search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை சீரமைக்கும் பணி"

    • மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
    • முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா சத்யநாராயணன் நன்றி கூறினார்.

    கூடுவாஞ்சேரி:

    வண்டலூர் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பிரதான சாலையை ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கவும், வண்டலூர்- வாலாஜாபாத் நோக்கி செல்லும் மேம்பாலம் கீழ்பகுதியில் காஞ்சிபுரம் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைப்ப தற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா காட்டாங் கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான வி.எஸ்.ஆராமுதன் தலைமையில் நடைபெற்றது. வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி விஜயராஜ், தி.மு.க. கிளை செயலாளர்கள் சத்ய நாராயணன், வாசு, காசி, லோகநாதன், குணசேகரன், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் செல்வம் எம்.பி., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக பூமி பூஜை போட்டு, அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினர்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ட ராகவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கெஜலட்சுமி சண்முகம், நெடுங்குன்றம் வனிதா ஸ்ரீசீனிவாசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வண்டலூர் குணசேகரன், காரணைப் புதுச்சேரி பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா சத்யநாராயணன் நன்றி கூறினார்.

    சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்ற நிலையில் வரும் 6-ம் தேதி திருவண்ணாமலை தீப திருவிழா நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    புதுவை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பல தடவை தடைபட்டு தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது இதனால் ஆங்காங்கே சில இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்ற நிலையில் வரும் 6-ம் தேதி திருவண்ணாமலை தீப திருவிழா நடைபெற உள்ளது. இதில் தமிழகஆளுநர் ரவி கலந்து கொள்ள உள்ளார். மேலும் இதில் நீதிபதிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சென்னையில் இருந்து திண்டிவனம் , செஞ்சி வழியாகத்தான் திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும். இதனால் இப்போது தற்காலிகமாக பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் சாலைகள் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    இந்தச் சாலையின் வழியாக திருவண்ணாமலை தீபத்தன்று சென்னை புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது

    ×