search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகராட்சி"

    • ஓராண்டில் ரூ.12 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பாரி ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியில் தி.மு.க. சேர்மனாக மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து கடந்த ஓராண்டில் மட்டும் அனைத்து வார்டுகளுக்கும் ரூ.12 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளும், மக்களின் அத்தியாவசிய அடிப்படை சுகாதாரம் மற்றும் குடிநீர் பணிகள், கல்வி நிதி மற்றும் குடிநீர் பொது நிதியிலிருந்து ரூ.6 கோடியே 57 லட்சம் மதிப்பிலான பணிகள் என மொத்தம் ரூ.19 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்திற்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நகராட்சியின் சாதனைகளான 100 ஆண்டு பேசும் ஓராண்டு சாதனை, திராவிட மாடல் நல்லாட்சி, இதற்கு கடையநல்லூரே சாட்சி! பாகுபாடில்லாத வளர்ச்சிப்பணி, இதுவே தமிழின தலைவர் கற்றுத்தந்த ஆட்சிப்பணி கடையநல்லூர் நகராட்சி என்று அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை கடையநல்லூரில் பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், தினசரி மார்க்கெட், அரசு மருத்துவமனை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நகராட்சி சேர்மன் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பாரி ஜான், துணைத்தலைவர் ராசையா, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா, மேலாளர் சண்முகவேல், நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், கவுன்சிலர்கள் முருகன், அக்பர்அலி, அப்துல் வஹாப், மாலதி, தனலட்சுமி, மாரி, முகைதீன் கனி, திவான் மைதீன், ராமகிருஷ்ணன், தங்கராஜ் உட்பட ஏராளமான கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

    • பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் வருகிறது.
    • 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் -1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் - 1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன. இவற்றின் மூலம் பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் வருகிறது. இந்த நிலையில்,நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந் தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.

    அதன்படி இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:- பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் - 1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன. இந்த நிலையில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந்தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.

    இதன்படி நகராட்சி அலுவலக வரி வசூல் மையங்களில் பொதுமக்கள் தங்களது சொத்துவரி, குடிநீர் கட்டணம், உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருகின்றனர். இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய நேரத்தில் வரியை செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து நகராட்சி தலைவரின் அறிவுறுத்தலின் படி பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.மேலும் வரி இனங்களை செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TN URBAN ESEVAI என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும். அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தொடங்கப்பட்டு சுமார் 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 1½ லட்சத்தை கடந்துள்ளது. இதனால் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் அமைய போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் தாராபுரம் நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.

    அதனை ஏற்று நேற்று சட்டசபை மானிய கோரிக்கையின் போது தாராபுரம் நகராட்சி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலக்குழு தலைவரும், தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் ஆகியோருக்கு தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகர செயலாளர் டி.எஸ்.முருகானந்தம், நகராட்சி கவுன்சிலர்கள், தாராபுரம் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
    • 30 ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது காளை மாட்டுச்சந்தை விரைவில் செயல்பட உள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நகர்மன்றத்தலைவர் சூரியபிரகாஷ் பேசுகையில் "காங்கயம் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். காங்கயம் நகரில் 30 ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது காளை மாட்டுச்சந்தை விரைவில் செயல்பட உள்ளது. இதற்காக காங்கயம் அருகே தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நகராட்சி சார்பில் மாட்டு சந்தை செயல்படுத்தப்படும்.

    காங்கயம் நகராட்சியில் 2022-2023 ஆண்டுக்குரிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி ஆகிய அனைத்து வரியினங்களும் 100 சதவீதம் வசூல் செய்து, தமிழ்நாட்டில் முதல் நிலை நகராட்சியாக காங்கயம் நகராட்சி சாதனை படைத்துள்ளது.வரி வசூல் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நகராட்சி ஊழியர்கள் மற்றும் காங்கயம் நகரப்பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.கூட்டத்தில் குடிநீர்குழாய் பழுது நீக்குதல், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட 73 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • விழிப்புணர்வு கூட்டம் நகராட்சி ஆணையாளர் முகமது சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தல் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் மண்டல இயக்குனர் அறிவுரை யின்படி ஆணையாளர் முகமது சம்சுதீன் தலைமையில் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சுகாதார ஆய்வாளர் உரிமம் பெறுதல் தொடர்பான விவரங்கள் மற்றும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தல் குறித்த அறிவுரைகளை வழங்கினார்.

    • குப்பைகளை கொட்டுவதற்காக வெள்ளமடை அருகே 10 ஏக்கரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
    • ஆறுமுகநேரி பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

    ஆறுமுகநேரி:

    தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரிக்கு நேற்று கள ஆய்வு பணிக்காக வருகை தந்தார்.

    அவருடன் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோரும் வந்தனர். இவர்களை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணை தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது, பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை அகற்றும் பணி முடிந்ததும் அங்கு வணிக வளாகம், பஸ் நிலையம், காய்கறி சந்தை ஆகியவற்றை அமைப்பது என்றும், பேரூராட்சியின் குப்பைகளை கொட்டுவதற்காக வெள்ளமடை அருகே 10 ஏக்கரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மெயின் பஜாரில் உள்ள காமராஜர் பூங்கா மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

    மேலும் தார் சாலைகள் அமைக்கும் பணிக்காக ரூ.7 கோடி ஒதுக்கப்படுவதாகவும், விரைவில் ஆறுமுகநேரி பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

    கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், மாரியம்மாள், தீபா, சந்திரசேகர், சிவகுமார், சகாய ரமணி, நிர்மலா தேவி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து ஆறுமுகநேரி பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் பணிக்காக 15 நவீன பேட்டரி வாகனங்களை அமைச்சர் நேரு வழங்கினார்.

    பின்னர் அமைச்சர்கள் கே.என். நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டனர்.

    அப்போது ஆறுமுகநேரி நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், துணைச் செயலாளர் அகஸ்டின், மாவட்ட பிரதிநிதி ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கீழக்கரையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு செய்தார். புகார் மனு கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    • பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்காமல் ரகசியம் காத்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து இன்று காலை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா கீழக்கரையில் 2மணி நேரம் திடீர் ஆய்வு செய்தார், மாலாங்குண்டு, வடக்குத்தெரு மேல்நிலை குடிநீர் தொட்டி, கீழக்கரை பஸ் நிலையம், மீன் மார்க்கெட் ஆகியவற்றின் நிலை குறித்து பார்வை யிட்டார்.

    நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்து பணிகள் தரமான முறையில் மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். இந்த பணிகள் தாமதம் இல்லாமல் குறித்த நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    மதுரை மண்டல நிர்வாக இயக்குநர் சரவணன், நகராட்சி பொறியாளர் மனோகரன், கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்த்தான், நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், பொறியாளர் அருள், துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா உள்பட பலர் உடன் சென்றனர்.

    நகராட்சி நிர்வாக இயக்குநரின் ஆய்வு குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு முன்னதாக தகவல் அளிக்கப்பட்டும், அவரது வருகை சம்பந்தமாக பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்காமல் ரகசியம் காத்தனர்.

    மேலும் நகராட்சி நிர்வாகம் சம்பந்தமாக புகார் மனு அளிக்கவும், புகார்களை தெரிவிக்கவும் சமூக ஆர்வலர்கள் நகராட்சிக்கு வந்திருந்தனர். ஆனால் நிர்வாக இயக்குனர் ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பி விட்டதால் அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    • நகராட்சி கூட்டத்திற்கு தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
    • 2 தீர்மானங்கள் தற்காலிகமாக வைக்கப்பட்டதாக நகர மன்ற தலைவர் அறிவித்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.

    நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், மேலாளர் சண்முகவேல், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேர்தல் பிரிவு மாரியப்பன் 40 தீர்மானங்களையும் வாசித்தார். 2 தீர்மானங்களை உறுப்பினர்கள் எதிர்த்ததால் தற்காலிகமாக அவை நிறுத்தி வைக்கப்பட்டதாக நகர மன்ற தலைவர் அறிவித்தார். தொடர்ந்து மற்ற அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் மகாலிங்கம் பேசுகையில், கடையநல்லூர் நகர் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கிணறுகள் எத்தனை? பொறம்போக்கு இடங்கள் எவை? என்பதை கண்டறிந்து அதனை பாதுகாக்க வேண்டும். சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உடனடியாக அகற்ற வேண்டும், தினசரி கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றார்.

    எஸ்.டி.பி. கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் யாசர் கான் பேசுகையில், சமீபத்தில் 50 சதவீதம் மட்டுமே வீட்டு வரியை உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் பல்வேறு வீடுகளில் 100 முதல் 200 சதவீதம் வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருகின்றது. எனவே வீட்டு வரி உயர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்றார். பா.ஜ.க. உறுப்பினர் சங்கர நாராயணன் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை கூட்ட அரங்கில் வைக்க அனுமதிக்க வேண்டும் என பேசினார்.

    • கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர்.
    • வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

    அனுப்பர்பாளையம் :

    திருமுருகன்பூண்டி நகராட்சி அவசரக்கூட்டம் நடந்தது. நகராட்சித் தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேஸ்வரி, கமிஷனர் முகமது சம்சுதீன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர். நகராட்சி தலைவர் பதில் அளித்து பேசிய போது, நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொது நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகள், சாக்கடை தெருவிளக்கு உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

    • பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
    • ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் ரூ.7 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதாகவும்,கடை வாடகை உரிய காலத்திற்குள் செலுத்தாவிட்டால்,18 சதவீத தண்ட வட்டி சேர்த்து வசூலிக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி,ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பல்லடம் நகராட்சி 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள் 1,263 வணிக கட்டடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சொத்து வரி ரூ.2கோடியே99லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரி ரூ.5லட்சத்து65 ஆயிரம், தொழில் வரி ரூ.15லட்சத்து39 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1கோடியே63லட்சத்து12 ஆயிரம், கடை வாடகை ரூ.3கோடியே15லட்சத்து10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    மேலும் பல்லடம் நகராட்சியில்,பஸ் நிலையம்,அண்ணா வணிகவளாகம் போன்றவற்றில் கடை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள் உரிய காலத்திற்குள் வாடகை செலுத்தாவிட்டால்,18 சதவீத தண்ட வட்டி சேர்த்து வசூலிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவேபொதுமக்கள் வரி இனங்களை உடனடியாக செலுத்தி 18 சதவீத தண்ட வட்டி,குடிநீர் இணைப்பு துண்டிப்பு,ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ளவேண்டும். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிஎன் அர்பன் இ சேவை என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும் .அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பின்னர் பல்லடம்,கடைவீதியில் உள்ள கடைகளில், நகராட்சி ஆணையாளர் விநாயகம் தலைமையிலான அதிகாரிகள் வசூலில் ஈடுபட்டனர்.

    • தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து நகராட்சி மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நகராட்சிக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் தனம், ஆணையாளர் முஸ்தப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகராட்சியின் 20-வது வார்டு கிழக்கு பாவடி தெரு பகுதியில் குப்பை அறைக்கும் கிடங்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டப்பட்டு அதற்கான பூமி பூஜை போடப்பட்ட போது அதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் விளைவாக நகராட்சி நிர்வாகம் இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு அதாவது மீண்டும் சின்னா–கவுண்டம்பட்டி பகுதியில் அமைப்பதாக உறுதி செய்து தீர்மானிக்கபட்டது.

    அதனை தொடர்ந்து நகராட்சி மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நகராட்சிக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேசிய 7-வது வார்டு உறுப்பினர் தேன்மொழி, 3-வது வார்டு உறுப்பினர் குமரேசன் ஆகியோர் நகராட்சி பகுதியில் சாக்கடை மற்றும் மழை நீர் அதிக அளவில் தேங்குவதால் கொசு, கிருமிகளால் வைரஸ் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளோம்.

    எனவே இந்த நிலைமை பொதுமக்களுக்கும் வந்து விட கூடாது என்பதால் சுகாதார பணிகளை தீவிர படுத்தவேண்டும் என்றனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 4 பேரை தவிர மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், மன்றத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மேலூர் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
    • நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலூர்

    மேலூர் நகராட்சி கூட்டம் தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது. இதில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலூர் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மலம்பட்டி ஊரணியில் நடைபெற்று வரும் பூங்கா பணிக்கு கூடுதலாக நிதி ஒதுக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    2-வது வார்டு அ.ம.மு.க. உறுப்பினர் ஆனந்த் மேலூர் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்கள் வயர்லையன் பதிப்பதற்காக பள்ளங்களை தோண்டுவதால் குடிநீர் உடைப்பு ஏற்பட்டு ரோட்டில் பல இடங்களில் தண்ணீர் வீணாக செல்கிறது என்று தெரிவித்து, சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் நடமாடும் வண்டியினை வழங்கிடவும் கோரிக்கை விடுத்தார்.

    மதுரை எம்.பி. வெங்கடேசன் முயற்சியால் மேலூர் அரசு கலைக்கல்லூரியில் வருகிற 8-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த வாழ்வாதார முகாமை தங்கள் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை பங்கேற்க வைத்து பயன்பெற செய்யுமாறு நகர் மன்ற தலைவர் முகமது யாசின் கவுன்சிலர்களை கேட்டுக்கொண்டார்.

    இந்த கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், சுகாதார ஆய்வாளர் சரவணன், நகர அமைப்பு ஆய்வாளர் சரவணகுமார், மேலாளர் தியாகராஜன், இளநிலை அலுவலர் ஜோதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×