search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7.5 percent"

    • நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 20 மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
    • அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நாமக்கல்:

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு இடம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நடப்பாண்டில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 20 மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்கள் படித்த பள்ளி மற்றும் பெயர் விவரம் வருமாறு:-

    புதுச்சத்திரம் அரசு பள்ளி மாணவர் முகேஷ், ராசிபுரம் அண்ணா சாலை அரசு பள்ளி மாணவர் தரண்ராஜ், மாணவி ரம்யா ஸ்ரீ, பள்ளிப்பாளையம் அரசு மகளிர் பள்ளி மாணவி ரோகிணி தங்கம், பாச்சல் அரசு பள்ளி மாணவி பூமிகா, வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நவீன் குமார், கமலகாந்த், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்தி, கொல்லிமலை மாதிரி பள்ளி மாணவர் வெற்றி முருகன், ஆர். புதுப்பாளையம் அரசு பள்ளி மாணவர் ஜெயபாரதி, முத்துக்காப்பட்டி அரசு பள்ளி மாணவர் சுந்தரமூர்த்தி, சேந்தமங்கலம் அரசு மகளிர் பள்ளி மாணவி சுந்தரி, பாண்டமங்கலம் அரசு மகளிர் பள்ளி மாணவி வேத ஸ்ரீ, வளையபட்டி அரசு பள்ளி மாணவி சினேகா, திருச்செங்கோடு அரசு ஆண்கள் பள்ளி மாணவர் நாகேஸ்வரன், வேலகவுண்டம்பட்டி அரசு பள்ளி மாணவி சபித்ரா, வெண்ணந்தூர் மற்றும் எருமப்பட்டி அரசு பள்ளி மாணவிகள் கோமதி, நித்தியா ஸ்ரீ, வெண்ணந்தூர் அரசு பள்ளி மாணவர் கவின் கண்ணா, வலையபட்டி அரசு பள்ளி மாணவி திரிஷா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 5 பழங்குடியினா் நலப்பள்ளிகள் என மொத்தம் 94 பள்ளிகளைச் சோ்ந்த 589 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.
    • 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில், 88 அரசு மேல்நிலைப்பள்ளி, ஒரு ஆதிதிராவிட நலத்துறை பள்ளி, 5 பழங்குடியினா் நலப்பள்ளிகள் என மொத்தம் 94 பள்ளிகளைச் சோ்ந்த 589 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

    இவா்களில் தோ்ச்சி பெற்றவா்கள் 300 மதிப்பெண்களுக்கு மேல் ஒருவா், 201-299 வரையில் 10 போ், 101-200 வரையில் 128 போ், 93-100 வரையில் 26 போ், 92-க்கு மேல் 424 போ் 102 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. 691 மாணவ, மாணவிகளில் 589 போ் தோ்வு எழுதியதில் 165 மாணவா்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனா்.

    திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் டி.நாகேஷ்வரன் 373 மதிப்பெண்களுடன் முதலிடம், நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் டி.சரண் 280 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம், வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் ஆா்.சரண்விஷ்வா 260 மதிப்பெண்களுடன் 3-ம் இடம், வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் வி.பி.விஜய் 228, திம்மநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் ஏ.அஜித்குமாா் 221 மதிப்பெண்களுடன் 4,5-ம் இடங்களை பெற்றுள்ளனா். இவா்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு 51 போ் தோ்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 165 பேராக அதிகரித்துள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

    ×