search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gundam"

    • குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
    • பல்நோக்கு ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குண்டடம், காங்கயத்தில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் வருகிற 24-ந் தேதி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இணை இயக்குனர் நலப்பணிகள், துணை இயக்குனர் பொது சுகாதாரம், திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள்.

    இந்த முகாமில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தாலுகா அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் தேவையான மேல்சிகிச்சைகள் அளிக்கப்படும். எனவே பொதுமக்கள் தவறாமல் பங்கேற்கலாம். தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இந்த முகாமில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

    ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சோதனை, முழு ரத்த பரிசோதனைகள், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பல்நோக்கு ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.

    இந்த முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவ பிரிவுகளும், பங்கேற்கும் வகையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் பொறுப்பேற்று சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • கடந்த மாதம் 26-ந் தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
    • தர்மராஜா- திரவுபதி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் :

    பொங்கலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் புகழ் பெற்ற திரவுபதி அம்மன் உடனமர் தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த மாதம் 26-ந் தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. பின்னர் கிராம சாந்தி நிகழ்ச்சியும், இரவு பரந்தாமனும் பாஞ்சாலியும் என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி கள்ளிப்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக் கலசம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. மதியம் தர்மராஜா- திரவுபதி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு பவளக்கொடி கும்மியாட்டமும் நடைபெற்றது.

    7-ந் தேதி உருவாரம் கொண்டு வருதலும், இரவு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை குண்டம் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தர்மராஜா பொங்கல் விழாவும், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு ஆன்மிக சொற்பொழிவாளர் ஆனந்த் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை 5 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து உச்சி கால பூஜையும், மாலையில் கலாசாரத்தை மீட்டெடுக்கும் கம்பத்து ஆட்டமும் நடைபெற்றது. நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.  

    • சக்கரப்பட்டி சித்தா் ஜீவசமாதி ஆலயத்தில் அக்னி குண்டம் வைக்கப்பட்டு சிறப்பு யாகவேள்வி நடைபெற்றது.
    • இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம்த்தில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் சக்கரப்பட்டி சித்தா் ஜீவசமாதி ஆலயத்தில் அக்னி குண்டம் வைக்கப்பட்டு சிறப்பு யாகவேள்வி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சக்கரப்பட்டி சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு சக்கரப்பட்டி சித்தரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க ப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சக்கரப்பட்டி சித்தர் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×