search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthukumaraswamy hill temple"

    • முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த திங்களன்று விநாயகர் வேள்வியுடன் துவங்கியது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் புகழ்பெற்ற முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு பக்தர்கள் விழாவின் தொடக்க நாள் அன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்குவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த திங்களன்று விநாயகர் வேள்வியுடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டினர்.தொடர்ந்து முத்துக்குமாரசுவாமிக்கு சந்தனம்,பால்,தயிர்,தேன், உள்ளிட்ட 18 வகை வாசனை திரவியங்களால், அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி அருள் பாலித்தார்.கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினசரி காலை 8:30 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5:30 மணி முதல் 7.30 மணி வரையிலும் யாகசாலை பூஜைகள் ,சுவாமிக்கு அபிஷேகம், தீப ஆராதனையும், தினசரி சான்றோர் பெருமக்களின் ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்றது.

    நேற்று 18 ந் தேதி காலை 8:30 மணிக்கு மண்டபார்சனையும் 96 வாசனை திரவியங்கள் கொண்டு முத்துக்குமாரசுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் மாலை 6.30 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்கார விழா கோவில் வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் அன்னை பார்வதியிடம் சக்திவேல் பெற்று சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது, இந்த காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர், தொடர்ந்து முருகப் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

    • முத்துக்குமாரசாமி சிலையும், பழநி முருகன் சிலையும் ஒரே உருவ ஒற்றுமையுடன் காணப்படுவது சிறப்பம்சமாகும்
    • 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் அமைந்துள்ளது முத்துக்குமாரசாமி மலை கோவில். இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

    இந்த கோவிலில் மூலவராக முத்துக்குமாரசாமி சன்னதியும் மகிமாலீஸ்வரர், மரகதாம்பிகை, பாலகணபதி, நவகிரகம் போன்ற சன்னதிகள் அமைந்துள்ளன. மாதப்பூர் முத்துக்குமாரசாமி சிலையும், பழநி முருகன் சிலையும் ஒரே உருவ ஒற்றுமையுடன் காணப்ப டுவது சிறப்பம்சமாகும். எனவே பழநி மலைக்குச் செல்ல முடியாதவர்கள் மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்குச் சென்று முருகனை தரிசிப்பது வழக்கம்.இந்நிலையில், முத்துக்கு மாரசாமி மலைக்கோவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு, பன்னீர், சந்தனம், இளநீர், தேன், பால் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர் பவனியில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்த ர்களுக்கு காட்சியளித்தார்.தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரானது கிரிவலப்பாதை வழியே சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமும்,அன்னதானமும் வழங்கப்பட்டது. பங்குனி உத்திரவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×