search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏகமுக தீபம்"

    • ஏகமுக தீபத்தை, பகவதி தீபம் என்றும், ஸ்ரீதுர்கா தீபம் என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள்.
    • சுமங்கலிப் பெண்கள் தினமும் குளித்த பின்பு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட வேண்டும்.

    வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் தீப விளக்கிற்குப் மலர்மாலை சாற்றி பூஜிக்க, சகல நன்மைகள் பெறலாம். வீட்டில் விளக்கேற்றி வரும் இடம் ஒரே இடமாக இருப்பது நல்லது. அடிக்கடி இடத்தை மாற்றக்கூடாது. காலை, மாலை விளக்கேற்றும் போது கல்கண்டை நிவேதனமாகப் படைத்து குழந்தைகளுக்கு கொடுக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

    ஏகமுக தீபம்

    ஏகமுக தீபத்தை, பகவதி தீபம் என்றும், ஸ்ரீதுர்கா தீபம் என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள். சர்வசக்திகளும் தன்னுள் இருக்க, தான் ஒருத்தியே ஏகமாக பிரகாசிப்பதை ஏகமுக தீபம் குறிக்கிறது. எனவேதான் லலிதா சகஸ்ரநாம பூஜைக்கு ஐந்துமுக தீபமும், துர்கா பூஜைக்கு ஏகமுக தீபமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏகமுக தீபத்தில் ஸ்ரீதுர்க்கா தேவியை ஆவாகணம் செய்து சகஸ்ரநாமத்தால் அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இந்த தீப வழிபாட்டால் சிறந்த பலன்களை பெறலாம்.

    மாங்கல்ய பலம் பெருகும்

    சுமங்கலிப் பெண்கள் தினமும் குளித்த பின்பு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட வேண்டும். இந்த தீப வழிபாட்டை செய்ய, செய்ய வீட்டில் அஷ்டலட்சுமி வாசம் செய்வதோடு, மாங்கல்யம் பலம் பெற முடியும். இதனால் குடும்பத்தினர் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வசதியாக வாழ்வார்கள்.

    நிம்ப தீபம்

    நிம்பதீபம் என்பது இலுப்பை எண்ணை ஊற்றி ஏற்றப்படும் விளக்கு ஆகும். பேய்கள் அகலுவதற்காக நிம்ப தீபம் ஏற்றுவதுண்டு. மேலும் மாரியம்மன் திருவருள் பெற இந்த விளக்கை முறைப்படி ஏற்ற வேண்டும். நிம்ப தீபத்தை புதுஅகண்டம், அகல் இவைகளில் ஏற்ற வேண்டும். வீடுகளிலும் இத்தீபத்தை ஏற்றலாம்.

    பஞ்ச தீப எண்ணை

    தேங்காய் எண்ணை, விளக்கு எண்ணை, வேப்ப எண்ணை, இலுப்ப எண்ணை மற்றும் பசு நெய் கலந்த எண்ணையே பஞ்ச தீப எண்ணை எனப்படும். பஞ்ச தீப எண்ணையால் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

    இதை ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வெண்குஷ்டம் முதலிய தோல் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் துன்புறுவோர் தங்கள் உபாதைகள் நீங்கிச் சுகம் பெறுவார்கள். நரம்புத் தளர்ச்சி நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த கண் கண்ட மருந்தாகும். தேவி உபாசகர்கள், தங்கள் தேவியை மகிழ்விக்க, பஞ்சமி திதியில் மேற்கண்ட பஞ்ச தீப எண்ணை ஊற்றி, பஞ்ச தீபம்(5-சுடர்) ஏற்றி வழிபட்டு வந்தால் அம்பிகையின் பூரண அருள்கிட்டும்.

    மங்களகவுரீ தீப பூஜை

    ஆவணி மாதம், செவ்வாய்க்கிழமை அம்பிகை அவதரித்த நாள். அன்று ஒளிமயமானதேவியை தீபத்தில் பூஜிப்பது மிகவும் நல்லது. ஆவணி மாதம் எல்லா செவ்வாய்க்கிழமைகளில் தேவியை தீபத்தில் பூஜிக்க வேண்டும். கன்னியாக இருக்கும் போது தந்தை வீட்டில் ஒரு வருஷமும், கணவர் வீட்டில் நான்கு வருஷங்களும் இந்த பூஜையை விரதமாக ஏற்று முடிக்க வேண்டும். இதற்கு சிரவண மங்கள விரதம் என்று பெயர். தீர்க்க சுமங்கலியாக இருப்பதே இதன் முக்கிய பலன்.

    விளக்கொளி பெருமாள்

    சிவபெருமான் ஜோதியாக விளங்கியது போல மகாவிஷ்ணுவும் ஜோதியாக விளங்கியிருக்கிறார். இதை உணர்த்த காஞ்சிபுரத்தில் தீபப் பிரகாசர் என்ற பெயருடன் ஒரு பெருமாள் கோவில் உள்ளது. அங்குள்ள பெருமாளை விளக்கொளி பெருமாள் என்று அழைக்கிறார்கள். தீப பூஜையில் மகாவிஷ்ணுவை ஆவாஹனம் செய்யும்போது இந்தப்பெருமாளை தியானிப்பது மிகவும் விசேஷம். இத்தலத்திற்குத் திருத்தண்கா, தூப்புல் என்ற பெயர் வழங்குகிறது.

    தீப பிரசட்சணம்

    தீபத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தை பிரதசட்ணம் வருவதில் பெரும் புண்ணியம் உண்டு. கன்னிப்பெண்கள் இப்படி தீபத்துடன் பிரதட்சணம் செய்தால் அவர்களுக்கு சீக்கிரமே திருமணம் கைகூடும்.

    திருக்கோவிலூர், தபோவனம் ஸ்ரீஞான ஆனந்த சுவாமிகள் மடத்தில் இந்த வழக்கம் தினமும் பின்பற்றப்படுகிறது. அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பு ஒரு கன்னிப்பெண் 5 முகம் ஏற்றிய தீபத்தை கையில் ஏந்திவர அவர்களுடன் எல்லோரும் சேர்ந்து, தீபஜோதியே வருவாய் என்று பாடிக்கொண்டு ஆஸ்ரமத்தை வலம் வருவார்கள்.

    திருவிளக்கு தந்த அரச பிறவிஷ

    வேதாரண்யம், வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் விளக்கு சற்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தபொழுது விளக்கில் ஊற்றப்பட்டிருந்த நெய்யை உண்ணுவதற்காக சென்ற எலி தன முக்கினால் திரியை அப்பால் நகர்த்திவிட தீபம் சுடர்விட்டு எரிந்ததாம். எலியின் செயல் எப்படியிருந்தபோதும், தீபம் சுடர்விட்டு எரியச் செய்த கைங்கரியத்திற்காக அந்த எலியை இறைவன் அடுத்த பிறவியில் மகாபலி சக்கவர்த்தியாகப் பிறக்கச் செய்தார் என்று அப்பர் சுவாமிகள் தனது திருக்குறுகை பதிகத்தில் எட்டாம் திருப்பாட்டில் எழுதியுள்ளார்.

    முதலை உணர்த்திய விளக்குத் தத்துவம்

    முற்காலத்தில் சாப்பிடும்போது விளக்கு அணைந்தால் அத்துடன் எழுந்து விடுவது வழக்கம். இதற்கு எடுத்துக்காட்டா ஆதிசங்கரர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

    ஆதிசங்கரர் சிறுவனாக இருந்த போது ஆற்றுக்குச் சென்றார். அப்போது இரவுக் காலம். அவருடைய காலை ஒரு முதலை பிடித்துக்கொண்டது. அப்போது என் தாயாரிடம் சொல்லிவிட்டு வருகிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டு சங்கரர் அன்னையிடம் வந்து நடந்ததைக் கூறினார்.

    சங்கரர் ஆற்றிற்குத் திரும்பியபோது அவர் அன்னை ஒரு எரிகிற விளக்கை மரக்காலுக்குள் மறைத்துக்கொண்டு வந்தாள். முதலை சங்கரரின் காலைப் பிடித்து உண்ண ஆரம்பித்தது. பின்னால் நின்ற அன்னை மூடியிருந்த விளக்கை திடீரென்று வெளியே காட்டி உடனே அணைத்து விட்டார். தீய சகுணம் ஏற்பட்டு விட்டதால் முதலை அவரை உண்ணாமல் விட்டது. சங்கரர் உயிர் தப்பினார்.

    அகண்ட தீபம்

    அகண்ட தீபம் என்பது எண்ணிக்கையில் அடங்காத வண்ணம் நிரம்ப விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வதைக் குறிக்கும். இந்தச் சிறப்பு வழிபாடு திருநெல்வேலி, நெல்லையப்பர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.

    கோடி தீபம்

    ஆலயங்களில் உலக நன்மைகாக குறிப்பிட்ட காலத்திற்குள் கோடி தீபம் ஏற்றுவதாக வேண்டிக்கொண்டு, வரும் பக்தர்களைக் கொண்டு கோடிதீப ஏற்றுவதுண்டு. இதுபோன்று கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனுக்கு உலக நன்மைக்காக கோடி தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

    ×