என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் துணிகரம் - ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 15 பவுன் நகை-பணம் அபேஸ்
    X

    நாகர்கோவிலில் துணிகரம் - ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 15 பவுன் நகை-பணம் அபேஸ்

    • வங்கியில் இருந்து எடுத்து வந்ததை கண்காணித்து கைவரிசை காட்டிய கும்பல்
    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில், செப்.20-

    வெள்ளிச்சந்தை அருகே உள்ள பேயோடு சாந்தபுரத்தை சேர்ந்தவர் பெஞ்சமின். இவரது மனைவி மேரி குளோபல் (வயது 72). இவர் நேற்று பேயோடு சந்திப்பில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த தனது நகையை வாங்க சென்றார். அங்கு 15 பவுன் நகையை வாங்கி கை பையில் வைத்துக்கொண்டு நாகர்கோவிலுக்கு புதுத்துணி வாங்க அரசு பஸ்சில் வந்தார்.

    அண்ணா பஸ் நிலையத்தில் இறங்கிய மேரி குளோபல் செம்மாங்குடி ரோட்டில் உள்ள கடை ஒன்றில் துணி வாங்க சென்றார். அங்கு வைத்து தனது கை பையை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த 15 பவுன் நகையை காணவில்லை. அதோடு ரூ.15 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது.

    இதனால் திகைத்து போன அவர் உடனடியாக பஸ் நிலையத்துக்கும், அங்கிருந்து தான் நடந்து வந்த பாதையிலும் சென்று நகையையும், பணத்தையும் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. பஸ்சில் வந்த போது தனது நகையையும், பணத்தையும் யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் மேரி குளோபல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வங்கியில் இருந்து மேரி குளோபல் நகை வாங்கி வந்ததை நோட்டமிட்ட மர்ம நபர் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீ சார் சந்தேகிக்கி றார்கள். இதன் காரணமாக வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீ சார் ஆய்வு செய்து வருகி றார்கள். அண்ணா பஸ் நிலையத்தில் இதுபோன்ற நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    ஓடும் பஸ்சில் நகை பறிக்கும் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை யாக இருந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    அதே சமயம் நகை திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கின்றன. வெளியூர்களில் இருந்து வரும் கும்பல் நேரடியாக நகை திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×