search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "intensified"

    • டெங்கு தடுப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பணி மேற்கொண்டு வருகின்றனர்.
    • தண்ணீர் தொட்டியை தொண்டாமுத்தூர் செயல் அலுவலர் பழனியப்பன் கள‌ ஆய்வு செய்தார்.

    வடவள்ளி,

    தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தடுப்பு பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தொண்டாமுத்தூர் அனைத்து வார்டுகளிலும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    தேங்கி நிற்கும் தண்ணீர் தொட்டிகள், டயர்கள், போன்றவற்றில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா என்பதை கண்டுபிடித்து உடனடியாக அதை அப்புறப்படுத்தி மருந்து தெளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 7-வது வார்டு குபேரபுரி பகுதியில் ஒரு வீட்டில் தண்ணீர் தொட்டியை தொண்டாமுத்தூர் செயல் அலுவலர் பழனியப்பன் கள ஆய்வு செய்தார். 

    • புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தினர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இதை தொட ர்ந்து அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குற்ற செயல்கள் தடுப்பது குறித்து போலீ சாருக்கு அறிவுரை கூறி ஆய்வு செய்து வருகிறார்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி சீட்டுகள் விற்ப னை, குட்கா மற்றும் ரவுடிகள் செயல்பாடு போன்ற சட்ட விரோத செயல்களை ஒழிக்கவும், மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் போலீ சார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துகிறார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து அதை தடுக்க நடவடிக்கை வேண்டும். இதே போல் பொதுமக்கள் புகார் மற்றும் அவர்களது பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு உத்தரவின் படி புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் பு.புளியம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களை கண்காணித்து வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து பவானிசாகர் ரோடு, கோவை ரோடு, நால்ரோடு, சோதனை சாவடி பகுதி, நம்பியூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிர ப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

    • குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் சின்னவெங்காய பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்
    • நல்ல செழித்து வளர்ந்துள்ள பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 6 டன் வரை கிடைக்கும்

    குண்டடம் :

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது ;-

    குண்டடம் பகுதி வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம், மேலும் இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.

    தற்போது இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காயத்தின் விலை உயர்த்துள்ளதை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துளளனர் இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 70 ஆயிரம் வரை செலவாகிறது100 நாட்களில் அறுவடை செய்யலாம். நல்ல செழித்து வளர்ந்துள்ள பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 6 டன் வரை கிடைக்கும். அதேபோல் சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினர்.

    ×