search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kundadam"

    • தொண்டர்கள் திரளான கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
    • நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும்.

     வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் மூலனூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. ஒன்றிய நகர பூத் கமிட்டி மற்றும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், நகர செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கலந்து கொண்டு பேசியதாவது :- வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வருகைதர உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து ஒன்றிய நகர பேரூராட்சி பகுதியில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடி பூத்துக்கும் 18 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து அதில் இளைஞர், இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர்கள் ஆகியோரை இடம்பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.வெங்கடேசசுதர்சன் உள்ளிட்ட மாவட்ட ,ஒன்றி,ய நகர ,கிளைக்கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் சின்னவெங்காய பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்
    • நல்ல செழித்து வளர்ந்துள்ள பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 6 டன் வரை கிடைக்கும்

    குண்டடம் :

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது ;-

    குண்டடம் பகுதி வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம், மேலும் இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.

    தற்போது இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காயத்தின் விலை உயர்த்துள்ளதை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துளளனர் இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 70 ஆயிரம் வரை செலவாகிறது100 நாட்களில் அறுவடை செய்யலாம். நல்ல செழித்து வளர்ந்துள்ள பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 6 டன் வரை கிடைக்கும். அதேபோல் சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினர்.

    • பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் பயிர் செய்து வருகின்றனர்.
    • சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது.

    குண்டடம் :

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர்.அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இது குறித்து விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது :-குண்டடம் பகுதி பொதுவாகவே வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி .ஏ. பி .பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம்.

    மேலும் இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துள்ளனர் .இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 1லட்சம் வரை செலவாகிறது.

    இப்பகுதி விவசாயிகள் விதை மற்றும் காய் நடவு மற்றும் நாற்று நடவு என ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடை செய்து வருகின்றனர். ஏக்கருக்கு 7 டன் வீதம் கிடைக்கவேண்டிய மகசூல் 3 டன் வரை மட்டுமே கிடைத்தது .மேலும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20முதல் 30 வரை விற்பதால் ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை நஷ்டமடைந்துள்ளனர்.

    தற்போது அறுவடை செய்யும் பயிர்களின் மூலம் வருவாய் கிடைத்தால் மட்டுமே வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கும் என்ற நிலையில் உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர்செய்து ஆட்கள் பற்றாக்குறை சமாளித்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கவலை அடைந்துள்ளனர். எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆம்னி பஸ் பலத்த சேதம் அடைந்தது.
    • விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனத்தையும் டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    காங்கேயம் :

    நெல்லையில் இருந்து இன்று ஆம்னி பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. குண்டடம் நால்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் நேருக்கு நேர் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் ஆம்னி பஸ் பலத்த சேதம் அடைந்தது. இதில் பஸ்சில் பயணித்த திருப்பூர் முதலிப்பாளையத்தை சேர்ந்த சிவசுப்ரமணி (வயது42) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டடம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும் டிரைவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஆங்காங்கே பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதான குழாய் உடைந்துவிட்டது.

    குண்டடம் :

    காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் காவிரியாற்றிலிருந்து முத்தூா், காங்கயம், ஊதியூா் வழியாக குழாய் அமைத்து குண்டடம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பல்லடத்தை அடுத்துள்ள கள்ளிப்பாளையம் முதல் குண்டடம் வரையிலான சாலையை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதுடன், ஆங்காங்கே பாலப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே ருத்ராவதியில் பெரிய அளவிலான பாலம் அமைக்கும் பணியின்போது காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதான குழாய் உடைந்துவிட்டது.

    பெரியபாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் குடிநீா்க் குழாய் இணைப்பை சரிசெய்ய முடியவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக மேட்டுக்கடை நீரேற்று நிலையத்தில் இருந்து (ஜம்ப்) கடந்த ஜூன் 16 ந் தேதி முதல் வெருவேடம்பாளையம், முத்தியம்பட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீா் செல்லாமல் தடைபட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, நந்தவனம்பாளையம், கொக்கம்பாளையம், முத்தியம்பட்டி, பெரியகுமாரபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட 35க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் கடந்த 40 நாட்களுக்கும் மேலாகத் தடைபட்டுள்ளது.

    இது குறித்து குண்டடம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: - உள்ளூா் ஊராட்சிகள் மூலமாக விநியோகம் செய்யப்படும் ஆழ்துளைக் கிணற்று நீரில் உப்புத்தன்மை அதிக அளவில் உள்ளது. இதனால் குடிக்கவும், சமையல் செய்யவும் இந்த நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம்.எனவே, குழாய் உடைப்பை சரிசெய்து காவிரி குடிநீா் விநியோகம் செய்ய குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கே.எஸ்.பழனி சாமி முன்னிலையில் அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது,

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 24 ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித்திட்டம், ஒன்றிய பொது நிதி, முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள், தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டும் திட்டம்,

    கனிம மற்றும் சுரங்கப்பணிகள், 14 வது நிதிக்குழு மானிய பணிகள், நபார்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மற்றும் பிற துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஊராட்சி வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் மற்றும் சாக்கடை வசதிகள் ஆகியவை முழுமையாக கிடைத்திட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, ருத்ராவதி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டு பகுதிகளில் பேரூராட்சிகளின் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    இந்நிகழ்வின் போது, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன், காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு, தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர்வி. எஸ்.காளிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர்ச. பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு ர் ரமேஷ் குமார், குண்டடம் வட்டார வளர்ச்சி மணிகண்டன், கலைச்செல்வி, ருத்ராவதி பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×