search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டடம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பால் 40 நாட்களாக குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்
    X

    கோப்புபடம்.

    குண்டடம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பால் 40 நாட்களாக குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்

    • ஆங்காங்கே பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதான குழாய் உடைந்துவிட்டது.

    குண்டடம் :

    காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் காவிரியாற்றிலிருந்து முத்தூா், காங்கயம், ஊதியூா் வழியாக குழாய் அமைத்து குண்டடம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பல்லடத்தை அடுத்துள்ள கள்ளிப்பாளையம் முதல் குண்டடம் வரையிலான சாலையை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதுடன், ஆங்காங்கே பாலப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே ருத்ராவதியில் பெரிய அளவிலான பாலம் அமைக்கும் பணியின்போது காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதான குழாய் உடைந்துவிட்டது.

    பெரியபாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் குடிநீா்க் குழாய் இணைப்பை சரிசெய்ய முடியவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக மேட்டுக்கடை நீரேற்று நிலையத்தில் இருந்து (ஜம்ப்) கடந்த ஜூன் 16 ந் தேதி முதல் வெருவேடம்பாளையம், முத்தியம்பட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீா் செல்லாமல் தடைபட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, நந்தவனம்பாளையம், கொக்கம்பாளையம், முத்தியம்பட்டி, பெரியகுமாரபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட 35க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் கடந்த 40 நாட்களுக்கும் மேலாகத் தடைபட்டுள்ளது.

    இது குறித்து குண்டடம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: - உள்ளூா் ஊராட்சிகள் மூலமாக விநியோகம் செய்யப்படும் ஆழ்துளைக் கிணற்று நீரில் உப்புத்தன்மை அதிக அளவில் உள்ளது. இதனால் குடிக்கவும், சமையல் செய்யவும் இந்த நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம்.எனவே, குழாய் உடைப்பை சரிசெய்து காவிரி குடிநீா் விநியோகம் செய்ய குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    Next Story
    ×