search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தினேஷ் கார்த்திக்"

    • ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்திற்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இப்படத்தை புகழ்ந்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஜெயிலர் படத்தை மிகவும் ரசித்தேன். சூப்பர் ஸ்டார் மிகவும் சிறந்தவர். நெல்சன் மீண்டும் நிரூபித்துவிட்டார். டார்க் காமெடி காட்சிகளை மிகவும் ரசித்தேன். பின்னணி இசையும் அனிருத்தும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவை" என்று குறிப்பிட்டுள்ளார்.




    • வங்கதேச அணியினர் பல சமயங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் நாகினி ஆட்டம் ஆடுவர்.
    • இதனை பல எதிரணிகள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளன.

    இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) தொடரில் நேற்று கல்லே டைட்டன்ஸ் மற்றும் தம்புல்லா ஆரா அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தம்புல்லா ஆரா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கல்லே டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து தம்புல்லா ஆரா அணி களமிறங்கியது. அந்த அணி 4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்தது.

    அப்போது திடீரென் மைதானத்துக்குள் பாம்பு புகுந்தது. இதனால் களத்தில் இருந்த அம்பயர் போட்டியை நிறுத்துமாறு கூறினார். இதைத் தொடர்ந்து அம்பயர் மற்றும் அதிகாரிகள் பாம்பை களத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர். இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன. அந்த வகையில், கிரிக்கெட் களத்திற்கு இந்த சம்பவம் புதிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே.


    இந்நிலையில் இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வங்கதேச அணியை கிண்டலடித்துள்ளார். எல்.பி.எல். போட்டியின் போது பாம்பு களத்திற்குள் வந்து இடையூறை ஏற்படுத்திய வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து தினேஷ் கார்த்திக் டுவீட் செய்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    "நாகினி வந்துவிட்டது. நான் இதை வங்கதேசம் என்று நினைத்தேன்," என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வங்கதேச அணியினர் பல சமயங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் நாகினி ஆட்டம் ஆடுவர். இதனை பல எதிரணிகள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளன. அந்த வகையில், இந்த சம்பவத்தை வங்கதேச அணியுடன் ஒப்பிட்டு, அவர்களை தினேஷ் கார்த்திக் கிண்டலடித்துள்ளார். 

    • 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் வீரர் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார்.
    • இந்த மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.



    இந்த மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல நடிகர் யோகிபாபு, நடிகர் புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது மட்டுமின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி, சி.எஸ்.கே. சிஇஓ விஸ்வநாதன் மற்றும் திருச்சி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

    இந்நிலையில், சேலத்தில் நடிகர் யோகிபாபு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

    நானும் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டி கிரிக்கெட் வீரர் நடராஜன் மாதிரி நிறைய வீரர்களை உருவாக்கலாம் என ஆசை உள்ளது. ஐ.பி.எல்., டி.என்.பி.எல். இளைஞர்கள் விளையாடுகிறார்கள். எல்லோருடைய பங்களிப்பும் திறமையாக உள்ளது. எனக்கு ரொம்ப பிடித்த கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். அடுத்தது நம்முடைய தமிழக வீரர் நடராஜை பிடிக்கும். அடுத்து கிரிக்கெட் தொடர்பான படம் நடிக்க உள்ளேன்.


    விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பணியை சரியாக செய்து கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அழைத்து உற்சாகப்படுத்தி உள்ளார். அதுபோல் தோல்வி அடைந்தவர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளார். அவர் நல்ல விஷயம் தான் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.
    • இந்த மைதானத்தில் 4 பிட்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் அமரக்கூடிய வகையில் இடமும் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார். அவருடைய தாய், தந்தை முன்னிலையில் மைதானம் திறக்கப்பட்டது. இந்த மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.

     

    அதேபோல நடிகர் யோகிபாபு, நடிகர் புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது மட்டுமின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி, சி.எஸ்.கே. சிஇஓ விஸ்வநாதன் மற்றும் திருச்சி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

    இந்த மைதானத்தில் 4 பிட்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் அமரக்கூடிய வகையில் இடமும் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டி.என்.பி.எல்) நடராஜன் திருச்சி அணியில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார்.
    • இவர்கள் இருவரும் 16 முறை டக் அவுட்டில் வெளியேறி உள்ளனர்.

    ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. 3 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 59 ரன்னில் சுருண்டது.

    முன்னதாக முதல் பேட்டிங் செய்த பெங்களூர் அணியின் கீப்பர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் 16 முறை டக் அவுட்டில் வெளியேறி உள்ளனர்.

    இவர்களுக்கு அடுத்தப்படியாக மந்தீப் சிங், சுனில் நரேன் (15 முறை) உள்ளனர். 

    • சூர்யகுமார் யாதவ் திறமை வாய்ந்த வீரர்.
    • சூர்யகுமார் யாதவை 6-வது இடத்தில் களமிறக்க வேண்டும்.

    இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும் 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22-ந் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி 2-வது ஒரு நாள் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் கோல்ட டக் முறையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கருத்து எழுந்தது.

    இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ்விற்கு ஆதரவு தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

    சூர்யகுமார் யாதவ் திறமை வாய்ந்த வீரர். அவரை அணியிலிருந்து நீக்குவதற்குப் பதிலாக அவர் களமிறங்கும் இடத்தை வேண்டுமென்றால் மாற்றலாம். ஹர்திக் பாண்டியா டாப் ஆர்டரில் களமிறங்கி விளையாட விருப்பம் கொண்டவர்.

    ஆதலால், அவருக்கு 4-வது இடம் கொடுத்துவிட்டு, சூர்யகுமார் யாதவை 6-வது இடத்தில் களமிறக்க வேண்டும். அவர் கடைசி 18 முதல் 20 ஓவர்களில் சிறப்பாக விளையாடுவார். ஆகையால் அதற்கேற்ப அவரை பயன்படுத்திக் கொண்டால் அணிக்கு நல்லது.

    என்று அவர் கூறியுள்ளார்.

    • தற்போது நடக்கும் சூழ்நிலையை புரிந்துகொண்டு அவர் சிறிய இடைவெளியை எடுத்து கொள்ள வேண்டும்.
    • ஒவ்வொரு வீரரும் இது போன்ற நிலைமையை சமாளித்து வெளியே வர வேண்டும்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னனி பேட்ஸ்மேன்களில் ஒருவர் லோகேஷ் ராகுல். டெஸ்டில் அவரது ஆட்டம் மோசமாக இருக்கிறது. கடந்த 6 டெஸ்டில் அவர் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்தார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டன் பதவி ராகுலிடம் இருந்து பறிக்கப்பட்டது.

    இதனால் வருகிற 1-ந் தேதி இந்தூரில் தொடங்கும் 3-வது டெஸ்டில் அவர் நீக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    11 பேர் கொண்ட அணியில் அவருக்கு பதிலாக சுப்மன்கில் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    இந்த நிலையில் லோகேஷ் ராகுலை போன்ற நிலைமை தனக்கு வந்துள்ளதாகவும் அப்போது தான் அழுததாகவும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    லோகேஷ் ராகுல் திறமையான வீரர். 3 விதமான போட்டிகளில் அவரால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும். அவருடைய ஆட்ட நுனுக்கத்தில் பிரச்சினை இல்லை என நினைக்கிறேன்.

    தற்போது நடக்கும் சூழ்நிலையை புரிந்துகொண்டு அவர் சிறிய இடைவெளியை எடுத்து கொள்ள வேண்டும். நிச்சயம் ஒரு ஓய்வுக்கு பிறகு அவர் திரும்ப வந்தால் அவரால் மிக சிறப்பாக விளையாட முடியும்.

    ஒவ்வொரு வீரரும் இது போன்ற நிலைமையை சமாளித்து வெளியே வர வேண்டும். எனக்கு இதே போன்று நிலைமை ஏற்பட் டது.

    அப்போது எனக்கு இதுதான் கடைசி இன்னிங்ஸ் என்று நினைத்து வீரர்கள் அறையில் உள்ள கழிப்பறைக்கு சென்று ஓரிரு துளிகள் கண்ணீர் சிந்தினேன். அந்த அளவுக்கு அந்த சூழ்நிலை மோசமாக இருக்கும். அதனையும் நான் அனுபவித்தேன்.

    இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

    • இந்திய கிரிக்கெட் அணியில் திரிபாதி சிறப்பாக விளையாடுவார்.
    • பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.

    ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்றுள்ள விராட் கோலிக்கு டி20 போட்டிகளில் மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று தான் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் என்று சீனியர் வீரர்களுக்கு டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இலங்கைக்கு எதிரான டி20 போட்டியிலும் சரி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் சரி இவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் விராட் கோலி ஓய்வு பெற வேண்டிய நேரம் வரும் போதோ அல்லது அவர் இல்லாத போதோ அவருக்குப் பதிலாக 3-வது இடத்தில் விளையாடுவதற்கு ராகுல் திரிபாதி தான் சரியான தேர்வாக இருப்பார் என தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதே போன்று இலங்கைக்கு எதிரான டி20 போட்டியிலும் ராகுல் திரிபாதி விளையாடினார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருவரும் விளையாடியிருக்கின்றனர். அப்போது ராகுல் திரிபாதியின் பேட்டிங் திறமையை தினேஷ் கார்த்திக் கண்டுள்ளார். ஐபிஎல் சீசனில் அவர் நன்றாக விளையாடினாலும், சரி விளையாடாவிட்டாலும் சரி, இந்திய கிரிக்கெட் அணியில் அவர் சிறப்பாக விளையாடுவார்.

    விராட் கோலி விளையாடினார் என்றால் ஓகே. மற்றபடி அவரது இடத்தை நிரப்புவதற்க்கு முதல் வாய்ப்பாக ராகுல் திரிபாதி தான் சரியான தேர்வாக இருப்பார்.

    என்று கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.

    • அர்ஷ்தீப் சிங் சரியாக பயிற்சி செய்யவில்லை என்பது இந்த போட்டியின் மூலம் தெளிவாக தெரிகிறது.
    • நோ-பால் போடாமல் பந்துவீசுவதை சுலபம் என்று நினைத்துதான், பயிற்சியின்போது இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்திருக்கிறார்.

    புனே:

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 206 ரன்களை குவித்தது. இலக்கை துரத்திய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இந்த போட்டியில் இந்தியவின் தோல்வியை விட, அர்ஷ்தீப் சிங் செய்த தவறு தான் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 2-வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங் மட்டும் 3 முறை நோ பால்களை வீசி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் தேவையின்றி 13 ரன்கள் கூடுதலாக சென்றது. இதனால் அவருக்கு மீண்டும் 19-வது ஓவரில் வாய்ப்பு தரப்பட்டது.

    ஆனால் 19-வது ஓவரிலும் நோ பாலையே போட்டார். 19-வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் ஷனகா ஆவுட்டானார். ஆனால் அந்த பந்து நோ பால் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணியில் அதிக முறை நோபல் வீசியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

    இந்நிலையில் இதுகுறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    அர்ஷ்தீப் சிங் சரியாக பயிற்சி செய்யவில்லை என்பது இந்த போட்டியின் மூலம் தெளிவாக தெரிகிறது. நோ-பால் போடாமல் பந்துவீசுவதை சுலபம் என்று நினைத்துதான், பயிற்சியின்போது இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்திருக்கிறார். ஆனால் அது மிகவும் கடினமான ஒன்று என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

    • ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக கே.எல் ராகுலை எச்சரிக்கும் வகையில் தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
    • 35 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரு துவக்க வீரரின் சராசரி 30-க்கு கீழ் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல.

    இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி நடைபெற்ற முடிந்த இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது காயமடைந்த ரோகித் சர்மா டெஸ்ட் அணியிலிருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் இந்த தொடரில் கேப்டனாக செயல்பட்டார்.

    ஒரு கேப்டனாக இந்த டெஸ்ட் தொடரில் ராகுல் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக இந்த தொடரில் அவர் சோபிக்க தவறிவிட்டார். வங்கதேச அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 57 ரன்களை மட்டுமே அவர் அடித்து ஏமாற்றத்தை அளித்துள்ளார்.

    ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பேட்டிங் ஃபார்மை இழந்து தவித்து வரும் அவரின் தொடர்ச்சியான செயல்பாடுகள் தற்போது அவரது இடத்தின் மீது பெரிய கேள்வியை எழுப்பி உள்ளன.

    ஏனெனில் அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்று வரும் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் கே.எல் ராகுலின் இந்த தொடர் சொதப்பல் அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வங்கதேச தொடரிலும் கே.எல் ராகுல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அடுத்து வரும் ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கே.எல் ராகுலை எச்சரிக்கும் வகையில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    பிப்ரவரி, மார்ச் மாதம் நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ராகுல் கண்டிப்பாக இடம் பிடிப்பார்.

    ஆனால் அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் நிச்சயம் அவர் அணியிலிருந்து நீக்கப்படுவார் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அவர் தனது சராசரியை 30-க்கு உள்ளே தான் வைத்திருக்கிறார்.

    இப்படி 35 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரு துவக்க வீரரின் சராசரி 30-க்கு கீழ் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல. எனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டாக வேண்டியது அவசியம். அந்த தொடரிலும் அவர் சொதப்பினால் நிச்சயம் அவரது இடம் சுப்மன் கில்லிடம் பறிபோக வாய்ப்புள்ளது என்று தினேஷ் கார்த்திக் அவரை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் இருந்தால் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார்.
    • பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி எதிரணி வீரர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருப்பார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரனை கிரிக்கெட் விஞ்ஞானி என்று தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் நெருக்கடியான நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின்னர் களத்தில் இருந்த அஸ்வினிடம் ஒரு தரமான இன்னிங்ஸ் விளையாடினார்.

    இந்திய அணிக்காக 87வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் அஸ்வின், இதுவரை 5 சதங்கள் விளாசியுள்ளார். அதேபோல் 13 அரை சதங்கள் அடித்துள்ளார். பந்துவீச்சில் 442 விக்கெட்டுகளும், பேட்டிங்கில் சுமார் 3 ஆயிரம் ரன்களும் குவித்துள்ளார். இதனால் டெஸ்ட் கிரிகெட்டை பொறுத்தவரை, அஸ்வின் ஆல் ரவுண்டராகவே அறியப்படுகிறார். அஸ்வினுக்கு பாராட்டு இன்றைய ஆட்டத்தில் 113 பந்துகளில் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் 8வது விக்கெட்டிற்கு குல்தீப் யாதவுடன் இணைந்து 87 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் அஸ்வின்.

    இதன் மூலம் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அஸ்வினுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அஸ்வின் குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில்:-

    ரவிச்சந்திரன் அஸ்வின் டெய்லண்டர் அல்ல. அவர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ரன்கள் விளாசியுள்ளார். அஸ்வின் போல் கீழ்நிலையில் உள்ள வீரர்கள் ரன்கள் சேர்க்கும் போது எதிரணியினருக்கு கோபத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தும். பேட்டிங்கில் உழைக்கக் கூடியவர் அதனை அஸ்வின் மிகச்சிறப்பாக செய்து வருகிறார்.

    இளம் வயதிலேயே ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் ஏராளமான கடினமான சூழல்களில் ரன்கள் சேர்த்துள்ளார். மிகவும் கடினமான ஷாட்களை, மிக எளிதாக விளையாட கூடியவர். ஒவ்வொரு ரன்னுக்காக உழைக்கக் கூடியவர். ஸ்பின்னர்களை எளிதாக விளாசிவிட்டு, வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திட்டத்துடன் இருப்பவர்.

    பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி எதிரணி வீரர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருப்பார். இப்போதும் சென்னையில் இருந்தால் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார். என்னை பொறுத்தவரை, அஸ்வின் ஒரு கிரிக்கெட் விஞ்ஞானி. ஏனென்றால், ஒவ்வொரு முறையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் புதிதாக ஒன்றை கண்டுபிடித்து கொண்டே இருப்பார். புதிய முயற்சிகளை மேற்கொள்வார்.

    இவ்வாறு கார்த்திக் கூறினார்.

    இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 287 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவரது ஸ்டிரைக் ரேட் 191.33-ஆக உள்ளது.
    மும்பை:

    இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தனது மோசமான ஆட்டத்தின் காரணமாக 2019 ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால் அவர் சமீபத்தில் போட்டி வர்ணணையாளராகவும் செயல்பட்டு வந்தார்.

    இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்தி தனது சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது விளையாட்டுக்கு பல மூத்த வீரர்களும் பாராட்டு தெரிவித்து வந்தனர். 

    இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

    இதையடுத்து தான் இந்திய அணி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட தினேஷ் கார்த்திக்,

     ‘உங்கள் ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. நீங்கள் உங்களையே நம்பினால் போதும். அனைத்தும் உங்களை தேடி வரும்’ 

    என தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 287 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவரது ஸ்டிரைக் ரேட் 191.33-ஆக உள்ளது.
    ×