search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vehicle Checks"

    • புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தினர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இதை தொட ர்ந்து அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குற்ற செயல்கள் தடுப்பது குறித்து போலீ சாருக்கு அறிவுரை கூறி ஆய்வு செய்து வருகிறார்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி சீட்டுகள் விற்ப னை, குட்கா மற்றும் ரவுடிகள் செயல்பாடு போன்ற சட்ட விரோத செயல்களை ஒழிக்கவும், மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் போலீ சார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துகிறார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து அதை தடுக்க நடவடிக்கை வேண்டும். இதே போல் பொதுமக்கள் புகார் மற்றும் அவர்களது பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு உத்தரவின் படி புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் பு.புளியம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களை கண்காணித்து வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து பவானிசாகர் ரோடு, கோவை ரோடு, நால்ரோடு, சோதனை சாவடி பகுதி, நம்பியூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிர ப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் 80 கோவில்கள், 65 மசூதிகள் போன்றவற்றில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே கோவை மாவட்டத்தின் அருகில் உள்ள திருப்பூர் மாவட்டத்திலும் சம்பவம் தொடர்பாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் நேரடி மேற்பார்வையில் 2 துணை கமிஷனர்கள் ,4 உதவி கமிஷனர்கள் தலைமையில் மாநகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 80 கோவில்கள், 65 மசூதிகள் போன்றவற்றில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுபோல் வெளிமாவட்டத்தில் இருந்து வருகிற கார்கள் அனைத்தும் சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், திருப்பூர் மாநகரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள லாட்ஜூகள் போன்றவற்றிலும் சோதனை நடந்து வருகிறது. வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளார்களா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுபோல் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் லாட்ஜில் அறை எடுத்து தங்கினாலோ அல்லது பொதுமக்களுக்கு அவ்வாறு தோன்றும் நபர்கள் யாரையாவது பார்த்தாலோ அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    ×