search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.63 லட்சத்தில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் மும்முரம்
    X

    உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ள காட்சி.

    ரூ.63 லட்சத்தில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் மும்முரம்

    • ரூ.63 லட்சத்தில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • மறையூர் கண்மாய் கிழக்கு கலுங்கு பகுதியில் பாலம் கட்டும் பணியானது சில நாட்க ளுக்கு முன்பு தொடங்கப் பட்டு தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூர் கலுங்கு பகுதியில் உள்ள தண்ணீர் வந்து மறுகால் பாயும் தரைப்பாலத்தை உயர் பாலமாக கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக இருஞ்சிறை விலக்கு-கட்டனூர் சாலை யில் அமைந்துள்ள மறையூர் கலுங்கு பகுதியில் ரூ.63 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தரைமட்ட பாலத்தை உயர் மட்ட பாலமாக உயர்த்தி கட்டும் பணிகள் நடை பெற்று வருகிறது.

    மேலும் இந்த பாலம் கட்டும் பணிகளால் இருஞ் சிறை வழியாக மதுரை, கமுதி, நரிக்குடி மற்றும் மானாமதுரை உட்பட பல் வேறு பகுதிகளுக்கு பொது மக்கள் வாகனங்க ளில் சென்று வருவதால் போக்கு வரத்து தடைபடாமல் இருக்க பாலத்தின் அருகே மாற்றுப்பாதையும் ஏற்படுத் தப்பட்டு உள்ளது.இந்த நிலையில் மறையூர் கண்மாய் கிழக்கு கலுங்கு பகுதியில் பாலம் கட்டும் பணியானது சில நாட்க ளுக்கு முன்பு தொடங்கப் பட்டு தொடர்ந்து நடை பெற்று வருகிறது. பருவ மழைகாலம் தொடங்கவுள்ள நிலையில் தற்போது போடப் பட்டுள்ள மாற்றுப் பாதை யானது மழையால் சேதம டைய வாய்ப்புள்ளதாகவும், விரைவில் பாலத்தை கட்டி முடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கேட் டுக்கண்டுள்ளனர்.

    இந்த உயர்மட்ட பாலம் கட்டும் பணி குறித்து நெடுஞ்சாலைத்துறையின் திருச்சுழி உதவி கோட்ட பொறியாளர் கணேசன் கூறுகையில், இன்னும் ஓரிரு மாதத்தில் பாலம் கட்டும் பணிகள் முடிவடைந்து, விரைவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

    Next Story
    ×