search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதிமன்ற தீர்ப்பு"

    • தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
    • தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார்

    தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு கால அவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால், எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "ஸ்டேட் வங்கியின் தலையில் நீதிமன்றம் சுத்தியல் வைத்துள்ளது. 26 நாட்களாக என்ன செய்தீர்கள்? நாளை விவரங்களை தர வேண்டும். மார்ச் 15 தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் தீர்ப்பு இது. வரவேற்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    இதற்கு முன்னதாக தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் வேண்டும் என எஸ்.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தது.

    அப்போது, "சந்திராயன் நிலவுக்கு செல்ல 41 நாள் ஆனது. அது நவீன அறிவியலின் சாதனை. மும்பையிலிருக்கும் எஸ்.பி.ஐ. டெல்லியிலிருக்கும் உச்ச நீதிமன்றத்தில் நன்கொடையாளர்களின் பெயரை கொடுக்க 140 நாள் கேட்கிறது. இது நவீன ஊழலின் சாதனை. 48 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கை எஸ்பிஐ. இனி பின்னொட்டாக Modi Ka Parivar-ஐ இணைத்துக் கொள்ளட்டும் என்று சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொந்த வங்கி தரவுகளை மறைத்ததற்காக தலைகுனிந்து நிற்கிறது.
    • நன்கொடை வழங்கியவர்களுக்கு ஆசீர்வாதம்- சாமானிய மக்களின் மீது வரி சுமை.

    தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு கால அவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால், எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் காந்தி வரவேற்பு அளித்துள்ளார்.

    மேலும், இந்திய வரலாற்றிலேயே தேர்தல் பத்திரம் என்பது மிகப்பெரிய ஊழல் என்று நிரூபணமாக போகிறது என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    கருப்பு பணத்தை 100 நாளில் மீட்போம் என கூறி ஆட்சிக்கு வந்த அரசு, சொந்த வங்கி தரவுகளை மறைத்ததற்காக தலைகுனிந்து நிற்கிறது.

    ஊழல் தொழிலதிபர்கள், அரசுக்கு இடையிலான தொடர்பு அம்பலமாவதன் மூலம், பிரதமரின் உண்மையான முகம் வெளிப்பட உள்ளது.

    நன்கொடை வழங்கியவர்களுக்கு ஆசீர்வாதம்- சாமானிய மக்களின் மீது வரி சுமை. இதுதான் மோடி அரசு" என்றார்.

    • தனியார் துறையிலும் 10% இட ஒதுக்கீடு கொண்டுவர உமா பாரதி கோரிக்கை
    • எல்லா ஏழைகளும் ஒரே சாதி தான், அது ஏழை சாதி.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. இந்த இடஒதுக்கீடு அரசியலமைப்பின் கட்டமைப்பை மீறவில்லை என்று, தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் 3 நீதிபதிகள் இன்று வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஒரு உறுதியான நடவடிக்கை என்று தெரிவித்தார்.

    ஆனால் தமது கேள்வி என்னவென்றால், நாடு முழுவதும் வேலை பற்றாக்குறை நீடிக்கும் இந்த மோசமான சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மத்திய அரசால் செயல்படுத்த முடியுமா என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உமாபாரதி அரசு பணிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியிருப்பது வரவேற்கதக்கது என்றும், தனியார் துறையிலும் 10% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    எல்லா ஏழைகளும் ஒரே சாதி தான், அது ஏழை என்ற சாதி. இந்த இடஒதுக்கீடு நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும், அனைத்து ஏழை மக்களும் ஒன்றிணைந்து தங்களுக்கான சிறந்த வாழ்க்கைக்காக போராட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×