search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பத்திரம்"

    • தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
    • தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார்

    தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு கால அவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால், எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "ஸ்டேட் வங்கியின் தலையில் நீதிமன்றம் சுத்தியல் வைத்துள்ளது. 26 நாட்களாக என்ன செய்தீர்கள்? நாளை விவரங்களை தர வேண்டும். மார்ச் 15 தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் தீர்ப்பு இது. வரவேற்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    இதற்கு முன்னதாக தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் வேண்டும் என எஸ்.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தது.

    அப்போது, "சந்திராயன் நிலவுக்கு செல்ல 41 நாள் ஆனது. அது நவீன அறிவியலின் சாதனை. மும்பையிலிருக்கும் எஸ்.பி.ஐ. டெல்லியிலிருக்கும் உச்ச நீதிமன்றத்தில் நன்கொடையாளர்களின் பெயரை கொடுக்க 140 நாள் கேட்கிறது. இது நவீன ஊழலின் சாதனை. 48 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கை எஸ்பிஐ. இனி பின்னொட்டாக Modi Ka Parivar-ஐ இணைத்துக் கொள்ளட்டும் என்று சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொந்த வங்கி தரவுகளை மறைத்ததற்காக தலைகுனிந்து நிற்கிறது.
    • நன்கொடை வழங்கியவர்களுக்கு ஆசீர்வாதம்- சாமானிய மக்களின் மீது வரி சுமை.

    தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு கால அவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால், எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் காந்தி வரவேற்பு அளித்துள்ளார்.

    மேலும், இந்திய வரலாற்றிலேயே தேர்தல் பத்திரம் என்பது மிகப்பெரிய ஊழல் என்று நிரூபணமாக போகிறது என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    கருப்பு பணத்தை 100 நாளில் மீட்போம் என கூறி ஆட்சிக்கு வந்த அரசு, சொந்த வங்கி தரவுகளை மறைத்ததற்காக தலைகுனிந்து நிற்கிறது.

    ஊழல் தொழிலதிபர்கள், அரசுக்கு இடையிலான தொடர்பு அம்பலமாவதன் மூலம், பிரதமரின் உண்மையான முகம் வெளிப்பட உள்ளது.

    நன்கொடை வழங்கியவர்களுக்கு ஆசீர்வாதம்- சாமானிய மக்களின் மீது வரி சுமை. இதுதான் மோடி அரசு" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 26 நாட்களாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
    • வங்கி சீலிட்ட கவரை திறந்து தகவல்களை சேகரித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.

    தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு காலஅவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.

    அதற்கு உச்சநீதிமன்றம், "எங்களுடைய தீர்ப்பின்படி வெளிப்படையாக தெரிவிக்கும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். வங்கி சீலிட்ட கவரை திறந்து தகவல்களை சேகரித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். அது மட்டும்தான் வேலை. கடந்த 26 நாட்களாக நீங்கள் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?" என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    மேலும், உங்கள் விண்ணப்பம் அது தொடர்பாக ஒன்றும் கூறவில்லை. நன்கொடையாளர்கள் தகவல்கள் எங்கு இருக்கிறதோ, அது அங்கேதான் இருக்கும். எங்களது உத்தரவை பின்பற்றுங்கள்" என உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ. வங்கியை கடினமாக எச்சரித்தது.

    • தேர்தல் பத்திரம் செல்லாது, வினியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
    • நன்கொடையாளர்களின் விவரங்களை கொடுக்க எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

    அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

    அதோடு தேர்தல் பத்திரம் வினியோகத்தை எஸ்பிஐ வங்கி உடனடியாக நிறுத்த வேண்டும். நன்கொடை அளித்தவர்கள் விவரம், ஒவ்வொரு கட்சிகளுக்கும் யார் யார் எவ்வளவு நன்கொடை அளித்துள்ளனர் என்பது தொடர்பான முழு விவரங்களையும் எஸ்பிஐ வங்கி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் அதனுடைய அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    ஆனால் எஸ்பிஐ வங்கி, உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த காலத்திற்குள் அளிக்க முடியவில்லை. ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. யாரை காப்பாற்றுவதற்கு காலஅவகாசம் கேட்கிறது என கேள்வி எழுப்பி வருகின்றன.

    இந்த நிலையில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் எஸ்பிஐ வங்கிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவமதிக்கு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எஸ்பிஐ வேண்டுமென்றே அவமதிப்பதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த மனுவை பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
    • தேர்தல் பத்திரம் வினியோகத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் சிறப்புவாய்ந்த தீர்ப்பை வழங்கியது.

    மேலும், ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பத்திரம் மூலமாக பெற்றுள்ள தொகை குறித்த விவரத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மார்ச் 31-ம் தேதிக்குள் தனது இணைய தளத்தில் அந்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றும், தேர்தல் பத்திரம் வினியோகத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்றன.

    இதற்கிடையே, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. வங்கி வேண்டுகோள் வைத்துள்ளது.

    இந்நிலையில், அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, எஸ்.பி.ஐ. வங்கி லோகோவில் பிரதமர் மோடி தெரிவது போல் எக்ஸ் தளத்தில் எஸ்.பி.ஐ. யாரை காப்பாற்ற நினைக்கிறது என கேள்வி எழுப்பி படம் வெளியிட்டது வைரலாகி வருகிறது.

    • தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது. எஸ்.பி.ஐ. வங்கி விவரங்களை அளிக்க வேண்டும்.
    • தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் இணை தளத்தில் பதவி ஏற்றம் செய்ய வேண்டும்.

    உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரம் மூலமாக ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுள்ள தொகை குறித்த விவரத்தை அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் தனது இணைய தளத்தில் விவரத்தை வெளியிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

    மேலும், தேர்தல் பத்திரம் வினியோகத்தை உடனடியாக நிறுத்தவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்றன.

    இந்த நிலையில் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30-ந்தேதி வரை காலஅவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்துள்ளது.

    ஆனால், உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரியவில்லை. இந்தியாவில் கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் மூலம கட்சிகளுக்கு நிதி பெறுதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

    முன்னதாக,

    அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்களும், தனி நபர்களும் தேர்தல் நன்கொடை வழங்குவது வழக்கம். அதன்படி அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெற்றால், அதுபற்றி தேர்தல் கமிஷனிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் பின்பற்றப்பட்டு வந்தது. அதில் திருத்தம் செய்து, கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், தேர்தல் நிதி பத்திரத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

    இதன்படி தனிநபர்களோ, நிறுவனங்களோ ரொக்கம் மற்றும் காசோலையாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் பத்திரங்களாக நன்கொடை அளிக்கலாம்.

    இந்த பத்திரங்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. தனிநபர்களும், நிறுவனங்களும் அந்த வங்கியில் பல்வேறு மதிப்பு கொண்ட பத்திரங்களை வாங்கி, தங்களுக்கு விருப்பப்பட்ட அரசியல் கட்சிகளிடம் அளிக்கலாம். அந்த கட்சிகள், 15 நாட்களுக்குள் அவற்றை பாரத ஸ்டேட் வங்கியில் கொடுத்து, தங்களது வங்கிக்கணக்கில் பணமாக வரவு வைக்கலாம்.

    இத்திட்டத்தில், யார், எவ்வளவு நன்கொடை கொடுத்தனர் என்பது வெளியே தெரியாது.

     இதனால், வெளிப்படைத்தன்மை இல்லாத தேர்தல் பத்திரத் திட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் பிரமுகர் ஜெயா தாக்கூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தொண்டு நிறுவனம் உள்பட 4 பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    மத்தியில் உள்ள ஆளுங்கட்சியும், பாரத ஸ்டேட் வங்கியும் மட்டும் நன்கொடையாளர் விவரங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக அந்த மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

    இந்த மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது.

    இந்த மனுக்கள் மீது கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதில், ஏற்கனவே பெற்ற நன்கொடைகள் மற்றும் இனிமேல் பெறப்போகும் நன்கொடைகள் பற்றிய தகவல்களை மூடி முத்திரையிட்ட உறையில் தேர்தல் கமிஷனிடம் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.

    கடந்த அக்டோபர் மாதம் வாதங்கள் தொடங்கின. விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீா்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

    இந்நிலையில், கடந்த 15-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு இவ்வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அமர்வு சார்பில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் 152 பக்கங்களிலும், நீதிபதி சஞ்சீவ் கன்னா 74 பக்கங்களிலும் தீர்ப்பு எழுதி இருந்தனர்.

    இருப்பினும் இரண்டு தீர்ப்புகளும் ஒருமித்த தீர்ப்புகளாக இருந்தன. அமர்வு சார்பில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஒரு அரசியல் கட்சி பெறும் நன்கொடை குறித்து வாக்காளர் தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் அவர் தனது வாக்குரிமையை உறுதியான முறையில் செயல்படுத்த முடியும். ஆனால், தேர்தல் பத்திரத் திட்டம் அந்த நோக்கத்தை சிறிதளவு கூட பூர்த்தி செய்யவில்லை.

    ஜனநாயக முறையிலான அரசு அமைக்க தேர்தல்முறையில் நேர்மை நிலவுவது முக்கியமானது. அதனால்தான் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்துவதை அரசியல் சட்டம் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துள்ளது.

    அரசியல் கட்சிகளுக்கு 2 காரணங்களுக்காக நன்கொடை அளிக்கப்படுகிறது. ஒன்று, அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக. இன்னொன்று, பிரதிபலன் எதிர்பார்த்து நன்கொடை அளிப்பது.

    பிரதிபலன் எதிர்பார்த்து அளிக்கும் நன்கொடைகளை அரசியல் ஆதரவு நிலைப்பாடாக கருத முடியாது.

    அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதை சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் அந்த நன்கொடை, அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.

    ஆனால் அனைத்து நன்கொடைகளும் மக்கள்நலன் சார்ந்த கொள்கைகளை வகுப்பதற்காக கொடுக்கப்படுவது இல்லை. ஏனென்றால், நாடாளுமன்ற, சட்டசபைகளில் இடம்பெறாத கட்சிகளுக்கும் நன்கொடை அளிக்கப்படுகிறது.

    தேர்தல் முறையில் வெளிப்படைத்தன்மைக்காகவும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும் தேர்தல் பத்திரம் கொண்டு வந்திருப்பதாக மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. தகவல் அறியும் உரிமையை பாதிக்காமல், கருப்பு பணத்தை ஒழிக்க மாற்று வழிகள் எத்தனையோ உள்ளன.

    ஆனால் தேர்தல் பத்திர திட்டம், அரசியல் சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவு வழங்கும் பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கும், தகவல் அறியும் உரிமைக்கும் எதிரானதாக அமைந்துள்ளது.

    நன்கொடை அளித்தவரின் ரகசியத்தை பாதுகாப்பது, ரகசிய ஓட்டுமுறை போன்றது என்ற மத்திய அரசின் வாதத்தையும் ஏற்க முடியாது. ஆளுங்கட்சி, தனிநபர்களையும், நிறுவனங்களையும் நிர்பந்தம் செய்து நன்கொடை வசூலிக்க வாய்ப்புள்ளது.

    கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லையின்றி நன்கொடை அளிப்பதற்காக கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது தன்னிச்சையானது. அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு வழங்கும் சமத்துவ உரிமையை மீறும் செயல்.

    இந்த காரணங்களால், தேர்தல் பத்திர திட்டம், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பு அளிக்கிறோம். அந்த திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

    தேர்தல் பத்திரத் திட்டத்துக்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், கம்பெனி சட்டம் ஆகியவற்றில் செய்யப்பட்ட சட்ட திருத்தங்களும் செல்லாதவை என்று அறிவிக்கிறோம்.

    இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

    • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93% வருமானம் தேர்தல் பாத்திரங்கள் வழியாக வந்தது என அண்ணாமலை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • சில நாட்களுக்கு முன்பு கூட சபாநாயகர் என சொல்வதற்கு பதில் ஆளுநர் என அண்ணாமலை மாற்றி கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93% வருமானம் தேர்தல் பாத்திரங்கள் வழியாக வந்தது என அண்ணாமலை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும். ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும். ஸ்டேட் வங்கி பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரபூர்வ இணைய தளத்தில் மார்ச் 13-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசினார். அதில், "தேர்தல் பத்திரம் திட்டத்தின் மூலம் பாஜகவுக்கு வரக்கூடிய பணம் 52 சதவீதம்தான். திமுகவுக்கு 91 சதவீதம் வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 62 சதவீதம் வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93 சதவீதம் வருகிறது என புள்ளி விவரங்களோடு அவர் பேச ஆரம்பித்தார்.

    இதனை பார்த்த நெட்டிசன்கள் திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு பதிலாக தமிழ் மாநில காங்கிரஸ் என அண்ணாமலை மாற்றி கூறியதாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு கூட சபாநாயகர் என சொல்வதற்கு பதில் ஆளுநர் என அண்ணாமலை மாற்றி கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • சமத்துவம், நியாயம் மற்றும் ஜனநாயகம் ஆகிய கொள்கைகளை தேர்தல் பத்திரம் திட்டம் மீறியது.
    • உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமை, தேர்தலில் சமநிலை ஆகியவற்றிற்கு கிடைத்த வெற்றி.

    அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும், நன்கொடை பெற்ற விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    இதனால் ஒவ்வொரு கட்சிகளும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் முதலாளிகளிடம் இருந்து எவ்வளவு பணம் நன்கொடையாக பெற்றது என்ற விவரம் மார்ச் 31-ந்தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

    இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார். தீர்ப்பு குறித்து அவர் கூறியதாவது:-

    சமத்துவம், நியாயம் மற்றும் ஜனநாயகம் ஆகிய கொள்கைகளை தேர்தல் பத்திரம் திட்டம் மீறியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமை, தேர்தலில் சமநிலை ஆகியவற்றிற்கு கிடைத்த வெற்றி.

    தற்போது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரும் முதலாளிகள் மூலம் பா.ஜனதா பெற்ற 90 சதவீத நன்கொடைகள் அம்பலமாகப் போகிறது.

    யார் பணம் கொடுத்தார்கள். அவர்கள் பணம் கொடுத்தபோது, அதற்கு பிரதிபலமான கட்சி கொடுத்தது என்ன? என்பதை உலகம் தெரிந்து கொள்ள போகிறது. அரசியல் கட்சிக்கு ஏன் பணம் கொடுக்கப்பட்டது என மக்கள் கேள்வி கேட்பார்கள். அதன்பின் மக்கள் தனது சொந்த முடிவை எழுதுவார்கள்.

    இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    • உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானதே.
    • அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயக சமநிலையை மீட்டெடுத்துள்ளது.

    தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தேர்தல் பத்திரம் செல்லாது. பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரம் வினியோகிப்பதை உடனடியான நிறுத்த வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்," தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானதே" என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும்," உச்சநீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும். இந்த தீர்ப்பு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயக சமநிலையை மீட்டெடுத்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    • ரூ. 10 லட்சம் அல்லது ரூ. 15 லட்சத்திற்காக யாரும் தேர்தல் பத்திரம் கொடுக்கமாட்டார்கள்.
    • அரசியல் கட்சிக்கு ரூ. 5000 கோடி நிதி அளித்திருந்தால் பணக்காரர்கள் மட்டுமே அதைச் செய்திருக்க முடியும் என்று நீங்கள் கற்பனை செய்யலாம்.

    தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தேர்தல் பத்திரம் செல்லாது. பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரம் வினியோகிப்பதை உடனடியான நிறுத்த வேண்டும்.

    இதுதொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். அவர்கள் மார்ச் 31-ந்தேதிக்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசியல் கட்சிக்கு செல்லும் நிதி பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம்.

    கருப்பு பணத்தை ஒழிப்பது என்பதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தை மீறுவது நியாயம் அல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    இந்த தீர்ப்பை பெரும்பாலான எதிர்க்கட்சிகள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் கூறியதாவது:-

    அரசியல் கட்சிகளுக்கும், நிதி அளிப்பவர்களுக்கும் இடையிலான பிணைப்பு குறித்து நாங்கள் அறிந்து கொள்வோம். அதேபோல், பிரதிபலன் (Quid pro quo) குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒருவர் கூட இதுபோன்ற மிகப்பெரிய தொகையை பிரதிபலன் இல்லாமல் வழங்க மாட்டார்கள்.

    10 லட்சம் அல்லது 15 லட்சத்திற்காக யாரும் தேர்தல் பத்திரம் கொடுக்கமாட்டார்கள். அது கோடிக்கணக்கில் இருக்கும். எனவே அரசியல் கட்சிக்கு 5000 கோடி நிதி அளித்திருந்தால் பணக்காரர்கள் மட்டுமே அதைச் செய்திருக்க முடியும். மேலும் அவர்கள் செயல்பாட்டில் சில சலுகைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொள்ளலாம்.

    பிரதமர் மோடி ஊழல் எங்கே? ஊழல் எங்கே? என கேட்கிறார். இப்போது மோடி ஜி, உங்கள் கண்முன் உங்களுடைய ஊழல், இந்த அரசாங்க ஊழல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காங்கிரஸ் தலைவர் ஜெயா தாகூர் "அரசியல் கட்சியின் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் நலனை இந்த தீர்ப்பு பாதுகாக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும்.
    • தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த கருத்தாக அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி  தேர்தல் பத்திரங்கள் வினியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவரை வழங்கிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

    இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் இதுதொடர்பான விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    தலைமை நீதிபதி ஒய். சந்திரசூட் தலைமையிலான பெஞ்சில் சஞ்ஜீவ் கண்ணா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய நிதிபதிகள் இடம் பிடித்திருந்தனர்.

    எங்களுக்குள் ஒருமித்த முடிவு ஏற்பட்டுள்ளது. எனக்கும், நீதிபதி சஞ்சய் கண்ணாவுக்கும் இடையில் இரண்டு கருத்துகள் இருந்தன. அதன்பின் ஒரே முடிவுக்கு வரப்பட்டது. முடிவுக்கு வருவதில் சிறு வேறுபாடு இருந்தது" என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

    ×