search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிரம்"

    • சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை என தயாரிக்கப்படுகிறது.
    • இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இனிப்பு பலகாரம் செய்யும் நிறுவனங்கள், அதிக அளவில் இனிப்புகளை செய்வர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.இவை மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை என தயாரிக்கப்படுகிறது.

    தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல சந்தைக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனை வியாபாரிகள் வாங்கி பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இனிப்பு பலகாரம் செய்யும் நிறுவனங்கள், அதிக அளவில் இனிப்புகளை செய்வர். இதனால் அதிக அளவில் வெல்லம் தேவைப்படுவதால், வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வெல்ல சிப்பங்களை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். எனவே வெல்லம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 200க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தொழிலாளர்கள் இரவு, பகலாக உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் தயார் செய்து அவ்வப்போது வியாபாரிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

    • வருகிற 30ந் தேதி மாலை, முருகர் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.
    • வேலாயுதசாமி கோவில் உட்பட முருகன்கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

    அவினாசி:

    தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் இருந்து கந்தசஷ்டி விழா துவங்குகிறது. வருகிற , 25ந் தேதி காலை முருக பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜையை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து தினமும் காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜையும், கந்தசஷ்டி பாராயணமும் நடைபெறும்.வருகிற 30ந் தேதி மாலை, முருகர் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமாள் கோவில், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வர சுவாமி கோவில்.காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், அலகுமலை முத்துக்குமாரசாமி கோவில், மங்கலம் மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில் உட்பட முருகன்கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

    • குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் சின்னவெங்காய பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்
    • நல்ல செழித்து வளர்ந்துள்ள பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 6 டன் வரை கிடைக்கும்

    குண்டடம் :

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது ;-

    குண்டடம் பகுதி வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம், மேலும் இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.

    தற்போது இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காயத்தின் விலை உயர்த்துள்ளதை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துளளனர் இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 70 ஆயிரம் வரை செலவாகிறது100 நாட்களில் அறுவடை செய்யலாம். நல்ல செழித்து வளர்ந்துள்ள பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 6 டன் வரை கிடைக்கும். அதேபோல் சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினர்.

    • பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி
    • பஸ், ரெயில் நிலையங்களிலும் சோதனை

    நாகர்கோவில்:

    கோவை, சேலம், மதுரையை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் பாரதிய ஜனதா ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்திப்புகள், தலைவர்கள் சிலைகள், பாரதிய ஜனதா நிர்வாகிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நேற்று இரவு விடிய விடிய போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். இரண்டு ஷிப்டுகளாக கண்காணிப்பு பணி நடந்தது.நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    இன்று 2-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் ெரயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ரெயிலில் வரும் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ெரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, வள்ளி யூர், இரணியல், நாங்குநேரி, குழித்துறை ரெயில் நிலை யத்திலும் பாதுகாப்பு அதிக ரிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணு மாலய சாமி கோவில், மண்டைக் காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட அனைத்து கோவில்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அரசு அலுவலகங்களி லும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொது மக்கள் அனைவரும் பரிசோ தனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.பொதுமக்கள் கொண்டு வந்த பேக்குகள் முழுமை யாக சோதனை செய்யப்பட் டது.

    ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், களியக்கா விளை சோதனை சாவடி களிலும் போலீசார் போலீஸ் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங் களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் 1200 போலீ சார் ஈடுபட்டுள்ளனர்

    பாதுகாப்பு மாவட்டம் முழுவதும் பலப்படுத்தப்பட் டுள்ள நிலையில் பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
    • இதையொட்டி நீர் நிலைகளில் பொது மக்கள் புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    பவானி:

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் பொது மக்கள் புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் ெகாடுப்பது வழக்கம்.இதே போல் இந்த ஆண்டு புராட்டாசி அமா வாசை நாளை (ஞாயிற்றுக்கி ழமை) வரு கிறது.

    ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இக்கோவிலில் பின் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவேரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி பரிகார தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள்.

    பவானி கூடுதுறைக்கு புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினமான நாளை ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநில பக்தர்கள் என ஏராளமானோர் வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல், பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற பரிகாரங்களை செய்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொள்வார்கள்.

    வழக்கமாக பக்தர்கள் வருவார்கள். மகாளய அமாவாசை என்பதால் வழக்க த்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரு வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோவில் பின்பகுதியில் பல்வேறு இடங்களில் தற்காலிக இரும்பு செட் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆண்கள் மற்றும் பெண்கள் புனித நீராட தனித்தனியாக இரும்பு செட் அமைத்தும் அனைத்து விதமான முன்னேற்பாடு நடவடி–க்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேபோல் பக்தர்களுக்கு பரிகார பூஜைகளுக்கு தேவையான தேங்காய், வாழைப்பழம் உட்பட பல பொருட்கள் பிளாஸ்டிக் கேரி பேக் தவிர்த்து துணிப்பைகளில் பூஜை பொருட்கள் போடப்பட்டு பணியாளர்கள் மூலம் தயார் நிலையில் வைக்க ப்பட்டுள்ளன.

    மேலும் கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த பகுதியில் அசம்பா வித சம்பவங்கள் நடை பெறாமல் இருக்கும் பொருட்டு கோவில் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு பவானி போலீசார் மூலம் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளனர்.

    இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவில் கூடுதுறையில் நாளை மகாளய அமாவாசையை யொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • ஏர்வாடி பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • கடந்த ஜூன் மாதம் முதல் கட்ட கொசு மருந்து தெளிப்பு பணி நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் உள்ள ஏர்வாடி, வாலிநோக்கம், முந்தல், மாரியூர், ஒப்பிலான் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் வருடத்திற்கு 2 முறை வீடு, வீடாக சென்று கொசு மருந்து தெளிப்பான்கள் மூலம் தெளிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் கட்ட கொசு மருந்து தெளிப்பு பணி நடந்தது. இந்த நிலையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தலின் படி, சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரவீந்திரன் ஆகியோர் உத்தரவுப்படி நேற்று சின்ன ஏர்வாடி பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியை மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் தொடங்கி வைத்தார். 30 நாட்கள் நடைபெறும் இந்த பணியில் 30 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்களோடு இணைந்து டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் வீடு, வீடாக சென்று தண்ணீரில் வளரும் கொசுப்புழுக்களை அபேட் மருந்துகள் ஊற்றி அழித்து வருகின்றனர்.

    இந்த பணிகளை பரமக்குடி சுகாதாரத்துறை இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலசுப்பிரமணியன், கடலாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன் ஆய்வு செய்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் செல்லத்துரை, ராஜசேகரன், சுப்பிரமணியன், ராம்பிரபு, முரளிதரன், தீனதயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது அளக்குடி கிராமத்தில் ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டது.
    • பாறாங்கற்கள் மற்றும் பனை மரங்களை கொண்டு தற்காலிகமாக அடைத்து சரி செய்யப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரை பலவீனமாக உள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    கரை மெலிந்துள்ள பகுதிகளில் மணல் முட்டைகளை அடுக்கி பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கடந்த 2018ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது அளக்குடி கிராமத்தில் ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டது.

    அப்போது கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பாறாங்கற்கள் மற்றும் பனை மரங்களை கொண்டு தற்காலிகமாக அடைத்து சரி செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து இந்த வருடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து கரையை ஒட்டி அங்கேயே தயார் செய்யப்பட்ட மணல் மூட்டைகளை அடிக்கி பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கொள்ளிடம் ஆற்றின் மற்ற பகுதிகளில் பலவீனமான கரைப்பகுதியை பலப்படுத்தும் வகையிலும் பிரதான புது மண்ணியாறு, தெற்கு ராஜன் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை போட்டு சரி செய்யும் பணியில் 5000 மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்ட துணை இயக்குநர் தேவேந்திர குமார்மீனா மற்றும் வனச்சரகர் சதீஷ் ஆகியோர் பசு மாடு இறந்த 3 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினார்.
    • கால்நடைகளை புலி நடமாட்டம் உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என அறிவுருத்தினர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு,காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சேசன் நகர் பகுதியைச் சேர்ந்த நாகமணி (40 ) என்பவர் பசு மாட்டை புலி அடித்து கொன்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்தனர்.

    இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்ட துணை இயக்குநர் தேவேந்திர குமார்மீனா மற்றும் வனச்சரகர் சதீஷ் ஆகியோர் பசு மாடு இறந்த 3 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினார்.

    பின்னர் கர்நாடக வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் கர்நாடக வனத்துறையுடன் இணைந்து புலி விவசாய தோட்டித்தில் புகாதவாறு கண்காணித்து புலியை அடந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கபடும் எனவும் கால்நடைகளை புலி நடமாட்டம் உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என அறிவுருத்தினர்.

    • போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளக்கப்படுகிறது மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • இந்த ஒப்பந்தபுள்ளிக்கு வருகின்ற ஆகஸ்ட் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

    அவனியாபுரம்

    மதுரை விமான நிலை யத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் விரிவாக்கப்பட்ட விமான நிலைய வளாகத் தினைச் சுற்றி ரூ.35 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தபுள்ளி வெளியிடப்ப ட்டுள்ளது.

    மதுரை விமான நிலையம் 1942 இல் இரண்டாம் உலகப்போரின்போது அமைக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு முதல் பயணி கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பயணிகள், விமானங்கள் அதிகரித்ததன்பேரில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதிய விமான நிலைய முனைய கட்டடம் கட்டப்பட்டது.

    2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் இருந்து இலங்கைக்கு(கொழும்பு)முதல் வெளிநாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. தொடர்ந்து சரக்கு போக்குவரத்து விமான முனையம் கட்டப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. தென்மாவட்ட மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் மதுரை விமான நிலையத்தில் பன்னாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது.

    சர்வதேச விமான நிலையமாகாத நிலையில் சுங்க பயன்பாடு உள்ள விமான நிலைய அந்தஸ்தை கொடுத்து மதுரையிலிருந்து துபை, சிங்கப்பூர் நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிகளவிலான பயணி களை கையாண்டுவரும் மதுரை விமான நிலையம் இந்திய அளவில் பரபரப்பாக இயங்கும் விமான நிலை யங்களில் 36-வது இடத்தை பெற்றுள்ளது.

    மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க பெரிய விமானங்கள்(ஏர்பஸ் வகை) வந்து இறங்கி செல்லும் வகையில், தற்போது உள்ள ஓடு பாதை நீளம் 7 ஆயிரத்து 500 அடியிலிருந்து, 12 ஆயிரத்து 500 அடியாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக விமான நிலையத்தைசுற்றியுள்ள 610 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 100 ஏக்கர் அரசு(புறம்போக்கு)நிலங்களைத் தவிர்த்து மீதி உள்ள இடங்களை அந்தந்த நில உரிமையாளர்களிடமிருந்து பணம் கொடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது .

    இதையடுத்து தமிழக அரசு விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விமான நிலைய ஆணையத்திடம் விரைவில் ஒப்படைக்கப்பட இருப்பதை அடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் கைப்பற்றப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ரூ.35 கோடி ஒப்பந்தபுள்ளி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தபுள்ளிக்கு வருகின்ற ஆகஸ்ட் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு 14 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக விமானங்கள் நிற்பதற்கு என ஏழு விமான நிறுத்த இடம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக வான்வெளி கட்டுப்பாட்டு மையம் ரூ.97 கோடியே 44 லட்சம் செலவில் அமைக்க ஒப்பந்தபுள்ளி விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் சுற்றுச்சாலையில் வாகனங்கள் செல்வதற்கு அண்டர் பாஸ் முறையில் பாலம் அமைக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. புதிதாக சரக்கு போக்கு வரத்திற்கு என கட்டடம் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று விமான நிலையம் பின்புறம் உள்ள பரமபட்டி பகுதியில் நில அளக்கும் பணி நடை பெற்றது இந்த பணிக்கு இடையூறாக யாரும் இருந்துவிடக் கூடாது என்ப தற்காக 100-ம் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது

    இப்பணிகள் அனை த்தையும் முடிக்கப்படும் நிலையில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பது மதுரை மட்டுமல்லாது தென்மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • சேலம் ரெயில்வே கோட்டத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடங்களில் ஒன்றாக சேலம் மேட்டூர் ரெயில் பாதை உள்ளது.
    • இந்த நிலையில் சேலம் ஓமலூர் இடையே 11 கிலோமீட்டர் நீளத்திற்கு ஈரோட்டில் ரெயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடங்களில் ஒன்றாக சேலம் மேட்டூர் ரெயில் பாதை உள்ளது. மேட்டூரில் உள்ள தொழிற்சா லைகளுக்கு தேவையான கச்சா பொருட்கள், மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு தேவைப்படும் நிலக்கரி உள்ளிட்டவை கொண்டு வருவதற்கும் மேட்டூரில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவும் சேலம் மேட்டூர் ரெயில்வே வழித்தடம் பயனுள்ளதாக உள்ளது .

    சேலம் மேட்டூர் வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க வசதியாக இந்த பாதையை இரட்டை வழித்தடமாக மாற்றும் பணி கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது .அதில் சேலம் ஓமலூர் மற்றும் ஓமலூர்-மேட்டூர் இடையே என இரண்டு பிரிவுகளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    முதல் கட்டமாக மேட்டூர் ஓமலூர் இடையே இரட்டை பாதை அமைக்கப்பட்டு ரெயில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் சேலம் ஓமலூர் இடையே 11 கிலோமீட்டர் நீளத்திற்கு ஈரோட்டில் ரெயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

    இந்த பணி ரூ. 40 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நிலையில் மின்சார பாதை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓமலூர்-மேட்டூர் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு முடிவற்ற நிலையில் சேலம் ஜங்ஷனுடன் ஓமலூர் இரட்டை ரெயில் பாதையை இணைக்கும் வகையில் பணிகள் நிறைவு நிலைக்கு நெருங்கி வருகிறது.பெருமளவு பணிகள் முடிவடைந்துள்ளதால் வரும் அக்டோபர் மாதத்திற்குள் ஒட்டுமொத்த பணிகளும் நிறைவடையும். அதன்பின்னர் சேலம்-ஓமலூர் மேட்டூர் இடையே மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரெயில் பாதையில் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் பல வார்டுகளில் தூய்மை பணி செயல்படுத்தி, நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் என்று கூறியதுடன் மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் பல வார்டுகளில் தூய்மை பணி செயல்படுத்தி, நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    நேற்று போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள கோம்புப்பள்ளம் தூய்மை பணி, ஜே.கே.கே. சாலை, சுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு செயல்படுத்தப்பட்டது. அப்போது கமிஷனர் விஜயகுமார் பேசுகையில், பொதுமக்கள், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட தொழில் நிறுவனத்தார் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும், தெருக்களில், கோம்புப் பள்ளத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது. தூய்மையான நகராட்சியாக இருக்க ஒத்துழைப்பு தாருங்கள் என்றார்.

    குப்பைகள் கொட்டக்கூ டாது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என பல இடங்களில் போர்டுகள் வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் என்று கூறியதுடன் மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    மேலும் 50 மரக்கன்று கள் நடப்பட்டன இதில்

    பொறியாளர் ராஜேந்தி ரன், சுகாதார அலுவ லர் ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் செல்வ ராஜ், சந்தானகிருஷ்ணன், கவுன்சிலர் நந்தினிதேவி, கதிரவன் சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • தலைமையாசிரியர்கள் வாயிலாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது.
    • மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பற்றொப்பப் பதிவேடு பேணப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தின் கீழ் நிரப்பப்பட உள்ளன.இதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டன. அவ்வகையில் 2 ஆயிரத்து 213 பேர் இப்பணிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

    இப்பணிக்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு காலிப்பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தால் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்படவும் உள்ளது.

    அதன்படி மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 86 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும் 54 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிடங்களும் காலியாக உள்ளன. இப்பணியிடத்திற்கு டி.டி.எட்., பி.எட்., மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட டிகிரிகளுடன் பி.எட்., மற்றும் எம்.எட்., படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் அல்லது மூத்த ஆசிரியரைக்கொண்ட குழு சரிபார்த்து, தகுதியானவர்களை வகுப்பறையில் டெமோ பாடம் நடத்த அறிவுறுத்தப்படும்.அதன் வாயிலாக அவர்களின் தனித்திறன் கண்டறியப்படுகிறது.

    தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, தனியாக வருகைப்பதிவேடு மற்றும் மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பற்றொப்பப் பதிவேடு பேணப்படும்.குறிப்பாகதேர்வுக்குழுவால், தேர்வு செய்யப்பட்ட பட்டியல் விபரம் வருகிற 18ந்தேதி முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.பின் 19-ந்தேதி ஏற்கப்பட்ட தற்காலிக நியமனத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதல் பெறப்படும். 20-ந்தேதி தற்காலிக நியமனம் பெற்றவர் பள்ளியில் சேர்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×