கி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணிக்கு புறப்பட்டது.

    அப்போது, இந்த ரெயிலில் பயணித்த பயணிகளுக்கு எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. இனிப்புகள் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூரிலிருந்து மேற்கு நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கு போதுமான அளவுக்கு ரெயில் சேவை இல்லை என்கிற குறை இருந்து வந்தது. அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என ரெயில்வே வாரியத்திடம் நீண்ட காலமாக கேட்டு வருகிறோம்.

    இந்த கோடை கால நெருக்கடியைக் குறைப்பதற்காக தற்காலிக சிறப்பு சேவையாக 5 முறை தஞ்சாவூரிலிருந்து ஹூப்ளிக்கும், ஹூப்ளியிலிருந்து தஞ்சாவூருக்கும் சிறப்பு ரெயில் சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த ரயில் சேலம், பெங்களூரு வழியாக இயக்கப்படுகிறது. இதற்கு மக்களிடம் உள்ள வரவேற்பைப் பொருத்து, இச்சேவையை நிரந்தரமாக்குவதற்கு ரெயில்வே அமைச்சரை சந்தித்து முயற்சி செய்வேன்.

    தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு இப்போது உழவன் விரைவு ரயில் மட்டுமே புறப்பட்டுச் செல்கிறது. வைகை, பல்லவன் போன்று சோழன் விரைவு ரயிலையும் இன்டர்சிட்டி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறோம்.

    தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை, மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரெயில் தடத்துக்கு நிகழாண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்துதலுக்கு அளவீடு செய்யப்பட்ட இடங்களில் புதிய குடியிருப்புகள் உருவாகிவிட்டன. பொதுமக்களின் கருத்தை அறிந்து புதிய தடம் போடுவதற்கு வேலை நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார், நிலைய மேலாளர் ஜாகீர் ஹூசைன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    • போலீசாருக்கான வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு செய்யும் பணி இணையதளத்தின் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்க ப்பட்டுள்ளது

    தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 105 ஏட்டுகள், 51 முதல் நிலை போலீசார் மற்றும் 82 போலீசார் என மொத்தம் 238 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாளான வரும் 27-ந் தேதி கிழக்கு தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பணி யில் ஈடுபடும் போலீசாருக்கான வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு செய்யும் பணியினை இணைய தளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த பணியை தொகுதி காவல் பார்வையாளர் சுரேஷ்குமார் சதீவ், மாவட்ட வருவாய் சந்தோஷினி சந்திரா, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தின் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.

    மேலும் 238 போலீசாருக்கு கிழக்கு சட்டமன்ற தொகுதி களில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு செய்யும் பணியினை இந்தியதேர்தல் ஆணையத்தின் இணை யதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது கணேஷ், தாசில்தார் (தேர்தல்) சிவகாமி, கணினி நிரலாளர் வெங்கடேஷ் உள்படபலர் கலந்து கொண்டனர். 

    ×