search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிரம்"

    • ராஜா (வயது 35). இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
    • றிது நேரம் கழித்து அன்னலட்சுமி வந்து பார்த்த போது, 2 வயது ஆண் குழந்தையை காணவில்லை.

    விழுப்புரம்:

          வானூர் அருகேயுள்ள காசிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 35). இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இவர்கள் குடும்பத்துடன் பூத்துறை கிராமத்தில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் தங்கி, விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். இன்று காலையில் கணவன், மனைவி 2 பேரும் விவசாய வேலைக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகள் 3 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து அன்னலட்சுமி வந்து பார்த்த போது, 2 வயது ஆண் குழந்தையை காணவில்லை. மற்ற குழந்தைகளிடம் விசாரித்த போது, 2 வயது குழந்தை கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டி ருந்தது அன்னலட்சுமிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது கணவர் ராஜாவிடம் நடந்ததை கூறினார். கிணற்றில் குதித்து ராஜா குழந்தையை தேடினார். இதில் குழந்தை கிடைக்காத தால், ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்தனர். வானூர் தீயணைப்பு அலுவலர் ராஜா தலைமையில் வந்த வீரர்கள், கிணற்றில் குதித்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 10 மணி வரை குழந்தை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமை தாங்கினார்
    • கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது

    கடலூர்:

    :கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சலீம், மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கடலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான அருட் செல்வம், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் படிவங்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டு, புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடலூர் மாநகராட்சி தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா கூறுகையில், 

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்ட தி.மு.க . பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர் சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சியின் சாதனைகளை குறித்தும், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் கடலூரில் நடைபெற்று வரும் ஏராளமான வளர்ச்சி பணிகள் மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்று வருவதை மக்களிடம் எடுத்துக் கூறி வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் கடலூர் மாநகரத்தில் ஒவ்வொரு வார்டுகளிலும் சுமார் 1,500 முதல் 2 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் 

    • வருவாய் இழப்பை தடுக்க வரி வசூலில் தீவிரம் காட்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள்.
    • வரிவசூல் செய்வதன் மூலம் கிராமங்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம். கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அபிராமம் பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நிதி ஆதாரத்தை பெருக்க குடிநீர், தொழில்வரி, வீட்டு வரி உள்பட ஊராட்சி சம்பந்தமான அனைத்து வரிகளையும் இன்றுக்குள் (31-ந் தேதி) முழுமையாக முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 436 ஊராட்சிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஊராட்சிகள் நிதி ஆதாரத்தை பெருக்க குடிநீர், தொழில்வரி, வீட்டு வரி, நூலக வரி, சொத்து வரி போன்றவற்றின் மூலம் நிதி தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது.

    அதேபோல் கமுதி யூனியனில் உள்ள அச்சங்குளம், நத்தம். வங்காருபுரம், உடைய நாதபுரம், நகரத்தார் குறிச்சி, டி.புனவாசல், பாப்பணம் உள்பட 53 ஊராட்சிகளில் குடிநீர் கட்டணம், சொத்துவரி, தொழில்வரி, நூலக வரி போன்றவரிகள் வசூல் செய்யப்படுகிறது. மார்ச் இறுதிக்குள் (இன்றுக்குள்) முழுமையாக வரி வசூல் செய்யும் பணி நடந்துவருகிறது.

    இதற்காக ஊராட்சி செயலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தினமும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வரி வசூல் செய்து உடனடியாக ரசீது வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூறுகையில், ஊராட்சிகளில் வருவாய் இழப்பை சரி செய்ய வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 31-க்குள் முழுமை யாக வரி வசூல் செய்யும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். வரிவசூல் செய்வதன் மூலம் கிராமங்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை செய்வதற்கு மாநில நிதிக்குழு மூலம் கூடுதல் நிதி ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் மீது, கொலை, கொலை முயற்சி உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
    • கடந்த 5-ந்தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் பள்ளிப்பட்டி யைச் சேர்ந்த இளைஞர் பிரபாகர னுடன், காட்டூர் இடுகாடு அருகே சென்று கொண்டிருந்த ஆனந்தனை, பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த கும்பல், கொடூரமாக வெட்டிச்சாய்த்து கொலை செய்தது.

    வாழப்பாடி:

    சேலம் அயோத்தி யாப்பட்டணம் அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் மீது, கொலை, கொலை முயற்சி உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 5-ந்தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் பள்ளிப்பட்டி யைச் சேர்ந்த இளைஞர் பிரபாகர னுடன், காட்டூர் இடுகாடு அருகே சென்று கொண்டிருந்த ஆனந்தனை, பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த கும்பல், கொடூரமாக வெட்டிச்சாய்த்து கொலை செய்தது.

    இந்த கும்பல் தாக்கி யதில், ஆனந்தனுடன் சென்ற பிரபாகரன் படுகாய மடைந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி

    களை கைது செய்த தனிப்படை அமைக்கப்பட்ட போலீசார் நடத்திய விசா ரணையில், கொலையுண்ட ஆனந்திற்கும், இதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான அன்பழகன் என்ற மற்றொரு ரவுடி கும்பலுக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து, இந்த கும்பலைச் சேர்ந்த சிலரை தனிப்படை போலீசார் பிடித்து, வாழப்பாடிஅருகே ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த காட்டூர் பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மற்றும் இவரது கூட்டாளிகளான சக்திவேல், வெள்ளியம்பட்டியைச் சேர்ந்த அஜீத்குமார், மணிகண்டன் ஆகிய 4 பேரும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணமடைந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அன்பழகனின் கூட்டாளி களான வலசையூரைச் சேர்ந்த சீனிவாசன், (31).

    வெள்ளியம்பட்டி பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா (35). ஆகிய 2 இளைஞர்களையும், காரிப்பட்டி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பிருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்திட முடிவு செய்துள்ளனர்.

    • இறைச்சி கோழிகளுடன் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
    • பறவை காய்ச்சல் எதிரொலி

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பறவை காய்ச்சல் பல்வேறு பகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    முதலில் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது திருவனந்தபுரம் மாவட்டத்திலும் இது பரவி உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

    வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள், கோழிகள், வாத்துகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதற்கி டையில் பண்ணை களில் கோழிகள் பாதி க்கப்பட்ட தால், அங்குள்ள கோழிகள், வாத்துகளை அழிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பறவை காய்ச்சல், பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது இல்லை என்றாலும், உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவ வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள குமரி மாவட்டம் படர்ந்தாலுமூடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கேரள வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பறவைகள், கறிக்கோழிகள் ஏற்றி வரும் பெரும்பாலான வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றன. சில வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

    தற்போது பறவை காய்ச்சல், கேரளாவில் தீவிரமடைந்துள்ளதால், அங்கிருந்து கறிக்கோழிகள், கோழிக் குஞ்சுகள், தீவனம், முட்டை போன்றவை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. படந்தாலுமூடு சோதனை சாவடி யில் 3 குழுக்களும், காக்க விளையில் ஒரு குழுவும் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

    • சேலத்தில் செவ்வாய்பேட்டை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெள்ளிப் பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
    • பொங்கலையொட்டி ஆர்டர்கள் அதிகரித்து வருவதால், சேலம் வெள்ளி மார்க்கெட் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது.தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலத்தில் செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, மணியனூர், தாதகாப்பட்டி, லைன்மேடு, கொண்டலாம்பட்டி, பள்ளப்பட்டி, சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகத்தான்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெள்ளிப் பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் கால் கொலுசுகள், அரைஞாண் கயிறு, சந்தன கிண்ணம், குங்குமச் சிமிழ், தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப் பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    குறிப்பாக வட மாநிலங்களில் சேலம் வெள்ளிப் பொருட்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. ஏனென்றால் சேலத்தில் தயார் செய்யப்படும் வெள்ளிப் பொருட்கள் சீக்கிரம் கருக்காது என்று அந்த பகுதியில் உள்ள மக்கள் மனதில் தனி நம்பிக்கை உள்ளது.

    பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெள்ளி வியாபாரிகள்,சேலம் வெள்ளி வியாபாரிகளிடம் கொலுசுகள் உள்ளிட்ட வெள்ளிப் பொருட்களுக்கு ஆர்டர்கள் தந்து வருகின்றனர்.

    பொங்கலையொட்டி ஆர்டர்கள் அதிகரித்து வருவதால், சேலம் வெள்ளி மார்க்கெட் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது.தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.

    இது குறித்து வெள்ளி வியாபாரிகள் கூறுகையில், "ஒவ்வோர் வருடமும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா மாநில வெள்ளி வியாபாரிகளும் சேலம் வெள்ளிவியாபாரிகளிடம் ஆர்டர்கள் தருவது வழக்கம் ஆகும். இந்த வருடம் பொங்கல் பண்டிகை, தை, மாசி மாதங்களில் அடுத்தடுத்து திருமண முகூர்த்த தினங்கள் வருவதால், கொலுசுகள் உள்ளிட்ட வெள்ளிப் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக 'லைட் வெயிட்' எனப்படும் எடை குறைவாக உள்ள கொலுசுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அந்த மாடல் கொலுசுகளை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறோம். கால்கொலுசுகளுக்கு அடுத்தப்படியாக அரைஞாண் கயிறு, டம்ளர்கள் உள்ளிட்டவை அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளிக்கட்டி ரூ.66 ஆயிரத்துக்கு விற்றது. கடந்த ஓராண்டாக தங்கம் , வெள்ளி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

    விலை உயர்வு இருந்த போதிலும், பொங்கல் பண்டிகை ஆர்டர்கள் அதிகளவில் வருவதன் காரணமாக, வெள்ளிப் பட்டறைகளில் உற்பத்தி மற்றும் வேலை நேரத்தை அதிகப்படுத்தி உள்ளோம். உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்களை அந்தந்த பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகிறோம். பொங்கலுக்கு முந்தைய நாள் வரை இந்த வேலைகள் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராசிபுரம் டவுன் மேட்டு தெருவில் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்து வருகிறது.
    • இதன்படி 32-வது ஆண்டாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 50 ஆயிரம் லட்டுகளை பிரசாதமாக வழங்க ஜனகல்யாண் இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் மேட்டு தெருவில் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்து வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு விழா வருகிற 2-ந் தேதி அதிகாலை 5 மணி அளவில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். பெருமாளை வணங்கும் பக்தர்கள் 10-நாட்களுக்கு விரதம் இருந்து பரமபத வாசல் வழியே வந்தால் மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பொன் வரதராஜ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் ராசிபுரம் ஜன கல்யாண் இயக்கத்தினர் லட்டு பிரசாதமாக வழங்கி வருகின்றனர். இதன்படி 32-வது ஆண்டாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 50 ஆயிரம் லட்டுகளை பிரசாதமாக வழங்க ஜனகல்யாண் இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

    லட்டுகள் தயாரிக்கும் பணி தனியார் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. இதற்காக 1000 கிலோ கடலை மாவு, 1000 கிலோ சர்க்கரை, 500 கிலோ நெய், 1000 லிட்டர் கடலை எண்ணெய், 25 கிலோ முந்திரி மற்றும் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், 5 கிலோ, திராட்சை 25 கிலோ உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு லட்டுகள் தயாரித்து வருகின்றனர். இந்த பணியில் 25-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஜன கல்யாண் இயக்க தலைவர் எஸ்.எம்.ஆர் பரந்தாமன், செயலாளர் மூர்த்தி, ராகவன், ரமேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்ற நிலையில் வரும் 6-ம் தேதி திருவண்ணாமலை தீப திருவிழா நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    புதுவை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பல தடவை தடைபட்டு தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது இதனால் ஆங்காங்கே சில இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்ற நிலையில் வரும் 6-ம் தேதி திருவண்ணாமலை தீப திருவிழா நடைபெற உள்ளது. இதில் தமிழகஆளுநர் ரவி கலந்து கொள்ள உள்ளார். மேலும் இதில் நீதிபதிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சென்னையில் இருந்து திண்டிவனம் , செஞ்சி வழியாகத்தான் திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும். இதனால் இப்போது தற்காலிகமாக பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் சாலைகள் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    இந்தச் சாலையின் வழியாக திருவண்ணாமலை தீபத்தன்று சென்னை புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது

    • நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை
    • வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை

    மடத்துக்குளம்,நவ.21-

    மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுப் பயிரான கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, கரும்புக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளிட்ட காரணங்களால் கரும்பு சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் குறைய தொடங்கியுள்ளது. தற்போது கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம் மட்டுமில்லாமல் சுற்று வட்டார தாலுகாக்களில் நடைபெற்று வரும் கரும்பு விவசாயத்தை அடிப்படையாக கொண்டு கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான கரும்பு விவசாயிகள் இந்த ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வழங்கி வந்தனர். இதனால் கரும்புக்கு சீரான விலை, நிரந்தர வருமானம் என்ற நிலை இருந்ததால் பல விவசாயிகள் ஆர்வமுடன் கரும்பு சாகுபடி செய்து வந்தனர்.

    இந்தநிலையில் சர்க்கரை ஆலையில் நிகழ்ந்த பல்வேறு குளறுபடிகளால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதாவது கரும்பு சாகுபடியை பொறுத்தவரை நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை செய்தால் மட்டுமே சரியான அளவில் சாறு இருக்கும். ஆனால் உரிய பருவத்தில் அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்காததால் சாறு வற்றி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பல கரும்பு விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு மாற்றுப்பயிர்களை நாடிச்சென்றனர்.

    சில விவசாயிகள் கரும்பை சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்யாமல், வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் உரிய பருவத்தில் அறுவடை செய்ய முடிவதுடன் லாபகரமானதாகவும் உள்ளது. அதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்துக்கு சரியான விலை கிடைக்காத நிலை நீடித்து வருவதால் பலரும் வெல்ல உற்பத்தியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

    இதே நிலை நீடித்தால் வெல்லம் உற்பத்தியாளர்களும் கரும்பை வாங்க தயங்கும் சூழல் ஏற்படும். இதனால் பணப்பயிராக கருதப்படும் கரும்பு சாகுபடி படிப்படியாக குறையும் நிலை ஏற்படும். எனவே கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். குறிப்பாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தி உரிய பருவத்தில், உரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். குளறுபடிகளைக் களைந்து உரிய பருவத்தில் விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தெரிவித்தனர்.
    • மழைக்கால பிரச்சினை தொடர்பாக அலுவலகத்தில் இது சம்பந்தமான அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. தலைவர் சண்முகவடிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் மீனாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தலைவர் பேசுகையில், திருப்பத்தூர் ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கண்மாய் மற்றும் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படாத வண்ணம் மணல் மூடைகளை அடுக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மழைக்கால பிரச்சினை தொடர்பாக அலுவலகத்தில் இது சம்பந்தமான அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    தொடர்ந்து கூட்டத்தில் சாலை வசதி, மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும், பிராமணபட்டி அங்கன்வாடி மையத்திற்கு மின்இணைப்பு வழங்க வேண்டும், ரணசிங்கபுரம் மின்நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும், கீழநிலை, நெடுமரம், வடக்கு இளையாத்தங்குடி பள்ளிகளை மேம்படுத்த வேண்டும், ஆ. தெக்கூர் அங்கன்வாடி மையத்தில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் ராமசாமி, சகாதேவன், சுமதி, கலைமகள்ராஜீ, கலைமாமணி, பழனியப்பன் ஆகியோர் வலியுறுத்தினர். இதற்கு அரசு பொறியாளர் பதிலளித்தார்.

    வேளாண் அலுவலர் தனலட்சுமி பயிர் காப்பீடு குறித்து எடுத்துரைத்தார். முன்னதாக மேலாளர் செழியன் வரவேற்றார். மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் இளையராஜா நன்றி கூறினார்.

    • நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • சம்பா மற்றும் தாளடி நடவு செய்த பிறகு சான்றிதழ் வழங்கப்படும்.

    பூதலூர்:

    பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சம்பா மற்றும் தாளடி‌ நெல் நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், நடவு பணிகளுக்கு மழை காரணமாக ஆட்கள் கிடைக்காததாலும் நடவு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில்‌ நடப்பாண்டு சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய நாளை மறுநாள் (15.11.22) அன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் பல கிராமங்களில் வாயல்களை நடவு பணிக்கு ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதி நாளை மறுநாள் என்று அறிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பா மற்றும் தாளடி நடவு செய்த பிறகு சான்றிதழ் வழங்க ப்படும் என்று தெரிவித்து விட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்து தர ஆவன செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • இந்த பணிகள் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறமும் தீவிரமாகநடந்து வருகிறது.
    • இந்த பணிகளுக்காக அந்த இடத்திற்கு அருகில் வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக பாதை விடப்பட்டுள்ளது.

    உடுமலை:

    மத்திய அரசின் 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலைஅமைக்கப்படுகிறது.

    உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி செல்லும் சாலையில் குறிஞ்சேரி அருகே சாலையின் குறுக்கே நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகள் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறமும் தீவிரமாகநடந்து வருகிறது.இந்த நிலையில் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே அமையும்நான்கு வழிச்சாலையின் இரண்டு புறங்களையும் இணைக்கும் வகையில்உயர்மட்டபாலம்கட்டும் பணிகள் தீவிரமாகநடந்து வருகிறது.இதில் தற்போது உயர் மட்டபாலத்தின் இருபுறங்களையும் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்த பணிகளுக்காக அந்த இடத்திற்கு அருகில் வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக பாதை விடப்பட்டுள்ளது. பஸ், லாரி, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அந்த தற்காலிக பாதை வழியாக சென்று வருகின்றன.பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே சாலையின் மேல்பகுதியில் நான்கு வழிச்சாலைக்கான உயர்மட்டபாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்நதும், அதன் கீழ்பகுதியில் வழக்கம் போல் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

    ×