search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்மட்ட பாலம்"

    • அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்
    • 15 கிலோமீட்டர் பயண தூரம் குறையும்

    வேங்கிக்கால்:

    கலசபாக்கம் ஒன்றியத்தில் செய்யாற்றின் குறுக்கே பூண்டி பழங்கோவில், கீழ்பெத்தாரை பூவாம்பட்டு, கீழ் தாமரைப்பாக்கம், தென் மகா தேவமங்கலம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ.55 கோடியே 88 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று பூண்டி ஊராட் சியில் நடைபெற்றது.

    விழாவிற்கு கலெக்ட கலெக்டர் முரு கேஷ் தலைமை தாங்கினார். கலசபாக்கம் எம்.எல்.ஏ., பெ.சு.தி. சரவணன் முன்னிலை வகித்து பேசினார். கண்காணிப்பு பொறியாளர் தேவராஜ் வரவேற்றார். முதன்மை பொறியாளர் முருகேஷ் திட்ட விளக்க உரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, 3 உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:- கலசபாக்கம் தொகுதியில் தற்போது இந்த 3 உயர் மட்ட மேம்பாலங்களும் தொடர்ந்து என்னிடம் இத்தொகுதி எம். எல்.ஏ. சரவணன் வைத்த கோரிக்கையின் பேரில் கட்டப்படுகின்றன.

    இந்த 3 மேம்பாலங்கள் கட்டப்படுவதால் 27-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் அடைவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு சுமார் 15 கிலோமீட்டர் பயண தூரம் குறையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்திவேல்மாறன், சப்- கலெக்டர் தனலட்சுமி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்டப் பொறியாளர் ராஜ்குமார், ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், அன்பரசி ராஜசேகரன், சுந்தரபாண்டியன், துணைத் தலைவர் ரமணன், நகரமன்ற துணை தலைவர் சு.ராஜாங்கம், ஒப்பந்ததா ரர்கள் துரை வெங்கட், பிரியா விஜயரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மறையூர் - கட்டனூர் சாலையில் இருஞ்சிறை விலக்கு பகுதியில் அமைந்துள்ள மறையூர் கழுங்கு பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர்.

    இதனை யடுத்து பொது மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நெடுஞ்சாலைத்துறை மூலமாக உயர் மட்ட பாலம் அமைக்க திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நடவடிக்கை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் மறையூர் - கட்டனூர் சாலையில் சுமார் ரூ.69 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இந்த பால பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நெடுஞ் சாலைத்துறை அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.

    இந்த ஆய்வின் போது நரிக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கண்ணன், காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில்,ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ரூ.306 கோடியில் 2 இடங்களில் உயர்மட்ட பாலம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • இதனால் மதுரையின் இரண்டு முக்கிய சாலை களில் போக்குவரத்து நெரி சல் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் னில் நடைபெற்ற முத்துராம லிங்க தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்வ தற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்தார். இன்று காலை கோரிப்பாளையம் சந்திப் பில் பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.

    அதன்பின்னர் மதுரை மேலமடை சந்திப்பு பகுதியி ல் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண் டார். இதில் கோரிப்பாளை யம் சந்திப்பில் அமைய உள்ள மேம்பாலம், மேல மடை சந்திப்பில் அமைய உள்ள உயர்மட்ட பாலம் ஆகிய 2 பாலங்கள் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    மதுரையின் மிக முக்கிய கோரிப்பாளையம் சந்திப் பில் பாலம் கட்டுவதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. இருப்பினும் தற்போது தான் பணிகள் தொடங்கப்பட உள்ளன. மதுரை மாநகர் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது.

    குறிப்பாக மதுரை மாநக ரில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ள போக்கு வரத்து நெரிசலை கட்டுப்ப டுத்தும் வகையில் பல்வேறு பல்வேறு முயற்சிகளை போக்குவரத்து போலீசாரும், மாநகராட்சி மாவட்ட நிர்வா கமும் மேற்கொண்டு வரு கின்றனர்.

    அந்த வகையில் மதுரை யில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக கோரிப்பா ளையம், அண்ணா பஸ் நிலைய பகுதிகள் உள்ளன. இந்த சாலைகளில் சாதாரண நேரங்களில் கூட போக்கு வரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் கோரிப் பாளையம் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள் ளது. இந்த பாலத்தை 2 கி.மீ. நீளத்துக்கு அமைக்க திட்டமி டப்பட்டிருந்தது. சித்திரை திருவிழாவின் போது அழ கர் எழுந்தருளும் திருக்கண் மண்டபகாரர்கள் எதிர்ப்பை அடுத்து நீளம் 1.3 கி.மீ. ஆக குறைக்கபட்டுள்ளது.

    பாலத்திற்கு அடியில் சென்று பீ.பி.குளம் செல் லும் வகையில் அமைப்பு இருக்கும் என தெரிகிறது. மேலும் 5 பகுதிகளை இணைக்கும் வகையில் பால மானது அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற் கேற்ற வகையில் கோரிப்பா ளையம், அண்ணா சிலை, யானைக்கல், பீ.பி.குளம், தல்லாகுளம் ஆகிய 5 சந் திப்புகள் விரிவாக்கம் செய் யப்பட உள்ளன.

    கோரிப்பாளையம் சந்திப் பில் அமைய உள்ள பாலத் தின் நீளம் குறைக்கப்பட்ட தையடுத்து பாலத்துக்கான திட்ட மதிப்பீடு ரூ.172 கோடி யில் இருந்து ரூ.156 கோடி யாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆஸ்பத்திரி-சிவகங்கை சாலையில் அண்ணா பஸ் நிலையம் முதல் மேலமடை சந்திப்பு வரையிலான 2.5 கி.மீ. தூரத் துக்கு போக்குவரத்து நெரி சல் அதிகமாக உள்ளது.

    அண்ணா நகர், தெப்பக் குளம், கே.கே.நகர், மாட்டுத் தாவணி போன்ற நகரின் முக்கிய பகுதிகளுக்கான இணைப்பு சாலைகள் சிக் னல்களில் சந்திக்கின்றன. மேலும் அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், முக்கிய மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தியேட் டர்கள், பூங்கா மால்கள், கல்லூரிகள் உள்ளன.

    இதனால் அண்ணா பஸ் நிலையம், ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்புகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சந்திப் புகளிலும், அரசு ஆஸ்பத்திரி பகுதியிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சீரான போக்குவரத்து வச தியை ஏற்படுத்துவதற்கா கவும் ஆவின் முதல் கோமதிபுரம் 6-வது மெயின் ரோடு வரையில் 1.1 கி.மீ. தூரத்துக்கு ரூ.150.28 கோடி யில் உயர் மட்டப் பாலம் அமைக்கவும், 3 சந்திப்பு பகுதிகளையும் அகலப் படுத்தவும் நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்துள் ளனர்.

    இதற்காக நிலம் கைய கப்படுத்தும் பணிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருவாய்த் துறையி னர் நிறைவு செய்து விட்ட தாகவும் தகவல்கள் தெரிய வருகிறது. அத்துடன் மேல மடை சந்திப்பில் அதிக நெரிசல் இருப்பதால் அங்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அண்ணா பஸ் நிலையம், ஆவின், ேமலமடை ஆகிய 3 சிக்னல்களிலும் 45 முதல் 50 அடி வரை சாலையை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கவும் திட்டமிட்டுள் ளது. இதனால் மதுரையின் இரண்டு முக்கிய சாலை களில் போக்குவரத்து நெரி சல் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    • ரூ.63 லட்சத்தில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • மறையூர் கண்மாய் கிழக்கு கலுங்கு பகுதியில் பாலம் கட்டும் பணியானது சில நாட்க ளுக்கு முன்பு தொடங்கப் பட்டு தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூர் கலுங்கு பகுதியில் உள்ள தண்ணீர் வந்து மறுகால் பாயும் தரைப்பாலத்தை உயர் பாலமாக கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக இருஞ்சிறை விலக்கு-கட்டனூர் சாலை யில் அமைந்துள்ள மறையூர் கலுங்கு பகுதியில் ரூ.63 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தரைமட்ட பாலத்தை உயர் மட்ட பாலமாக உயர்த்தி கட்டும் பணிகள் நடை பெற்று வருகிறது.

    மேலும் இந்த பாலம் கட்டும் பணிகளால் இருஞ் சிறை வழியாக மதுரை, கமுதி, நரிக்குடி மற்றும் மானாமதுரை உட்பட பல் வேறு பகுதிகளுக்கு பொது மக்கள் வாகனங்க ளில் சென்று வருவதால் போக்கு வரத்து தடைபடாமல் இருக்க பாலத்தின் அருகே மாற்றுப்பாதையும் ஏற்படுத் தப்பட்டு உள்ளது.இந்த நிலையில் மறையூர் கண்மாய் கிழக்கு கலுங்கு பகுதியில் பாலம் கட்டும் பணியானது சில நாட்க ளுக்கு முன்பு தொடங்கப் பட்டு தொடர்ந்து நடை பெற்று வருகிறது. பருவ மழைகாலம் தொடங்கவுள்ள நிலையில் தற்போது போடப் பட்டுள்ள மாற்றுப் பாதை யானது மழையால் சேதம டைய வாய்ப்புள்ளதாகவும், விரைவில் பாலத்தை கட்டி முடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கேட் டுக்கண்டுள்ளனர்.

    இந்த உயர்மட்ட பாலம் கட்டும் பணி குறித்து நெடுஞ்சாலைத்துறையின் திருச்சுழி உதவி கோட்ட பொறியாளர் கணேசன் கூறுகையில், இன்னும் ஓரிரு மாதத்தில் பாலம் கட்டும் பணிகள் முடிவடைந்து, விரைவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
    • 2023-2024-ல் ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டம் துறை மீனவ கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையம் கொல்லங்கோடு (இருப்பு மார்த்தாண்டம் துறை)க்கு சிகிச்சைக்கு செல்லவும், பேரிடர் காலங்களில் பாது காப்பான இடங்களுக்கு செல்லவும் வேண்டி உள்ளது. பிரதான சாலைக்கு செல்வதற்காக 4 கிலோ மீட்டர் பயண தூரத்தை தவிர்க்க மார்த்தாண்டம் துறை ஆலயம் முன் பகுதி யிலிருந்து துணை ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையில் ஏ.வி.எம். சானலின் குறுக்கே பாலம் உள்ளது.

    ஆனால் மக்கள் பயன்படுத்த முடியாதபடி காணப்படும் இந்த பழுதடைந்த பாலத்தை மாற்றி புதிய உயர் மட்ட பாலம் அமைக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர், நகராட்சி துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், சட்டமன்றத்திலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஏ.வி.எம். சானலின் குறுக்கே புதிய உயர் மட்ட பாலம் அமைக்க மூலதன மானிய நிதி 2023-2024-ல் ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த பணிக்கான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட்டு பால பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும் எனது கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்து தந்ததற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர், நகராட்சித்துறை அமைச்சர் சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகளுக்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாதாரண நாட்களை விட மழைக்காலங்களில் பவானி ஆற்றில் நீர் வேகம் அதிகமாக இருக்கும்.
    • ஆற்றை நடந்து கடக்கவும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் பயணிக்கவும் மட்டுமே பாலம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி யூனியன் அம்மாபாளையம் பஞ்சாயத்தில் அம்மாபாளையம், ராக்கனாம்பாளையம், கணேசம் புதூர் ஆகிய 3 கிராமங்களில் 1600-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில் அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமமாக அம்மாபாளையம் அமைந்துள்ளது.

    இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் விவசாய கூலி தொழிலாளர்கள். பவானி ஆற்றின் மறுகரையாக இருக்கும் கைகாட்டி பிரிவுக்கு பரிசல் மூலம் மட்டுமே செல்ல முடியும். அம்மாபாளையம் கிராமம் ஆற்றின் மறுபக்க கரையில் உள்ளது. அம்மாபாளையத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி தொடரவும், தொழில் மற்றும் தேவைக்காக வெளியூர் செல்பவர்கள் பரிசல் மூலம் பவானி ஆற்றை கடந்து செல்கிறார்கள். இதற்காக ஆற்றங்கரையில் பரிசல் இயக்கப்பட்டு நபருக்கு ரூ.5 பயண கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பரிசலில் தான் மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். சாதாரண நாட்களை விட மழைக்காலங்களில் பவானி ஆற்றில் நீர் வேகம் அதிகமாக இருக்கும். இந்த மாதிரி சமயங்களில் பரிசல் செல்லும்போது உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.

    மேலும் இப்பகுதி மக்களுக்கு அவசர கால சிகிச்சை மற்றும் கர்ப்பிணி பெண்கள் பரிசல் பயணத்தை நம்பி உள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வாக பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கை கனவாகவே இருந்து வருகிறது.

    வழக்கம்போல் தொடர்ந்து பொதுமக்கள் மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    அம்மாபாளையம் மக்கள் பெரும்பாலும் தங்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்று வருகிறோம்.

    இதற்காக பரிசல் பயணத்தையே நாங்கள் நம்பி உள்ளோம். நாங்கள் 50 ஆண்டுகளாக பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித் தர வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியுள்ளோம். அரசியல் கட்சியினர் இங்கு தேர்தல் சமயத்தில் மட்டுமே ஓட்டு கேட்க வருகின்றனர்.

    வாகனங்களில் செல்ல நாங்கள் பாலம் கேட்கவில்லை. ஆற்றை நடந்து கடக்கவும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் பயணிக்க மட்டுமே பாலம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவரை பல எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களிடம் மனு கொடுத்தும் பாலம் இன்னும் வரவில்லை.

    எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணாததால் இதற்கு முன்பு நடந்த 2 முறை நடந்த தேர்தலை புறக்கணித்து உள்ளோம். தற்போது தி.மு.க. அரசு பதவி ஏற்றுள்ளது. எங்களது 50 ஆண்டு கால கனவை அரசு நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இந்த பணிகள் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறமும் தீவிரமாகநடந்து வருகிறது.
    • இந்த பணிகளுக்காக அந்த இடத்திற்கு அருகில் வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக பாதை விடப்பட்டுள்ளது.

    உடுமலை:

    மத்திய அரசின் 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலைஅமைக்கப்படுகிறது.

    உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி செல்லும் சாலையில் குறிஞ்சேரி அருகே சாலையின் குறுக்கே நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகள் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறமும் தீவிரமாகநடந்து வருகிறது.இந்த நிலையில் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே அமையும்நான்கு வழிச்சாலையின் இரண்டு புறங்களையும் இணைக்கும் வகையில்உயர்மட்டபாலம்கட்டும் பணிகள் தீவிரமாகநடந்து வருகிறது.இதில் தற்போது உயர் மட்டபாலத்தின் இருபுறங்களையும் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்த பணிகளுக்காக அந்த இடத்திற்கு அருகில் வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக பாதை விடப்பட்டுள்ளது. பஸ், லாரி, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அந்த தற்காலிக பாதை வழியாக சென்று வருகின்றன.பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே சாலையின் மேல்பகுதியில் நான்கு வழிச்சாலைக்கான உயர்மட்டபாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்நதும், அதன் கீழ்பகுதியில் வழக்கம் போல் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

    • ரோட்டை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • நீரோடைகளின் குறுக்கே இருந்த தரைமட்ட பாலத்தை அகற்றிவிட்டனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து கொழுமம் செல்லும் சாலையில், கண்ணமநாயக்கனூர் பிரிவு உள்ளது. இங்கிருந்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு செல்லும் மறுபடி ரோட்டில் ரோட்டை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நீரோடைகளின் குறுக்கே இருந்த தரைமட்ட பாலத்தை அகற்றிவிட்டு அந்த இடங்களில் அகலமான உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது.

    மலையாண்டி கவுண்டனூருக்கும், மருள்பட்டிக்கும் இடையில் மூன்று இடங்களில் நீரோடைகளின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகளினால் வாகன போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்க பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களின் பக்கவாட்டில் தற்காலிக மாற்றுப் பாதை வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பஸ், லாரி ,வேன், கார் போன்ற கனரக வாகனங்களும் இருசக்கர வாகன போக்குவரத்துக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.

    • மாநகருக்குள் ஆறு, ஓடைகளின் மேல் உயர்மட்ட பாலம் அமைத்தால் கனரக வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • உயர்மட்ட பாலங்கள் அமைக்கும்போது முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். மாநகருக்குள் நொய்யல் ஆறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடைகளின் மேல் உயர்மட்ட பாலம் அமைத்தால் கனரக வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் திட்டமிட்டு உயர்மட்ட பாலங்கள் தேவைப்படும் இடங்களை ஆய்வு செய்தனர். அதன்படி திருப்பூர் ஈஸ்வரன் கோவில் செல்லும் நொய்யல் ஆற்றின் மேல் உயர்மட்ட பாலம், ஜம்மனை ஓடை மேல் தந்தை பெரியார் நகரில் உயர்மட்ட பாலம், சங்கிலிப்பள்ளம் ஓடை மேல் செல்லாண்டியம்மன் துறை அருகே சொர்ணபுரி லே-அவுட்டில் உயர்மட்ட பாலம் மற்றும் நடராஜா தியேட்டர் முன்புறம் பாலம் விரிவாக்கம் ஆகிய பணிகள் என மொத்தம் ரூ.36 கோடியே 36 லட்சத்தில் மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    உயர்மட்ட பாலங்கள் அமைக்கும்போது கனரக வாகனங்கள் எளிதில் சென்று வரவும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயர்மட்ட பாலங்களுக்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    ×