search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருள்பட்டி சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் தீவிரம்
    X

     பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் காட்சி.

    மருள்பட்டி சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் தீவிரம்

    • ரோட்டை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • நீரோடைகளின் குறுக்கே இருந்த தரைமட்ட பாலத்தை அகற்றிவிட்டனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து கொழுமம் செல்லும் சாலையில், கண்ணமநாயக்கனூர் பிரிவு உள்ளது. இங்கிருந்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு செல்லும் மறுபடி ரோட்டில் ரோட்டை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நீரோடைகளின் குறுக்கே இருந்த தரைமட்ட பாலத்தை அகற்றிவிட்டு அந்த இடங்களில் அகலமான உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது.

    மலையாண்டி கவுண்டனூருக்கும், மருள்பட்டிக்கும் இடையில் மூன்று இடங்களில் நீரோடைகளின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகளினால் வாகன போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்க பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களின் பக்கவாட்டில் தற்காலிக மாற்றுப் பாதை வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பஸ், லாரி ,வேன், கார் போன்ற கனரக வாகனங்களும் இருசக்கர வாகன போக்குவரத்துக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.

    Next Story
    ×