search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துர்கா பூஜை"

    • கவுமாரி - மயில்
    • நரசிம்மி - சிங்கம்

    இந்திராணி - யானை

    வைஷ்ணவி - கருடன்

    மகேஸ்வரி - ரிஷபம்

    கவுமாரி - மயில்

    வராகி - எருமை

    அபிராமி - அன்னம்

    நரசிம்மி - சிங்கம்

    சாமுண்டி - பூதம்

    • வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
    • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.

    நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.

    அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.

    அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

    இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும்.

    இந்த மாதங்களில் உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும்.

    அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும்.

    இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும் என்றார்.

    இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

    வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

    நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி.

    கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள்,

    அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.

    இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும்

    மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.

    மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.

    • பாரம்பரிய உடையணிந்து, மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவர்.
    • நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும்.

    மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற கிழக்கு மாநிலங்களில், 'துர்க்கா பூஜை' என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. எருமைத் தலை கொண்ட மகிஷாசுரனை, துர்க்கா தேவி வதம் செய்து வெற்றி கொண்ட தினமான விஜயதசமி, மேற்குவங்காள மக்களின் முக்கியமான திருவிழாவாகும்.

    விநாயகர் சதுர்த்தியைப் போன்று. இந்த விழாவின் போது, மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு, அதன்கீழ், துர்க்கை அம்மனின் சிலைகள் நிறுவப்படும். நவராத்திரி விழாக்களின் போது மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு மாநில மக்கள். பாரம்பரிய உடையணிந்து, மாலை நேரத்தில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவார்கள்.

    இந்த நவராத்திரி நாட்களில் வண்ணமயமான கலாசார நிகழ்வுகள் நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும். பத்தாம் நாளில், நவராத்திரி கொலு வைக்கப்பட்ட துர்க்கை சிலைகள் அனைத்தும் பல்வேறு பகுதிகளிலும் ஊர்வலமாகக் கொண்டு சென்று, பின்னர் அதனை கடலில் கரைப்பார்கள்.

    • ஏகமுக தீபத்தை, பகவதி தீபம் என்றும், ஸ்ரீதுர்கா தீபம் என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள்.
    • சுமங்கலிப் பெண்கள் தினமும் குளித்த பின்பு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட வேண்டும்.

    வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் தீப விளக்கிற்குப் மலர்மாலை சாற்றி பூஜிக்க, சகல நன்மைகள் பெறலாம். வீட்டில் விளக்கேற்றி வரும் இடம் ஒரே இடமாக இருப்பது நல்லது. அடிக்கடி இடத்தை மாற்றக்கூடாது. காலை, மாலை விளக்கேற்றும் போது கல்கண்டை நிவேதனமாகப் படைத்து குழந்தைகளுக்கு கொடுக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

    ஏகமுக தீபம்

    ஏகமுக தீபத்தை, பகவதி தீபம் என்றும், ஸ்ரீதுர்கா தீபம் என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள். சர்வசக்திகளும் தன்னுள் இருக்க, தான் ஒருத்தியே ஏகமாக பிரகாசிப்பதை ஏகமுக தீபம் குறிக்கிறது. எனவேதான் லலிதா சகஸ்ரநாம பூஜைக்கு ஐந்துமுக தீபமும், துர்கா பூஜைக்கு ஏகமுக தீபமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏகமுக தீபத்தில் ஸ்ரீதுர்க்கா தேவியை ஆவாகணம் செய்து சகஸ்ரநாமத்தால் அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இந்த தீப வழிபாட்டால் சிறந்த பலன்களை பெறலாம்.

    மாங்கல்ய பலம் பெருகும்

    சுமங்கலிப் பெண்கள் தினமும் குளித்த பின்பு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட வேண்டும். இந்த தீப வழிபாட்டை செய்ய, செய்ய வீட்டில் அஷ்டலட்சுமி வாசம் செய்வதோடு, மாங்கல்யம் பலம் பெற முடியும். இதனால் குடும்பத்தினர் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வசதியாக வாழ்வார்கள்.

    நிம்ப தீபம்

    நிம்பதீபம் என்பது இலுப்பை எண்ணை ஊற்றி ஏற்றப்படும் விளக்கு ஆகும். பேய்கள் அகலுவதற்காக நிம்ப தீபம் ஏற்றுவதுண்டு. மேலும் மாரியம்மன் திருவருள் பெற இந்த விளக்கை முறைப்படி ஏற்ற வேண்டும். நிம்ப தீபத்தை புதுஅகண்டம், அகல் இவைகளில் ஏற்ற வேண்டும். வீடுகளிலும் இத்தீபத்தை ஏற்றலாம்.

    பஞ்ச தீப எண்ணை

    தேங்காய் எண்ணை, விளக்கு எண்ணை, வேப்ப எண்ணை, இலுப்ப எண்ணை மற்றும் பசு நெய் கலந்த எண்ணையே பஞ்ச தீப எண்ணை எனப்படும். பஞ்ச தீப எண்ணையால் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

    இதை ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வெண்குஷ்டம் முதலிய தோல் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் துன்புறுவோர் தங்கள் உபாதைகள் நீங்கிச் சுகம் பெறுவார்கள். நரம்புத் தளர்ச்சி நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த கண் கண்ட மருந்தாகும். தேவி உபாசகர்கள், தங்கள் தேவியை மகிழ்விக்க, பஞ்சமி திதியில் மேற்கண்ட பஞ்ச தீப எண்ணை ஊற்றி, பஞ்ச தீபம்(5-சுடர்) ஏற்றி வழிபட்டு வந்தால் அம்பிகையின் பூரண அருள்கிட்டும்.

    மங்களகவுரீ தீப பூஜை

    ஆவணி மாதம், செவ்வாய்க்கிழமை அம்பிகை அவதரித்த நாள். அன்று ஒளிமயமானதேவியை தீபத்தில் பூஜிப்பது மிகவும் நல்லது. ஆவணி மாதம் எல்லா செவ்வாய்க்கிழமைகளில் தேவியை தீபத்தில் பூஜிக்க வேண்டும். கன்னியாக இருக்கும் போது தந்தை வீட்டில் ஒரு வருஷமும், கணவர் வீட்டில் நான்கு வருஷங்களும் இந்த பூஜையை விரதமாக ஏற்று முடிக்க வேண்டும். இதற்கு சிரவண மங்கள விரதம் என்று பெயர். தீர்க்க சுமங்கலியாக இருப்பதே இதன் முக்கிய பலன்.

    விளக்கொளி பெருமாள்

    சிவபெருமான் ஜோதியாக விளங்கியது போல மகாவிஷ்ணுவும் ஜோதியாக விளங்கியிருக்கிறார். இதை உணர்த்த காஞ்சிபுரத்தில் தீபப் பிரகாசர் என்ற பெயருடன் ஒரு பெருமாள் கோவில் உள்ளது. அங்குள்ள பெருமாளை விளக்கொளி பெருமாள் என்று அழைக்கிறார்கள். தீப பூஜையில் மகாவிஷ்ணுவை ஆவாஹனம் செய்யும்போது இந்தப்பெருமாளை தியானிப்பது மிகவும் விசேஷம். இத்தலத்திற்குத் திருத்தண்கா, தூப்புல் என்ற பெயர் வழங்குகிறது.

    தீப பிரசட்சணம்

    தீபத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தை பிரதசட்ணம் வருவதில் பெரும் புண்ணியம் உண்டு. கன்னிப்பெண்கள் இப்படி தீபத்துடன் பிரதட்சணம் செய்தால் அவர்களுக்கு சீக்கிரமே திருமணம் கைகூடும்.

    திருக்கோவிலூர், தபோவனம் ஸ்ரீஞான ஆனந்த சுவாமிகள் மடத்தில் இந்த வழக்கம் தினமும் பின்பற்றப்படுகிறது. அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பு ஒரு கன்னிப்பெண் 5 முகம் ஏற்றிய தீபத்தை கையில் ஏந்திவர அவர்களுடன் எல்லோரும் சேர்ந்து, தீபஜோதியே வருவாய் என்று பாடிக்கொண்டு ஆஸ்ரமத்தை வலம் வருவார்கள்.

    திருவிளக்கு தந்த அரச பிறவிஷ

    வேதாரண்யம், வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் விளக்கு சற்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தபொழுது விளக்கில் ஊற்றப்பட்டிருந்த நெய்யை உண்ணுவதற்காக சென்ற எலி தன முக்கினால் திரியை அப்பால் நகர்த்திவிட தீபம் சுடர்விட்டு எரிந்ததாம். எலியின் செயல் எப்படியிருந்தபோதும், தீபம் சுடர்விட்டு எரியச் செய்த கைங்கரியத்திற்காக அந்த எலியை இறைவன் அடுத்த பிறவியில் மகாபலி சக்கவர்த்தியாகப் பிறக்கச் செய்தார் என்று அப்பர் சுவாமிகள் தனது திருக்குறுகை பதிகத்தில் எட்டாம் திருப்பாட்டில் எழுதியுள்ளார்.

    முதலை உணர்த்திய விளக்குத் தத்துவம்

    முற்காலத்தில் சாப்பிடும்போது விளக்கு அணைந்தால் அத்துடன் எழுந்து விடுவது வழக்கம். இதற்கு எடுத்துக்காட்டா ஆதிசங்கரர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

    ஆதிசங்கரர் சிறுவனாக இருந்த போது ஆற்றுக்குச் சென்றார். அப்போது இரவுக் காலம். அவருடைய காலை ஒரு முதலை பிடித்துக்கொண்டது. அப்போது என் தாயாரிடம் சொல்லிவிட்டு வருகிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டு சங்கரர் அன்னையிடம் வந்து நடந்ததைக் கூறினார்.

    சங்கரர் ஆற்றிற்குத் திரும்பியபோது அவர் அன்னை ஒரு எரிகிற விளக்கை மரக்காலுக்குள் மறைத்துக்கொண்டு வந்தாள். முதலை சங்கரரின் காலைப் பிடித்து உண்ண ஆரம்பித்தது. பின்னால் நின்ற அன்னை மூடியிருந்த விளக்கை திடீரென்று வெளியே காட்டி உடனே அணைத்து விட்டார். தீய சகுணம் ஏற்பட்டு விட்டதால் முதலை அவரை உண்ணாமல் விட்டது. சங்கரர் உயிர் தப்பினார்.

    அகண்ட தீபம்

    அகண்ட தீபம் என்பது எண்ணிக்கையில் அடங்காத வண்ணம் நிரம்ப விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வதைக் குறிக்கும். இந்தச் சிறப்பு வழிபாடு திருநெல்வேலி, நெல்லையப்பர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.

    கோடி தீபம்

    ஆலயங்களில் உலக நன்மைகாக குறிப்பிட்ட காலத்திற்குள் கோடி தீபம் ஏற்றுவதாக வேண்டிக்கொண்டு, வரும் பக்தர்களைக் கொண்டு கோடிதீப ஏற்றுவதுண்டு. இதுபோன்று கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனுக்கு உலக நன்மைக்காக கோடி தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

    • 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு துர்கா பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
    • 10 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜா விழாவில் 9 நாட்கள் விரதமிருந்து 10-வது நாள் துர்கா சிலையை கடலில் கரைப்பார்கள்.

    புதுச்சேரி:

    புதுவையில் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலங்களை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றன.

    மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த குடும்பத்தினர் ஒருங்கிணைந்து மாதூகா நார்ய சக்தி என்ற பெயரில் ஆன்மீக அமைப்பை நடத்தி வருகின்றனர்.

    இதன் சார்பில் ஆண்டுதோறும் துர்கா பூஜை நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜா விழாவில் 9 நாட்கள் விரதமிருந்து 10-வது நாள் துர்கா சிலையை கடலில் கரைப்பார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக விழா கொண்டாடப்படவில்லை.

    2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு துர்கா பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது. 9 நாட்களும் விரதம் இருந்து தினமும் பல்வேறு பூஜைகளை முடித்த பெண்கள் வேனில் துர்கா சிலையை வைத்து ஊர்வலமாக கடற்கரைக்கு கொண்டு வந்தனர். வடமாநில இசையுடன் ஆண்கள் துர்க்கா சிலையை கடலில் கரைத்தனர்.

    • துர்கா பூஜைக்காக 3-வது ஆண்டாக நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • இந்த ஆண்டு அனைத்து துர்கா பூஜை குழுக்களும் ரூ.60 ஆயிரம் நிதி உதவி பெறுவார்கள்.

    கொல்கத்தா:

    துர்கா பூஜையை முன்னிட்டு கடந்த ஆண்டு அனைத்து பூஜை குழுவினருக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதற்கு முந்தின ஆண்டும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.

    கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்காக இந்த தொகையை மம்தா பானர்ஜி ஒதுக்கீடு செய்துள்ளார். இலவச உரிமங்கள் மற்றும் 50 சதவீத மின் கட்டணத்தில் தள்ளுபடி உள்ளிட்டவையும் கடந்த ஆண்டு சலுகைகளாக அறிவிக்கப்பட்டன.

    இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக இருக்கும்.

    3-வது ஆண்டாக நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து துர்கா பூஜை குழுக்களும் ரூ.60 ஆயிரம் நிதி உதவி பெறுவார்கள் என அறிவித்துள்ளார்.

    ×