search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "onion cultivation"

    • கடந்த ஆண்டு அதிக மழை உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதித்தது.
    • சின்னவெங்காய நாற்றுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்தனர்.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு இரு சீசன்களில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கும் சாகுபடியாக சின்னவெங்காயம் உள்ளது.இதனால் இச்சாகுபடியில் அதிக விளைச்சல் பெற விவசாயிகள் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். கடந்த ஆண்டு அதிக மழை உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதித்தது. போதிய விலையும் கிடைக்கவில்லை.

    இருப்பு வைத்தும் விலையில் மாற்றம் இல்லாததால், ஏமாற்றத்துடன் சின்னவெங்காயத்தை விற்பனை செய்தனர். இந்நிலையில் இந்த கோடை சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    முன்பு சின்னவெங்காயத்தை நேரடியாக நடும் முறையை பின்பற்றினர். பின்னர் வீரிய ரக விதைகளை நட்டனர். தற்போது விதைகளை கொண்டு மொத்தமாக, நாற்று உற்பத்தி செய்து குறிப்பிட்ட நாட்கள் வளரச்செய்து அதன் பின்னர் போதிய இடைவெளி விட்டு நாற்றுகளை நடவு செய்கின்றனர்.முன்பு நாற்றுக்கு தட்டுப்பாடு அதிகரித்து ஒரு பாத்தி அளவிலான சின்னவெங்காய நாற்றுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சின்னவெங்காயத்துக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதுடன் சாகுபடி செலவும் கூடுதலாகும். கோடை சீசனில் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் சாகுபடி பரப்பு குறைவாகவே இருக்கும். எனவே தேவை அதிகரித்து விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். வீரிய ரக விதைகளை தோட்டக்கலைத்துறை வாயிலாக வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • சின்ன வெங்காயம் விலை உயர்ந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டனர்.
    • அரசு எங்களிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் காய்கறிகள், மலர் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. எனவே இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டனர்.

    தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. உழவு கூலி, ஆட்கள் கூலி என அதிக அளவில் பணம் செலவு செய்துள்ள நிலையில் விைல கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இங்கு தக்காளி சாகுபடிக்கு அடுத்தபடியாக சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படு கின்றன.

    மழை கைகொடுத்த நிலையில் தற்போது பயிர்கள் செழித்து வளர்ந்து ள்ளன. பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயம் செய்து வரு கின்றோம்.

    இதற்கு விலை கிடை க்குமா என தெரிய வில்லை. பெரும்பாலும் இடைத்தர கர்கள் குறைந்த விலையில் வாங்கி காய்கறிகளை அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். எனவே அரசு எங்களிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

    • குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் சின்னவெங்காய பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்
    • நல்ல செழித்து வளர்ந்துள்ள பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 6 டன் வரை கிடைக்கும்

    குண்டடம் :

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது ;-

    குண்டடம் பகுதி வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம், மேலும் இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.

    தற்போது இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காயத்தின் விலை உயர்த்துள்ளதை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துளளனர் இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 70 ஆயிரம் வரை செலவாகிறது100 நாட்களில் அறுவடை செய்யலாம். நல்ல செழித்து வளர்ந்துள்ள பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 6 டன் வரை கிடைக்கும். அதேபோல் சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினர்.

    • வடமதுரை, அய்யலூர், எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் விவசாயிகள் தக்காளி மற்றும் வெங்காயம், பணப்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • பெரிய சால்கள் அமைத்து வெங்காயத்தை பதப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    வடமதுரை :

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் விவசாயிகள் தக்காளி மற்றும் வெங்காயம், பணப்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். ஒரு சில கிராமங்களில் தக்காளியை குப்பையில் கொட்டிச்செல்லும் அவலநிலையும் ஏற்பட்டது. இதனிடையே வெங்காயம் தங்களுக்கு போதிய வருமானத்தை கொடுக்கும் என்று ஏராளமான விவசாயிகள் வெங்காய சாகுபடி செய்திருந்தனர்.

    இப்பகுதியில் நல்ல மழை பெய்தபோதும் வெங்காயத்திற்கும் போதிய விலை கிடைக்கவில்லை. தற்போது விவசாயிகள் வெங்காய அறுவடை பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அறுவடை செய்த வெங்காயத்தினை சால் அமைத்து பதப்படுத்தும் பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது. நல்ல விலை கிடைக்கும் போது விற்கலாம் என நம்பி பெரிய பெரிய சால்கள் அமைத்து பதப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    ×