search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayalalitha's birthday celebration"

    • எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நடராஜன் உள்பட குண்டடம் பேரூர் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    காங்கயம்:

    குண்டடம் ருத்ராவதி பேரூராட்சி பகுதியில் குண்டடம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. குண்டடம் பேரூர் செயலாளரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரும், கவுன்சிலருமான ஏ.பி.கே. தமிழரசு தலைமை தாங்கி ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் ருத்ராவதி பேரூராட்சி கவுன்சிலர்களான சுமதி பழனிசாமி, குமார், ஜெயலலிதா பேரவை தியாகராஜன், பி.ஏ.பி.,முத்துசாமி, ெபாருளாளர் முத்துசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நடராஜன் உள்பட குண்டடம் பேரூர் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. 

    • ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
    • வக்கீல் வெங்கடா ஜலபதி,ஞானாம்பிகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 -வது பிறந்தநாளை முன்னிட்டு நகர அ.தி.மு.க. சார்பில், பல்லடம் பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவில் அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி,கூட்டுறவு சங்கத் தலைவர் பானு பழனிச்சாமி, நகர நிர்வாகிகள் தர்மராஜன், தமிழ்நாடு பழனிச்சாமி, மரக்கடைகிருஷ்ணமூர்த்தி, லட்சுமணன், நாராயணன்,ரமேஷ்,கந்தசாமி, மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில், தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் துரைக்கண்ணன்,வக்கீல் வெங்கடா ஜலபதி,ஞானாம்பிகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×