search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டடம்"

    • குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
    • பல்நோக்கு ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குண்டடம், காங்கயத்தில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் வருகிற 24-ந் தேதி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இணை இயக்குனர் நலப்பணிகள், துணை இயக்குனர் பொது சுகாதாரம், திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள்.

    இந்த முகாமில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தாலுகா அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் தேவையான மேல்சிகிச்சைகள் அளிக்கப்படும். எனவே பொதுமக்கள் தவறாமல் பங்கேற்கலாம். தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இந்த முகாமில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

    ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சோதனை, முழு ரத்த பரிசோதனைகள், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பல்நோக்கு ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.

    இந்த முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவ பிரிவுகளும், பங்கேற்கும் வகையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் பொறுப்பேற்று சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • குண்டடம் துணை மின் நிலையத்–தில் 13-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கொக்கம்பாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளுக்கு மின்சார வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம்:

    தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குண்டடம் துணை மின் நிலையத்தில் 13-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை சூரியநல்லூர், ராசிபாளையம், காதப்புள்ளப்பட்டி, எஸ்.கே.பாளையம், மரவாபாளையம், புதுப்பாளையம், குள்ளக்காளிபாளையம், கோனாபுரம், வெங்கிக்கல்பாளையம், ஜோதியம்பட்டி, வேங்கிபாளையம், சேடபாளையம், நவக்கொம்பு, குண்டடம், ருத்ராவதி, எடையப்பட்டி, கொக்கம்பாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளுக்கு மின்சார வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நடராஜன் உள்பட குண்டடம் பேரூர் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    காங்கயம்:

    குண்டடம் ருத்ராவதி பேரூராட்சி பகுதியில் குண்டடம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. குண்டடம் பேரூர் செயலாளரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரும், கவுன்சிலருமான ஏ.பி.கே. தமிழரசு தலைமை தாங்கி ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் ருத்ராவதி பேரூராட்சி கவுன்சிலர்களான சுமதி பழனிசாமி, குமார், ஜெயலலிதா பேரவை தியாகராஜன், பி.ஏ.பி.,முத்துசாமி, ெபாருளாளர் முத்துசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நடராஜன் உள்பட குண்டடம் பேரூர் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. 

    • தொண்டர்கள் திரளான கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
    • நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும்.

     வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் மூலனூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. ஒன்றிய நகர பூத் கமிட்டி மற்றும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், நகர செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கலந்து கொண்டு பேசியதாவது :- வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வருகைதர உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து ஒன்றிய நகர பேரூராட்சி பகுதியில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடி பூத்துக்கும் 18 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து அதில் இளைஞர், இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர்கள் ஆகியோரை இடம்பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.வெங்கடேசசுதர்சன் உள்ளிட்ட மாவட்ட ,ஒன்றி,ய நகர ,கிளைக்கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் சின்னவெங்காய பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்
    • நல்ல செழித்து வளர்ந்துள்ள பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 6 டன் வரை கிடைக்கும்

    குண்டடம் :

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது ;-

    குண்டடம் பகுதி வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம், மேலும் இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.

    தற்போது இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காயத்தின் விலை உயர்த்துள்ளதை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துளளனர் இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 70 ஆயிரம் வரை செலவாகிறது100 நாட்களில் அறுவடை செய்யலாம். நல்ல செழித்து வளர்ந்துள்ள பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 6 டன் வரை கிடைக்கும். அதேபோல் சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினர்.

    • பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் பயிர் செய்து வருகின்றனர்.
    • சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது.

    குண்டடம் :

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர்.அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இது குறித்து விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது :-குண்டடம் பகுதி பொதுவாகவே வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி .ஏ. பி .பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம்.

    மேலும் இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துள்ளனர் .இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 1லட்சம் வரை செலவாகிறது.

    இப்பகுதி விவசாயிகள் விதை மற்றும் காய் நடவு மற்றும் நாற்று நடவு என ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடை செய்து வருகின்றனர். ஏக்கருக்கு 7 டன் வீதம் கிடைக்கவேண்டிய மகசூல் 3 டன் வரை மட்டுமே கிடைத்தது .மேலும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20முதல் 30 வரை விற்பதால் ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை நஷ்டமடைந்துள்ளனர்.

    தற்போது அறுவடை செய்யும் பயிர்களின் மூலம் வருவாய் கிடைத்தால் மட்டுமே வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கும் என்ற நிலையில் உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர்செய்து ஆட்கள் பற்றாக்குறை சமாளித்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கவலை அடைந்துள்ளனர். எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆம்னி பஸ் பலத்த சேதம் அடைந்தது.
    • விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனத்தையும் டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    காங்கேயம் :

    நெல்லையில் இருந்து இன்று ஆம்னி பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. குண்டடம் நால்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் நேருக்கு நேர் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் ஆம்னி பஸ் பலத்த சேதம் அடைந்தது. இதில் பஸ்சில் பயணித்த திருப்பூர் முதலிப்பாளையத்தை சேர்ந்த சிவசுப்ரமணி (வயது42) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டடம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும் டிரைவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஆங்காங்கே பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதான குழாய் உடைந்துவிட்டது.

    குண்டடம் :

    காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் காவிரியாற்றிலிருந்து முத்தூா், காங்கயம், ஊதியூா் வழியாக குழாய் அமைத்து குண்டடம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பல்லடத்தை அடுத்துள்ள கள்ளிப்பாளையம் முதல் குண்டடம் வரையிலான சாலையை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதுடன், ஆங்காங்கே பாலப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே ருத்ராவதியில் பெரிய அளவிலான பாலம் அமைக்கும் பணியின்போது காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதான குழாய் உடைந்துவிட்டது.

    பெரியபாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் குடிநீா்க் குழாய் இணைப்பை சரிசெய்ய முடியவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக மேட்டுக்கடை நீரேற்று நிலையத்தில் இருந்து (ஜம்ப்) கடந்த ஜூன் 16 ந் தேதி முதல் வெருவேடம்பாளையம், முத்தியம்பட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீா் செல்லாமல் தடைபட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, நந்தவனம்பாளையம், கொக்கம்பாளையம், முத்தியம்பட்டி, பெரியகுமாரபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட 35க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் கடந்த 40 நாட்களுக்கும் மேலாகத் தடைபட்டுள்ளது.

    இது குறித்து குண்டடம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: - உள்ளூா் ஊராட்சிகள் மூலமாக விநியோகம் செய்யப்படும் ஆழ்துளைக் கிணற்று நீரில் உப்புத்தன்மை அதிக அளவில் உள்ளது. இதனால் குடிக்கவும், சமையல் செய்யவும் இந்த நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம்.எனவே, குழாய் உடைப்பை சரிசெய்து காவிரி குடிநீா் விநியோகம் செய்ய குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் வயல்களில் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    குண்டடம்:

    குண்டடம் அருகே உப்பாறு அணையை ஒட்டிய பகுதிகளான கள்ளிவலசு, ஒட்டபாளையம், பெல்லம்பட்டி மருதூர்மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. 

    இந்தப் பயிர்கள் தற்போது நன்கு வளர்ந்து கதிர்விடும் நிலையில் உள்ளது. 

    இந்த நிலையில் உப்பாறுஅணையின் நீர்த்தேக்கப் பகுதிகளான ஒட்டபாளையம், பெல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள வயல்களில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக காட்டுப் பன்றிகள் படையெடுக்கின்றன. 

    அவ்வாறு வரும் காட்டுப் பன்றிகள் மக்காச்சோள பயிர்களை கடித்தும், மிதித்தும் சேதப்படுத்துகின்றன. இதனால் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் வயல்களில் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஒட்டபாளையத்தைச் சேர்ந்த மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    உப்பாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் வசித்து வந்த காட்டுப் பன்றிகள் விவசாய வயல்களை நோக்கி வரத்தொடங்கியுள்ளன.

    தற்போது 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள வயல்களில் புகுந்து பயிர்களை பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. 

    ஆகவே வேறு வழியின்றி இரவு நேரங்களில் வயல்களில் காவல் காத்து வருகிறோம். எனவே காட்டுப் பன்றிகளை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    மழையின் காரணமாக மொத்தம் 19 வீடுகள் இடிந்துள்ளன.
    குண்டடம்:

    திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் ஒரே நாளில் 200 மி.மீ., மழை பதிவாகியது, இதன் காரணமாக  சூரியநல்லூர், ஜோதியம்பட்டி பகுதிகளில் சோளம் மற்றும் மக்காச் சோளம் தோட்டங்களில் மழைநீர் புகுந்தது. 

    நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,கிட்டத்தட்ட சுமார் 30 ஆண்டுகளாக இப்படியொரு மழையை நாங்கள் பார்த்ததில்லை. மழையால் சோளம், மக்காச்சோளம், தக்காளி மற்றும் வெங்காயம் என 300 முதல் 400 ஏக்கர் நிலங்களில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

    இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையின்  காரணமாக மொத்தம் 19 வீடுகள் இடிந்துள்ளன. அங்கு வசித்து வந்த பொதுமக்கள் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    திருப்பூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1100 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
    திருப்பூர்:
     
    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக குண்டடத்தில் 200 மி.மீ. மழை பெய்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழைஅளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு -73, அவினாசி-70, பல்லடம்-84, ஊத்துக்குளி-20.20, காங்கேயம்-5.60, தாராபுரம்-132, குண்டடம்- 200,திருமூர்த்தி அணை-41. அமராவதி அணை-38, உடுமலை- 40, மடத்துக்குளம் -46, திருப்பூர் கலெக்டரேட் -110, திருமூர்த்தி அணை ஐ.பி. -7.20, திருப்பூர் தெற்கு -108, கலெக்டர் முகாம் அலுவலகம் -124.60. மாவட்டம் முழுவதும் மொத்தம்-1100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 
    ×