search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை"

    • 2 வீடுகளில் புகுந்து 19 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டங்குளம் ரோடு விழுப்பனூரில் உள்ள ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது45). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 15½ பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

    இந்த நிலையில் வீடு திரும்பிய விஜயகுமார் கதவு உடைக்கப்பட்டு நகை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு கொள்ளை

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணா மலையை சேர்ந்தவர் மாரீஸ்வரி(36). சம்பவத் தன்று இவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 3½ பவுன் நகை திருடு போனது. இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 3-ந்தேதி 80 சவரன் நகையுடன் ஆர்த்தி மாயமானார்.
    • தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெரு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் வயது 27 சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவருடைய மகள் ஆர்த்தி வயது 22 என்பவருக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள ஏ.ஜி சர்ச்சில் திருமணம் நடைபெற்றது, திருமணத்தின் போது 80 சவரன் நகை போட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த 3-ந்தேதி 80 சவரன் நகையுடன் ஆர்த்தி மாயமானார்.

    இது தொடர்பாக தாம்பரம் போலீசில் விக்னேஷ் புகார் செய்தார். இந்நிலையில் ஆர்த்தி தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவர் விக்னேஷ் உடன் வாழ பிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று பெருந்தொழுவு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • மோகனப்பிரியா ஸ்கூட்டியில் மணியம்பாளையத்திலுள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பெருந்தொழுவு கரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மோகனப்பிரியா (வயது 28). இவர்களுக்கு ரித்விக் என்ற 4 வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி மோகனப்பிரியா தனது மகனுடன் ஸ்கூட்டியில் மணியம்பாளையத்திலுள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் மோகனப்பிரியாவை கீழே தள்ளியுள்ளனர்.

    இதில் வண்டியில் இருந்து மோகனப்பிரியா மற்றும் ரித்விக் ஆகியோக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த மர்ம நபர்கள் மோகனப்பிரியாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மோகனப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் அவினாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பெருந்தொழுவு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மோகனப்பிரியாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்ததில் அவர்கள் திருவாரூரை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ஆகாஷ் (24 ), அதே ஊரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் முத்துப்பாண்டி (20) என்பதும் தெரிய வந்தது.

    மேலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் மாதவன் (37 ) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 29-ந் தேதி 12 மணியளவில் முந்திரி தோப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • தனது மகள் பிரியா 15 பவுன் நகையுடன் காணாமல் போனதாக கூறியுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேலி ருப்பு தெற்கு தெருவை சேர்ந்த வர் ஞானப்பிரகாசம் மகள் பிரியா (வயது 25). இவர் கடந்த 3 வருடங்க ளுக்கு முன்பு கடலூர் பெண்கள் கல்லூரில் படித்தார். பின்னர் வீட்டிலிருந்து முந்திரி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 29-ந் தேதி 12 மணியளவில் முந்திரி தோப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இவரது தந்தை ஞானபிரகாசம் காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில், தனது மகள் பிரியா 15 பவுன் நகையுடன் காணாமல் போனதாக கூறி யுள்ளார். இது குறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து நகையுடன் காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா.
    • வெண்ணிலாவின் மருமகன் வீரமுத்து மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா. இவரது கணவர் ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மகள், மருமகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இன்று காலை வெண்ணிலாவின் மருமகன் வீரமுத்து மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணி மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வீரமுத்து ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்
    • இரவில் குடும்பத்தோடு விவசாய நிலத்தில் உள்ள வீட்டிலும் வசிப்பது வழக்கம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52 )விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஊருக்குள் ஒரு வீடும், விவசாய நிலத்தில் ஒரு வீடும் உள்ளது.பகலில் ஊருக்குள் இருக்கும் வீட்டிலும், இரவில் குடும்பத்தோடு விவசாய நிலத்தில் உள்ள வீட்டிலும் வசிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வழக்கம்போல் தூங்கிவிட்டு காலை மீண்டும் ஊருக்குள் உள்ள வீட்டில் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 1 லட்சத்து 22 ஆயிரம் பணமும் அைர பவுன் நகையும், வெள்ளி பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முருகன் வீட்டுக்கு அருகில் உள்ள மேலும் 3 வீடுகளிலும் திருட்டு போய் உள்ளதாக கூறப்படுகிறது.

    • வங்கியில் இருந்து எடுத்து வந்ததை கண்காணித்து கைவரிசை காட்டிய கும்பல்
    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில், செப்.20-

    வெள்ளிச்சந்தை அருகே உள்ள பேயோடு சாந்தபுரத்தை சேர்ந்தவர் பெஞ்சமின். இவரது மனைவி மேரி குளோபல் (வயது 72). இவர் நேற்று பேயோடு சந்திப்பில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த தனது நகையை வாங்க சென்றார். அங்கு 15 பவுன் நகையை வாங்கி கை பையில் வைத்துக்கொண்டு நாகர்கோவிலுக்கு புதுத்துணி வாங்க அரசு பஸ்சில் வந்தார்.

    அண்ணா பஸ் நிலையத்தில் இறங்கிய மேரி குளோபல் செம்மாங்குடி ரோட்டில் உள்ள கடை ஒன்றில் துணி வாங்க சென்றார். அங்கு வைத்து தனது கை பையை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த 15 பவுன் நகையை காணவில்லை. அதோடு ரூ.15 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது.

    இதனால் திகைத்து போன அவர் உடனடியாக பஸ் நிலையத்துக்கும், அங்கிருந்து தான் நடந்து வந்த பாதையிலும் சென்று நகையையும், பணத்தையும் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. பஸ்சில் வந்த போது தனது நகையையும், பணத்தையும் யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் மேரி குளோபல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வங்கியில் இருந்து மேரி குளோபல் நகை வாங்கி வந்ததை நோட்டமிட்ட மர்ம நபர் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீ சார் சந்தேகிக்கி றார்கள். இதன் காரணமாக வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீ சார் ஆய்வு செய்து வருகி றார்கள். அண்ணா பஸ் நிலையத்தில் இதுபோன்ற நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    ஓடும் பஸ்சில் நகை பறிக்கும் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை யாக இருந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    அதே சமயம் நகை திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கின்றன. வெளியூர்களில் இருந்து வரும் கும்பல் நேரடியாக நகை திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

    • சங்கரவடிவு களக்காடு அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கினார்.
    • சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பெண்களை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஊச்சிகுளத்தை சேர்ந்தவர் சங்கரவடிவு (வயது 75). இவர் ஊச்சிகுளத்தில் இருந்து களக்காடு வந்த பஸ்சில் ஏறி, களக்காடு அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அவர் அணிந்திருந்த 2½ பவுன் எடையுள்ள தங்க செயினை மர்ம நபர்கள் பறித்தனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். இதைக்கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த மீனாட்சி என்ற பொண்ணுத்தாய் (30), தேவி (21), மீனா (25) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து சங்கர வடிவின் நகையை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23). இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
    • இந்த நிலையில் கந்தசாமி குடும்பத்தினர் வெளியே சென்ற சிறிது நேரத்தில் 2 மர்ம நபர்கள் காரில் வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம், குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (54). இவர் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார்.

    திருமண நிச்சயம்

    இவரது மனைவி கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23). இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடக்க இருப்பதால் மணமக்களின் வீட்டார் குடும்பம் சகிதமாக நேற்று காலை திருமணத்திற்கு தேவையான துணிமணிகள் எடுக்க ஈரோட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர்.

    காரில் வந்த மர்மநபர்கள்

    இந்த நிலையில் கந்தசாமி குடும்பத்தினர் வெளியே சென்ற சிறிது நேரத்தில் 2 மர்ம நபர்கள் காரில் வந்தனர். தெருவின் முன்பகுதியிலேயே காரை நிறுத்திவிட்டு கந்தசாமியின் வீட்டிற்கு வந்தனர்.

    அங்கு தனியாக இருந்த கந்தசாமியின் தாய் அருக்காணி (80) தோட்டத்திற்கு செல்வதற்கு தயாராக வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் மட்டும் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். வீட்டு வேலைக்காக அண்ணன் வரச் சொன்னார் என மூதாட்டியிடம் தெரி வித்துள்ளார். வீட்டில் யாரும் இல்லை. அனைவரும் துணி எடுக்க சென்றுவிட்டனர். நாளைக்கு வாருங்கள் என மூதாட்டி கூறியுள்ளார்.

    மூதாட்டியிடம் ஒருவர் பேசிக் கொண்டிருந்த இந்த வேளையில் மற்றொரு மர்மநபர் வீட்டின் அருகே சென்று முன்புற கதவை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனிடையே மூதாட்டி அந்த மர்ம நபரிடம் பேசிவிட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார்.

    நகை, பணம் கொள்ளை

    இதையடுத்து மர்ம நபர் வீட்டின் முன்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் வைத்திருந்த சாவியை எடுத்து லாக்கரை திறந்து நிஷாந்தியின் திருமணத்திற்கு சீர்வரிசை கொடுப்பதற்காக வைத்திருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து திருடிக் கொண்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மூதாட்டி அருக்காணி தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அருகில் உள்ள வர்களிடமும், தனது மகன் கந்தசாமிக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் வீட்டிற்கு வந்த கந்தசாமி பீரோவை திறந்து பார்த்த போது அதிலிருந்த மொத்த பணம், நகைகள் கொள்ளைபோயிருந்தது தெரியவந்தது.

    கைரேகை நிபுணர்கள்

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு கந்தசாமி உடனடி யாக தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் அங்கு தீவிர விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கண்காணிப்பு கேமிரா ஆய்வு

    இதையடுத்து பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ முரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பரமத்திவேலூர் முதல் குப்பிச்சிபாளையம், மோகனூர் வரை உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். திருட்டு நடந்த குறிப்பிட்ட நேரத்தில் அந்த வழியாக சென்ற வாகனங்கள், கந்தசாமி வீட்டிற்கு சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமசாமி. விவசாயி. இவருடைய மனைவி அத்தாயம்மாள் (வயது 65). கணவன் - மனைவி இருவரும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தங்களின் தோட்டத்தில் வீடு கட்டி தனியே வசித்து வந்தனர்.
    • அதிகாலை வீட்டின் முன்பு படுத்திருந்த அத்தாயம்மாளை கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் மர்ம நபர்கள் கொலை செய்தனர்.

    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஏழுபரணைகாடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவருடைய மனைவி அத்தாயம்மாள் (வயது 65). கணவன் - மனைவி இருவரும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தங்களின் தோட்டத்தில் வீடு கட்டி தனியே வசித்து வந்தனர்.

    கொலை

    கடந்த 7-ந்தேதி அதிகாலை வீட்டின் முன்பு படுத்திருந்த அத்தாயம்மாளை கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் மர்ம நபர்கள் கொலை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடும், வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.1.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த கொடூர கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு, மர்ம கும்பலை விரைந்து பிடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் அத்தாயம்மாள் கணவர் ராமசாமி மற்றும் அக்கம், பக்கத்தில் குடியிருக்கும் மக்களிடம் இது கொலை பற்றி விசாரணை நடத்தினார்.

    50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

    இந்த கொலை குறித்து துப்பு துலக்க மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மரிய முத்து (மேட்டூர்), ராஜா (சங்ககிரி), சங்கீதா (ஓமலூர்), ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மேட்டூர் சுப்பிரமணி, கொளத்தூர் தேவராஜ், மேச்சேரி சண்முகம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கொலையை யார் செய்தார்கள்? என இதுவரையிலும் தெரியாமல் உள்ளது. இதனால் ஏழுபரணைகாடு பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள், மேட்டூர், கொளத்தூர் பகுதிகளில் ெகாலை, கொள்ளையில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள், காட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள், ராமசாமிக்கு சொந்தமான ேதாட்டத்தில் வேலை செய்பவர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொலை நடந்த இடத்தில் அருகே உள்ள சாலைகளில் சென்று வந்த வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சொத்து தகராறு

    இதனிடையே உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது மகன் மற்றும் மகளுக்கு சொத்தை பிரித்துக் கொடுப்பதில் அத்தாயம்மாளுக்கும், அவருடைய கணவர் ராமசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிய வந்துள்ளது.

    இதனால் இந்த கொலையில் அவர்க ளுடைய உறவினர்கள் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்ற கோணத்திலும் இந்த கொலைக்கு கூலிப்படைக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சைபர்கிரைம் உதவியையும் தனிப்படை போலீசார் நாடி உள்ளனர். செல்போனில் பதிவான அழைப்புகளை வைத்து சைபர் கிரைம் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    உளவுப்பிரிவு

    மேலும் எஸ்.பி.சி.ஐ.டி., ஓ.ஐ.சி.யூ, போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு உள்ளிட்ட உளவு பிரிவு போலீசாரும் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு வயதான தம்பதியிடம் பணம் இருப்பதை தெரிந்து யாராவது அவர்களிடம் உள்ள பணத்தை கொள்ளை யடித்து செல்லும் நோக்கத்தில் கொலையை செய்துள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • அத்தாயம்மாள் (65). இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
    • ராமசாமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அத்தாயம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே ஏழு பரனைகாடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (70). விவசாயி.

    இவருடைய மனைவி அத்தாயம்மாள் (65). இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    கழுத்து அறுத்து கொலை

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமசாமி வீட்டுக்கு அருகே உள்ள சாலை கொட்டகையில் படுத்து தூங்கினார். அத்தா யம்மாள் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கினார். நேற்று காலை ராமசாமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அத்தாயம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    நகை, பணம் கொள்ளை

    மேலும் அத்தாயம்மாள் கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த 10 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோவை மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கீதா, சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் கொளத்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தினமும் இரவு அத்தாயம்மாள் வீட்டில் தனியாக தூங்கு வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை கொலை செய்து பணம், நகை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.

    3 தனிப்படைகள்

    இந்த சம்பவம் தொடர்பாக மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப் பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலை யாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்தார்.
    • விலை மதிக்க முடியாத பொருட்கள் கிடந்தாலும் போலீசிடம்ன ஒப்படைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சிராஜ்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 45).

    இவர் தான் அடகு வைத்திருந்த 42 கிராம் (5 பவுன் ) நகைகளை மீட்டு பாக்கெட்டில் வைத்தார்.

    பின்னர் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு பாக்கெட்டை பார்த்தபோது நகைகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தார்.

    அப்போது தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த மெக்கானிக் காதர் (45) என்பவர் கீழே கிடந்த நகையை எடுத்தார்.

    இது யாருடைய நகை என விசாரித்தார்.

    அந்த நேரத்தில் அங்கு வந்த பிரபாகர் இது என்னுடைய நகை எனக் கூறினார்.

    இருந்தாலும் நான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விடுகிறேன்.

    நீங்கள் உரிய ஆவணங்களை காண்பித்து நகைகளைப் பெற்றுச் செல்லுங்கள் என காதர் கூறினார்.

    அதன் பேரில் காதர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்தார்.

    பிரபாகர் உரிய ஆவணங்களை காண்பித்தார்.

    தொடர்ந்து காதர் முன்னிலையில் பிரபாகரிடம் போலீசார் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்து கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினர்.

    கீழே கிடந்த நகையை பத்திரமாக எடுத்து அதனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மெக்கானிக் காதருக்கு சால்வை அணிவித்து போலீசார் பாராட்டினர்.

    இது குறித்து காதர் கூறும்போது, அடுத்தவர்கள் பொருட்களுக்கு நாம் ஆசைப்படக்கூடாது.

    கீழே நகை, பணம் என எந்த விலை மதிக்க முடியாத பொருட்கள் கிடந்தாலும் உடனடியாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    நேர்மையாக இருக்க வேண்டும்.

    அப்படி இருந்தாலே மனதிற்கு மன நிம்மதிதான் என்றார்.

    காத்ரின் இந்த மனித நேயமிக்க செயலை போலீசார் மட்டுமின்றி அனைவரும் மனதார பாராட்டினர்.

    ×