என் மலர்
நீங்கள் தேடியது "Surasamhara festival"
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.
அரவேணு,
கோத்தகிரியில் சக்தி மலையில் உள்ள வெற்றிவேல் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா மற்றும் சூரா சம்ஹார விழா நடைபெற்றது. இதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சூரசம்ஹார விழா நடந்தது. மதியம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
- காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த 25-ம் தேதி மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
- சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நேற்று காலை யாக பூஜைகளும், யாக வேள்வி நிறைவும், மஹா தீபாராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த
25-ம் தேதி மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை காலை யாக பூஜைகள், மூலவர் அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும், மாலையில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நேற்று காலை யாக பூஜைகளும், யாக வேள்வி நிறைவும், மஹா தீபாராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மாலை முருகப்பெருமான் சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 6 மணிக்கு மேல் சூரசம்ஹார விழாவும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சூரனை வதம் செய்த முருகப்பெருமான் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர். இன்று மாலை 6 மணிக்கு மேல் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
இதே போல் கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலிலும் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோப்ப ணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், பொத்தனூர் பச்சைமலை முருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன், அனிச்சம்பா ளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், சக்தி விநாயகர் கோயிலில் உள்ள முருகன், எல்லை யம்மன் கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், விஜயகிரி பழனியாண்டவர், கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள முருகன், பாலப்பட்டியில் உள்ள கதிர்மலை முருகன் மற்றும் பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுக கடவுள் உள்ளிட்ட கோயில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.
இதில் ஏராளமான சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால முருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
- மாலை 6.30 மணிக்கு நடக்கிறத
- ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தினமும் கந்த புராண பாராயணம் நடந்து வருகிறது
வேலூர்:
வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 41-ம் ஆண்டு மகா கந்தர் சஷ்டி மற்றும் 27-ம் ஆண்டு சூரசம்ஹார விழா, வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, கந்தர் சஷ்டி சஹஸ்ரநாம அர்ச் சனை, காலை 9 முதல் 10 மணி வரை நடக்கிறது. அதோடு, தினமும் கந்த புராண பாரா யணம் நடக்கிறது. மேலும், 30-ந் தேதி காலை 7.30-க்கு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்ககவசம் அலங்காரம் செய் யப்படுகிறது.
தொடர்ந்து, காலை 9 மணிக்கு ஸ்ரீசண் முகர் சிறப்பு அபிஷேகம் சத்ரு ஸம்ஹார திரிசதி, 11.30-க்கு சண்முக அர்ச் சனை, தீபாராதனை நடக்கிறது. இதையடுத்து, மாலை 6.30-க்கு கோட்டை மைதானத்தில் சூரசம்ஹார விழா பிரமாண்ட மாக நடக்கவுள்ளது.
இதையடுத்து,31-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல், ஸ்ரீமகா கந்தர் சஷ்டி திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீஜல கண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் செய்து வருகிறது.
- வருகிற 30ந் தேதி மாலை, முருகர் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.
- வேலாயுதசாமி கோவில் உட்பட முருகன்கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
அவினாசி:
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் இருந்து கந்தசஷ்டி விழா துவங்குகிறது. வருகிற , 25ந் தேதி காலை முருக பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜையை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து தினமும் காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜையும், கந்தசஷ்டி பாராயணமும் நடைபெறும்.வருகிற 30ந் தேதி மாலை, முருகர் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமாள் கோவில், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வர சுவாமி கோவில்.காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், அலகுமலை முத்துக்குமாரசாமி கோவில், மங்கலம் மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில் உட்பட முருகன்கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.