search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Draupadi amman"

    • கடந்த மாதம் 26-ந் தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
    • தர்மராஜா- திரவுபதி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் :

    பொங்கலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் புகழ் பெற்ற திரவுபதி அம்மன் உடனமர் தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த மாதம் 26-ந் தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. பின்னர் கிராம சாந்தி நிகழ்ச்சியும், இரவு பரந்தாமனும் பாஞ்சாலியும் என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி கள்ளிப்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக் கலசம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. மதியம் தர்மராஜா- திரவுபதி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு பவளக்கொடி கும்மியாட்டமும் நடைபெற்றது.

    7-ந் தேதி உருவாரம் கொண்டு வருதலும், இரவு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை குண்டம் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தர்மராஜா பொங்கல் விழாவும், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு ஆன்மிக சொற்பொழிவாளர் ஆனந்த் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை 5 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து உச்சி கால பூஜையும், மாலையில் கலாசாரத்தை மீட்டெடுக்கும் கம்பத்து ஆட்டமும் நடைபெற்றது. நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.  

    • சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
    • இதில் 200 பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.


    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கர்நகர் 2-ம் தெருவில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    2-ந் தேதி சக்தி கும்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 3-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 5-ந் தேதி ஐந்தாம் கரகம் நிகழ்ச்சியும், 8-ந் தேதி அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியும் நடந்தது.

    9-ந் தேதி துரோபதி அம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று நடந்தது. விழாவில் காலை சக்தி நிறுத்துதல், அக்னி வளர்த்தல் நிகழ்ச்சியும்,

    மாலை சுவாமி அம்பாள் நாதஸ்வர வாத்தியங்களுடன் கரவக்குமார் காவக்குடம் சுமந்தபடி, மஞ்சளாடை உடுத்தி பூ இறங்கும் பக்தர்கள் பக்தர்களுடன் துரோபதி அம்மன் புஷ்ப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து அக்னி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 200 பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கினர். இதில் ஏராளமாேனார் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முன்னிட்டு சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து இன்று (11-ந் தேதி) மஞ்சள் நீராட்டு விழாவும், 12-ந் தேதி ஊஞ்சல் நிகழ்ச்சியும், 14-ந் தேதி பால்குடம் மற்றும் அம்மன் படைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை செங்குந்தர் அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.


    ×