உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

விருதுநகரில் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
பாலம் அமைக்கும் பணியினை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாலம் அமைக்கும் பணியினை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Published on

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மறையூர் - கட்டனூர் சாலையில் இருஞ்சிறை விலக்கு பகுதியில் அமைந்துள்ள மறையூர் கழுங்கு பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர்.

இதனை யடுத்து பொது மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நெடுஞ்சாலைத்துறை மூலமாக உயர் மட்ட பாலம் அமைக்க திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த நிலையில் மறையூர் - கட்டனூர் சாலையில் சுமார் ரூ.69 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இந்த பால பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நெடுஞ் சாலைத்துறை அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.

இந்த ஆய்வின் போது நரிக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கண்ணன், காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில்,ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com