search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறித்த 3 பேர் சிறையில் அடைப்பு
    X

    கைது செய்யப்பட்ட ஆகாஷ், முத்துப்பாண்டி, மாதவன்.

    பல்லடம் அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறித்த 3 பேர் சிறையில் அடைப்பு

    • நேற்று பெருந்தொழுவு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • மோகனப்பிரியா ஸ்கூட்டியில் மணியம்பாளையத்திலுள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பெருந்தொழுவு கரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மோகனப்பிரியா (வயது 28). இவர்களுக்கு ரித்விக் என்ற 4 வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி மோகனப்பிரியா தனது மகனுடன் ஸ்கூட்டியில் மணியம்பாளையத்திலுள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் மோகனப்பிரியாவை கீழே தள்ளியுள்ளனர்.

    இதில் வண்டியில் இருந்து மோகனப்பிரியா மற்றும் ரித்விக் ஆகியோக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த மர்ம நபர்கள் மோகனப்பிரியாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மோகனப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் அவினாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பெருந்தொழுவு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மோகனப்பிரியாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்ததில் அவர்கள் திருவாரூரை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ஆகாஷ் (24 ), அதே ஊரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் முத்துப்பாண்டி (20) என்பதும் தெரிய வந்தது.

    மேலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் மாதவன் (37 ) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×