search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surasamhara festival"

    • முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த திங்களன்று விநாயகர் வேள்வியுடன் துவங்கியது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் புகழ்பெற்ற முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு பக்தர்கள் விழாவின் தொடக்க நாள் அன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்குவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த திங்களன்று விநாயகர் வேள்வியுடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டினர்.தொடர்ந்து முத்துக்குமாரசுவாமிக்கு சந்தனம்,பால்,தயிர்,தேன், உள்ளிட்ட 18 வகை வாசனை திரவியங்களால், அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி அருள் பாலித்தார்.கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினசரி காலை 8:30 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5:30 மணி முதல் 7.30 மணி வரையிலும் யாகசாலை பூஜைகள் ,சுவாமிக்கு அபிஷேகம், தீப ஆராதனையும், தினசரி சான்றோர் பெருமக்களின் ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்றது.

    நேற்று 18 ந் தேதி காலை 8:30 மணிக்கு மண்டபார்சனையும் 96 வாசனை திரவியங்கள் கொண்டு முத்துக்குமாரசுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் மாலை 6.30 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்கார விழா கோவில் வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் அன்னை பார்வதியிடம் சக்திவேல் பெற்று சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது, இந்த காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர், தொடர்ந்து முருகப் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

    • சுப்ரமணிய சாமி கோவிலில் 17 -ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவும், 6-ம் ஆண்டு தீ மிதி விழாவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சாமி கோவிலில் 17 -ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவும், 6-ம் ஆண்டு தீ மிதி விழாவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருக்கல்யாணம்

    கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (சனிக்கிழமை) மாலை வான வேடிக்கையுடன் சூரசம்ஹார விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் வள்ளி- தெய்வானை வசந்த் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலையில் 6-ம் ஆண்டு குண்டம் தீ மிதி விழா நடைபெறுகிறது.

    விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்விழாவில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுப்ரமணிய சாமி ஆசி பெற விழா கமிட்டி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூரசம்ஹார விழா நடந்தது.
    • உற்சவருக்கு தீபாரதி காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்க ப்பட்டது.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ள திருமேனிநாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ் டியை முன்னிட்டு சூர பத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி விழாவானது அனைத்து சிவாலயங்க ளிலும், முருகப்பெருமான் கோவில்களிலும் நடைபெறு வது வழக்கம். சூரனை வதம் செய்து அசுரர்களிடம் இருந்து தேவர்களை காப்பதே சூரசம்ஹாரம் ஆகும்.

    அந்த வகையில் திருச்சுழி பூமிநாதன் கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாள் நடை பெறும் முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி யில் முருக பெருமான் சூரனை வதம் செய்தார்.முன்னதாக கந்தசஷ்டி விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக முருகப்பெரு மான் அம்பிகையிடம் இருந்து சக்தி ஆயுதமான வேலாயுதம் பெறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனையடுத்து நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் சோழ வந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 12-ம் ஆண்டு சூரசம்ஹார விழா நேற்று மாலை கோவில் முன்பு நடை பெற்றது. பக்தர்கள் வெற்றி வேல்முருகா, வீரவேல்முருகா என்று பக்தி கோஷமிட்டனர். இன்று காலை 11 மணியளவில் பாவாடை தரிசனம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரதோசம் கமிட்டியினர் செய்து வருகின்றனர். கோவில் செயல் அலுவலர் பாலமுருகன், கோவில் பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகன்-வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மனிடம் இருந்து பூஜிக்கப்பட்ட வேல் வழங்கப்பட்டது. அங்கு சூரன் ஆடு, யானை, சிம்மம் வடிவில் உருமாறி காட்சி அளிக்க முருகன் சூரனை வதம் செய்தார். இதனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் உற்சவருக்கு தீபாரதி காண்பி க்கப்பட்டு பிரசாதம் வழங்க ப்பட்டது.

    • ஏராளமானோர் தரிசனம்
    • பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், சாத்து மதுரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்ரமணிய கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நேற்று தொடங்கியது.

    கிராம கனாச்சாரி சிவலிங்கம், கிராம நாட்டான்மைதாரர் துளசி நாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    தொடர்ந்து 5 நாட்களாக நடைப்பெறும் கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்வு முதல் நாளான நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சுவாமிக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்து திருக்கல்யாண வைபவம், மற்றும் சூரசம்ஹாசரம் நடைப்பெற உள்ளது.

    கொடியேற்ற விழாவில் சாத்துமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    அரவேணு,

    கோத்தகிரியில் சக்தி மலையில் உள்ள வெற்றிவேல் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா மற்றும் சூரா சம்ஹார விழா நடைபெற்றது. இதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சூரசம்ஹார விழா நடந்தது. மதியம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    • காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த 25-ம் தேதி மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
    • சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நேற்று காலை யாக பூஜைகளும், யாக வேள்வி நிறைவும், மஹா தீபாராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த

    25-ம் தேதி மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

    26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை காலை யாக பூஜைகள், மூலவர் அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும், மாலையில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நேற்று காலை யாக பூஜைகளும், யாக வேள்வி நிறைவும், மஹா தீபாராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மாலை முருகப்பெருமான் சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 6 மணிக்கு மேல் சூரசம்ஹார விழாவும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சூரனை வதம் செய்த முருகப்பெருமான் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில், பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர். இன்று மாலை 6 மணிக்கு மேல் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    இதே போல் கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலிலும் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோப்ப ணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், பொத்தனூர் பச்சைமலை முருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன், அனிச்சம்பா ளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், சக்தி விநாயகர் கோயிலில் உள்ள முருகன், எல்லை யம்மன் கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், விஜயகிரி பழனியாண்டவர், கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள முருகன், பாலப்பட்டியில் உள்ள கதிர்மலை முருகன் மற்றும் பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுக கடவுள் உள்ளிட்ட கோயில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.

    இதில் ஏராளமான சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால முருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    • மாலை 6.30 மணிக்கு நடக்கிறத
    • ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தினமும் கந்த புராண பாராயணம் நடந்து வருகிறது

    வேலூர்:

    வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 41-ம் ஆண்டு மகா கந்தர் சஷ்டி மற்றும் 27-ம் ஆண்டு சூரசம்ஹார விழா, வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி, கந்தர் சஷ்டி சஹஸ்ரநாம அர்ச் சனை, காலை 9 முதல் 10 மணி வரை நடக்கிறது. அதோடு, தினமும் கந்த புராண பாரா யணம் நடக்கிறது. மேலும், 30-ந் தேதி காலை 7.30-க்கு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்ககவசம் அலங்காரம் செய் யப்படுகிறது.

    தொடர்ந்து, காலை 9 மணிக்கு ஸ்ரீசண் முகர் சிறப்பு அபிஷேகம் சத்ரு ஸம்ஹார திரிசதி, 11.30-க்கு சண்முக அர்ச் சனை, தீபாராதனை நடக்கிறது. இதையடுத்து, மாலை 6.30-க்கு கோட்டை மைதானத்தில் சூரசம்ஹார விழா பிரமாண்ட மாக நடக்கவுள்ளது.

    இதையடுத்து,31-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல், ஸ்ரீமகா கந்தர் சஷ்டி திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீஜல கண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் செய்து வருகிறது.

    • வருகிற 30ந் தேதி மாலை, முருகர் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.
    • வேலாயுதசாமி கோவில் உட்பட முருகன்கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

    அவினாசி:

    தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் இருந்து கந்தசஷ்டி விழா துவங்குகிறது. வருகிற , 25ந் தேதி காலை முருக பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜையை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து தினமும் காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜையும், கந்தசஷ்டி பாராயணமும் நடைபெறும்.வருகிற 30ந் தேதி மாலை, முருகர் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமாள் கோவில், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வர சுவாமி கோவில்.காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், அலகுமலை முத்துக்குமாரசாமி கோவில், மங்கலம் மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில் உட்பட முருகன்கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

    ×