search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car explosion"

    • துருக்கி ஆதரவு பெற்ற குர்தீஷ் இன கிளர்ச்சியாளர் குழுவினர் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அஜாஜ் நகரில் கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    துருக்கி எல்லையையொட்டிய சிரியா நாட்டின் அஜாஜ் நகரில் உள்ள பிரபல சந்தை ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நேற்று திடீரென வெடிகுண்டு வெடித்தது.

    இந்த வெடிகுண்டு சம்பவத்தில், 8 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக, துருக்கி ஆதரவு பெற்ற குர்தீஷ் இன கிளர்ச்சியாளர் குழுவினர் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிரியாவில், இந்த நகரில் கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின்னர், நிலைமை அமைதியாக காணப்பட்டது.

    இந்நிலையில், இந்த பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டு உள்ளது. சிரியாவின் வடமேற்கு எல்லை பகுதியில் உள்ள முக்கிய நகரங்களில், கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நெருக்கடியான பகுதிகளில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் 80 கோவில்கள், 65 மசூதிகள் போன்றவற்றில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே கோவை மாவட்டத்தின் அருகில் உள்ள திருப்பூர் மாவட்டத்திலும் சம்பவம் தொடர்பாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் நேரடி மேற்பார்வையில் 2 துணை கமிஷனர்கள் ,4 உதவி கமிஷனர்கள் தலைமையில் மாநகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 80 கோவில்கள், 65 மசூதிகள் போன்றவற்றில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுபோல் வெளிமாவட்டத்தில் இருந்து வருகிற கார்கள் அனைத்தும் சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், திருப்பூர் மாநகரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள லாட்ஜூகள் போன்றவற்றிலும் சோதனை நடந்து வருகிறது. வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளார்களா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுபோல் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் லாட்ஜில் அறை எடுத்து தங்கினாலோ அல்லது பொதுமக்களுக்கு அவ்வாறு தோன்றும் நபர்கள் யாரையாவது பார்த்தாலோ அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஈராக்கின் திக்ரித் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். #Iraq #CarExplosion
    டமாஸ்கஸ்:

    ஈராக் நாட்டின் திக்ரித் பகுதியில் உள்ள உணவகம் அருகில் இன்று பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியானார்கள். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    அமெரிக்காவில் கார் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் காரின் அருகே நின்றுகொண்டிருந்த 3 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். #Pennsylvania #CarExplosion
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆலன்டவுன் என்கிற நகரம் உள்ளது. இங்கு உள்ள தெரு முனை ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 9.30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் காரின் அருகே நின்றுகொண்டிருந்த 3 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.



    இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    கார் வெடித்து சிதறியது எப்படி? இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    அதே சமயம் இது பயங்கரவாத தாக்குதல் கிடையாது என்றும் பொதுமக்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் போலீசார் உறுதிபட தெரிவித்தனர்.   #Pennsylvania #CarExplosion
    ×