போலீசார் வாகன சோதனை தீவிரம்

புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தினர்.
பு.புளியம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
பு.புளியம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
Published on

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இதை தொட ர்ந்து அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குற்ற செயல்கள் தடுப்பது குறித்து போலீ சாருக்கு அறிவுரை கூறி ஆய்வு செய்து வருகிறார்.

இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி சீட்டுகள் விற்ப னை, குட்கா மற்றும் ரவுடிகள் செயல்பாடு போன்ற சட்ட விரோத செயல்களை ஒழிக்கவும், மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் போலீ சார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துகிறார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து அதை தடுக்க நடவடிக்கை வேண்டும். இதே போல் பொதுமக்கள் புகார் மற்றும் அவர்களது பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு உத்தரவின் படி புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் பு.புளியம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களை கண்காணித்து வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பவானிசாகர் ரோடு, கோவை ரோடு, நால்ரோடு, சோதனை சாவடி பகுதி, நம்பியூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிர ப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com