என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கீழே கிடந்த 5 பவுன் நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
- தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்தார்.
- விலை மதிக்க முடியாத பொருட்கள் கிடந்தாலும் போலீசிடம்ன ஒப்படைக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை சிராஜ்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 45).
இவர் தான் அடகு வைத்திருந்த 42 கிராம் (5 பவுன் ) நகைகளை மீட்டு பாக்கெட்டில் வைத்தார்.
பின்னர் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு பாக்கெட்டை பார்த்தபோது நகைகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தார்.
அப்போது தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த மெக்கானிக் காதர் (45) என்பவர் கீழே கிடந்த நகையை எடுத்தார்.
இது யாருடைய நகை என விசாரித்தார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த பிரபாகர் இது என்னுடைய நகை எனக் கூறினார்.
இருந்தாலும் நான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விடுகிறேன்.
நீங்கள் உரிய ஆவணங்களை காண்பித்து நகைகளைப் பெற்றுச் செல்லுங்கள் என காதர் கூறினார்.
அதன் பேரில் காதர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்தார்.
பிரபாகர் உரிய ஆவணங்களை காண்பித்தார்.
தொடர்ந்து காதர் முன்னிலையில் பிரபாகரிடம் போலீசார் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்து கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினர்.
கீழே கிடந்த நகையை பத்திரமாக எடுத்து அதனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மெக்கானிக் காதருக்கு சால்வை அணிவித்து போலீசார் பாராட்டினர்.
இது குறித்து காதர் கூறும்போது, அடுத்தவர்கள் பொருட்களுக்கு நாம் ஆசைப்படக்கூடாது.
கீழே நகை, பணம் என எந்த விலை மதிக்க முடியாத பொருட்கள் கிடந்தாலும் உடனடியாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
நேர்மையாக இருக்க வேண்டும்.
அப்படி இருந்தாலே மனதிற்கு மன நிம்மதிதான் என்றார்.
காத்ரின் இந்த மனித நேயமிக்க செயலை போலீசார் மட்டுமின்றி அனைவரும் மனதார பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்