search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புலியை"

    • தாளவாடி அருகே பசு மாடு ஒன்று கழுத்து பகுதியில் கடிபட்டு இறந்து கிடந்தது.
    • சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் கால் தடம் மற்றும் இறந்த பசுமாட்டை ஆய்வு செய்தனர். இதில் புலி தாக்கி பசு மாடு பலியானது தெரியவந்தது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை மற்றும் புலிகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் கணேச புரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (54) விவசாயி. இவர் 4 பசு மாடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் அருகில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்கு கட்டியிருந்தார். பின்னர் மாலை மாடுகளை வீட்டிக்கு அழைத்துவர சென்றார். அப்போது தனது பசு மாடு ஒன்று கழுத்து பகுதியில் கடிபட்டு இறந்து கிடந்தது.

    இதனையடுத்து இது குறித்து ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் கால் தடம் மற்றும் இறந்த பசுமாட்டை ஆய்வு செய்தனர். இதில் புலி தாக்கி பசு மாடு பலியானது தெரியவந்தது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இறந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும். புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்ட துணை இயக்குநர் தேவேந்திர குமார்மீனா மற்றும் வனச்சரகர் சதீஷ் ஆகியோர் பசு மாடு இறந்த 3 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினார்.
    • கால்நடைகளை புலி நடமாட்டம் உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என அறிவுருத்தினர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு,காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சேசன் நகர் பகுதியைச் சேர்ந்த நாகமணி (40 ) என்பவர் பசு மாட்டை புலி அடித்து கொன்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்தனர்.

    இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்ட துணை இயக்குநர் தேவேந்திர குமார்மீனா மற்றும் வனச்சரகர் சதீஷ் ஆகியோர் பசு மாடு இறந்த 3 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினார்.

    பின்னர் கர்நாடக வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் கர்நாடக வனத்துறையுடன் இணைந்து புலி விவசாய தோட்டித்தில் புகாதவாறு கண்காணித்து புலியை அடந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கபடும் எனவும் கால்நடைகளை புலி நடமாட்டம் உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என அறிவுருத்தினர்.

    • தாளவாடி அருகே வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து கொன்றது.
    • மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தாளவாடி வனச் சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரசுவாமி (49)இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார் வழக்கம் போல் மாடுகளை அங்குள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார் நேற்று மதியம் மாடுகளை அழைத்தை வர சென்ற போது ஓரு பசு மாடு இறந்துகிடந்தது மாடு இறந்துகிடந்த இடம் கர்நாடக வனப்பகுக்கு உட்பட்டது.

    இதுபற்றி தாளவாடி வனத்துறை மற்றும் கர்நாடக வனத்துறைக்கு தகவல் அளித்தார் சம்பவயி–டத்திக்கு வந்த வனத்துறை இறந்த மாட்டை ஆய்வு செய்தனர் புலி தாக்கி பசு மாடு இறந்தது தெரியவந்தது.

    இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். குறிப்பாக கால்நடை வளர்போர் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:-

    கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்றனர்.

    • தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
    • 4 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதி களில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அருகே உள்ள உள்ள கிராம பகுதிகளில் புகுந்து அட்ட காசம் செய்து வருகிறது.

    அதே போல் தாளவாடி வனச்சர கத்துக்கு உட்பட்ட வன ப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்ட த்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இநத நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி சேசன் நகர் கிராமத்தில் புகுந்து அங்குள்ள ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடியது. கடந்த 2 மாதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி கால்நடைகளை தொடர்ந்து அடித்து கொன்று வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்தனர். எனவே அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனத்துறையினர் 2 டிரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இன்று 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர்.

    மேலும் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலி யின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அடர்ந்த வனப்பகுதியில் புலியை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை யினர் தெரிவி த்தனர்.

    ×