search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே 15 பவுன் நகையுடன் இளம் பெண் மாயம்:போலீஸ் தீவிர விசாரணை
    X

    பண்ருட்டி அருகே 15 பவுன் நகையுடன் இளம் பெண் மாயம்:போலீஸ் தீவிர விசாரணை

    • கடந்த 29-ந் தேதி 12 மணியளவில் முந்திரி தோப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • தனது மகள் பிரியா 15 பவுன் நகையுடன் காணாமல் போனதாக கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேலி ருப்பு தெற்கு தெருவை சேர்ந்த வர் ஞானப்பிரகாசம் மகள் பிரியா (வயது 25). இவர் கடந்த 3 வருடங்க ளுக்கு முன்பு கடலூர் பெண்கள் கல்லூரில் படித்தார். பின்னர் வீட்டிலிருந்து முந்திரி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 29-ந் தேதி 12 மணியளவில் முந்திரி தோப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இவரது தந்தை ஞானபிரகாசம் காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில், தனது மகள் பிரியா 15 பவுன் நகையுடன் காணாமல் போனதாக கூறி யுள்ளார். இது குறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து நகையுடன் காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×