என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தினேஷ் கார்த்திக்"
- அனுஜ் ராவத் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன்அவுட் ஆனார்.
- முஸ்டாபிஜுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டு பிளிஸ்சிஸ், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
டு பிளிஸ்சிஸின் அதிரடி ஆட்டத்தால் ஆர்சிபி முதல் 3 ஓவரில் 33 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது ஓவரிலேயே சிஎஸ்கே சுழற்பந்து வீச்சை அறிமுகம் செய்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. தீக்சனா இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
5-வது ஓவரை முஸ்டாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டு பிளிஸ்சிஸ் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதே ஓவரில் ரஜத் படிதாரை டக்அவுட்டில் வெளியேற்றினார்.
அடுத்த ஓவரில் தீபக் சாஹர் மேக்ஸ்வெல்லை முதல் பந்திலேயே வெளியேற்றினார். இதனால் ஆர்சிபி 6 ஓவரில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த 3 ஓவரில் (முதல் 3 ஓவருக்குப் பிறகு) 9 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கிடையே விராட் கோலி 8 பந்தில் 6 ரன் எடுத்து டி20 கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார்.
விராட் கோலி மெல்லமெல்ல அதிரடிக்கு திரும்பிய நிலையில் முஸ்டாபிஜுர் ரஹ்மான் பந்தில் 20 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிந்தார். ரகானே பவுண்டரி லைனில் பந்தை பிடித்து ரச்சின் ரவிந்திராவிடம் தூக்கிப் போட்டார். அவர் கேட்ச் பிடித்தார். அதே ஓவரில கேமரூன் க்ரீன் க்ளீன் போல்டானார். அவர் 22 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்.
இதனால் ஆர்சிபி 11.4 ஓவரில் 78 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது திணறியது.
6-வது விக்கெட்டுக்கு அனுஜ் ராவத் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் ஆர்சிபி 12 ஓவரில் 100 ரன்களை கடந்தது.
18-வது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸ் அனுஜ் ராவத் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் ஆர்சிபி-க்கு 25 ரன்கள் கிடைத்தது. ஆர்சிபி 18.1 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.
முஸ்டாபிஜுர் ரஹ்மான்
19-வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் ஆர்சிபி-க்கு 16 ரன்கள் கிடைத்தது. ஆர்சிபி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்திருந்தது.
கடைசி ஓவரை தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைக்க ஆர்சிபி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சிஎஸ்கே-வுக்கு 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. சிஎஸ்கே அணி சார்பில் முஸ்டாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட் வீழ்த்தினார்.
அனுஜ் ராவத்- தினேஷ் கார்த்திக் ஜோடி 96 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
- அரையிறுதியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
- டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுதான் தமிழ்நாடு தோல்விக்கு முக்கிய காரணம் என பயிற்சியாளர் கருத்து தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு அணி ஏழு வருடத்திற்கு பிறகு ரஞ்சி டிராபி அரையிறுதிக்கு முன்னேறியது. மும்பை அணிக்கெதிராக கடந்த 2-ந்தேதி மும்பையில் அரையிறுதி போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங் தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அணி 146 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் மும்பை 378 ரன்கள் குவித்துவிட்டது. 106 ரன்னுக்குள் மும்பை 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால் 9-வது வீரராக களம் இறங்கிய ஷர்துல் தாகூர் சதம் (109), 10-வது வீரராக களம் இறங்கிய தனுஷ் கோட்டியான் (89 நாட்அவுட்) சிறப்பாக விளையாட மும்பை அணி 378 ரன்கள் குவித்து விட்டது.
பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு 2-வது இன்னிங்சிலும் 162 ரன்னில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
3 நாளில் போட்டி முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு அணியின் கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணம். நான் எப்போதும் நேரடியாகவே பேசுவேன். முதல் நாள் 9 மணிக்கே (டாஸ் சுண்டப்பட்ட நேரம்) நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என பயிற்சியாளர் குல்கர்னி தெரிவித்திருந்தார்.
அணி தோல்வியடையும்போது கேப்டன் மற்றும் அணி வீரர்களும் பயிற்சியாளர் நிற்க வேண்டும். ஆனால், கேப்டனை குறை கூறுவது சரியல்ல என பயிற்சியாளர் குல்கர்னிக்கு எதிராக விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழ்நாடு அணியின் முன்னாள் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் குல்கர்னி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் "இது மிகவும் தவறானது. பயிற்சியாளரிடம் இருந்து மிகவும் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக உள்ளது. ஏழு வருடங்களுக்குப் பிறகு அணியை அரையிறுதி வரை கொண்டு சென்ற கேப்டனுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால் பயிற்சியாளர் முற்றிலுமாக கேப்டன் மற்றும் அணியை பஸ்க்கு கீழ் தள்ளி விட்டுள்ளார்" என்றார்.
- சென்சுரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது சமியை அதிகமாக மிஸ் செய்கிறது.
- முகமது சமி இருந்திருந்தால் சில விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருப்பார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடர், ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி, 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி இன்றைய 3-ம் நாள் உணவு இடைவெளி வரை 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 392 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியை அதிகமாக மிஸ் செய்வதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
சென்சுரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது சமியை அதிகமாக மிஸ் செய்கிறது. பந்து வீச்சு படைக்கு ஒரு தலைவனாக முகமது சமி செயல்படுவார். பும்ராவுக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக இருப்பார். இந்த பிட்ச் பந்தின் சீம் பகுதியை பிடித்து வீசும் பவுலர்களுக்கு சாதகமானது என்பதை போல் தெரிகிறது.
முகமது சமி இருந்திருந்தால் சில விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருப்பார். இந்திய அணி அவரை அதிகமாக மிஸ் செய்கிறது என்பது உறுதி. ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் 27 ஓவர்கள் வீசி 118 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர்.
இன்னொரு பக்கம் சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் 31 ஓவர்கள் வீசி 111 ரன்களை தான் விட்டுக் கொடுத்துள்ளனர். சிராஜும் கொஞ்சம் ரன்களை வாரி வழங்கியிருந்தாலும், அவரால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் வீச முடிந்துள்ளது.
ஒவ்வொரு பந்தை வீசும் போது சிராஜ் அல்லது பும்ரா ஆகியோர் விக்கெட்டுக்கு அருகில் சென்று வருகின்றனர். அதுபோன்ற உணர்வை களத்தில் அளிக்கிறார்கள். ஆனால் ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் பேட்ஸ்மேன்கள் தவறு செய்வதற்காக காத்திருப்பதை போல் தெரிகிறது.
என்று அவர் தெரிவித்துள்ளார்.
- நாளைய போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
- உலகக் கோப்பை போட்டியில் வர்ணனையாளராக ரவி சாஸ்திரி மற்றும் தினேஷ் கார்த்திக் செயல்படுகிறார்கள்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி போல தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மிமிக்ரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. 18 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திலும் 2-வது இடம் முறையே இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அடுத்தடுத்து உள்ளனர்.
நாளை முதல் இடத்துக்காக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
உலகக் கோப்பை போட்டியில் வர்ணனையாளராக ரவி சாஸ்திரி மற்றும் தினேஷ் கார்த்திக் செயல்படுகிறார்கள். கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடும்போது மிரட்டலாக ரவி சாஸ்திரி கமெண்ட் கொடுப்பார். அதனை சுட்டிக்காட்டி தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மிமிக்ரி செய்துள்ளார்.
இந்த வீடியோ உலகக் கோப்பை கிரிக்கெட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.
- தினேஷ் கார்த்திக் 2015-ல் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்து கொண்டார்.
- திருமணநாளான நேற்று அவரது மனைவிக்கு வேடிக்கையான மற்றும் இனிமையான செய்தி ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக். இவர் 2015-ல் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணநாளான நேற்று அவர் சமூக ஊடகங்களில் அவரது மனைவிக்கு வேடிக்கையான மற்றும் இனிமையான செய்தி ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
அதில் "ஆண்டுகள் கடந்தும் நம் இருவரின் முட்டாள்தனத்தால் உண்மையான காதல் வாழ்கிறது டிகே-டிபி தின வாழ்த்துக்கள்," என்று கூறியிருந்தார்.
True love is surviving each other's nonsense year after year ?
— DK (@DineshKarthik) August 20, 2023
Happy DK-DP day ♥️ pic.twitter.com/uLa2RGfdjT
இந்த டுவிட் சமூக வலைதளங்களில் டிராண்டாகி வருகிறது. இவர்களது திருமணநாளுக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்திற்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவராஜ் குமார் படக்குழுவிற்கும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'உங்கள் அன்பை என் இதயத்தில் வைத்திருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ನಿಮ್ಮೆಲ್ಲರ ಪ್ರೀತಿಗೆ ಧನ್ಯವಾದಗಳು. Thank you for the love on #Jailer & Narasimha. In Cinemas near you@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @sunpictures @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi pic.twitter.com/SJ1zxgRlJq
— DrShivaRajkumar (@NimmaShivanna) August 11, 2023
- ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்திற்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இப்படத்தை புகழ்ந்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஜெயிலர் படத்தை மிகவும் ரசித்தேன். சூப்பர் ஸ்டார் மிகவும் சிறந்தவர். நெல்சன் மீண்டும் நிரூபித்துவிட்டார். டார்க் காமெடி காட்சிகளை மிகவும் ரசித்தேன். பின்னணி இசையும் அனிருத்தும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவை" என்று குறிப்பிட்டுள்ளார்.
Loved loved loved #JAILER! ❤️
— DK (@DineshKarthik) August 11, 2023
SUPERSTAR is the best.
Enjoyed it thoroughly!
Nelson has aced it yet again... loved his dark humour ??????
BGM and Anirudh - a match made in heaven
TIGER KA HUKUM ???@rajinikanth @anirudhofficial pic.twitter.com/efPvPSKif4
- வங்கதேச அணியினர் பல சமயங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் நாகினி ஆட்டம் ஆடுவர்.
- இதனை பல எதிரணிகள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளன.
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) தொடரில் நேற்று கல்லே டைட்டன்ஸ் மற்றும் தம்புல்லா ஆரா அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தம்புல்லா ஆரா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய கல்லே டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து தம்புல்லா ஆரா அணி களமிறங்கியது. அந்த அணி 4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்தது.
அப்போது திடீரென் மைதானத்துக்குள் பாம்பு புகுந்தது. இதனால் களத்தில் இருந்த அம்பயர் போட்டியை நிறுத்துமாறு கூறினார். இதைத் தொடர்ந்து அம்பயர் மற்றும் அதிகாரிகள் பாம்பை களத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர். இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன. அந்த வகையில், கிரிக்கெட் களத்திற்கு இந்த சம்பவம் புதிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே.
The snake invaded the field and stopped play in the Lanka Premier League. pic.twitter.com/YJJxG5XV8V
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 31, 2023
இந்நிலையில் இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வங்கதேச அணியை கிண்டலடித்துள்ளார். எல்.பி.எல். போட்டியின் போது பாம்பு களத்திற்குள் வந்து இடையூறை ஏற்படுத்திய வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து தினேஷ் கார்த்திக் டுவீட் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"நாகினி வந்துவிட்டது. நான் இதை வங்கதேசம் என்று நினைத்தேன்," என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வங்கதேச அணியினர் பல சமயங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் நாகினி ஆட்டம் ஆடுவர். இதனை பல எதிரணிகள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளன. அந்த வகையில், இந்த சம்பவத்தை வங்கதேச அணியுடன் ஒப்பிட்டு, அவர்களை தினேஷ் கார்த்திக் கிண்டலடித்துள்ளார்.
- 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் வீரர் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார்.
- இந்த மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.
இந்த மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல நடிகர் யோகிபாபு, நடிகர் புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது மட்டுமின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி, சி.எஸ்.கே. சிஇஓ விஸ்வநாதன் மற்றும் திருச்சி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்நிலையில், சேலத்தில் நடிகர் யோகிபாபு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
நானும் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டி கிரிக்கெட் வீரர் நடராஜன் மாதிரி நிறைய வீரர்களை உருவாக்கலாம் என ஆசை உள்ளது. ஐ.பி.எல்., டி.என்.பி.எல். இளைஞர்கள் விளையாடுகிறார்கள். எல்லோருடைய பங்களிப்பும் திறமையாக உள்ளது. எனக்கு ரொம்ப பிடித்த கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். அடுத்தது நம்முடைய தமிழக வீரர் நடராஜை பிடிக்கும். அடுத்து கிரிக்கெட் தொடர்பான படம் நடிக்க உள்ளேன்.
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பணியை சரியாக செய்து கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அழைத்து உற்சாகப்படுத்தி உள்ளார். அதுபோல் தோல்வி அடைந்தவர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளார். அவர் நல்ல விஷயம் தான் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.
- இந்த மைதானத்தில் 4 பிட்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் அமரக்கூடிய வகையில் இடமும் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார். அவருடைய தாய், தந்தை முன்னிலையில் மைதானம் திறக்கப்பட்டது. இந்த மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.
அதேபோல நடிகர் யோகிபாபு, நடிகர் புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது மட்டுமின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி, சி.எஸ்.கே. சிஇஓ விஸ்வநாதன் மற்றும் திருச்சி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்த மைதானத்தில் 4 பிட்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் அமரக்கூடிய வகையில் இடமும் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டி.என்.பி.எல்) நடராஜன் திருச்சி அணியில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார்.
- இவர்கள் இருவரும் 16 முறை டக் அவுட்டில் வெளியேறி உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. 3 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 59 ரன்னில் சுருண்டது.
முன்னதாக முதல் பேட்டிங் செய்த பெங்களூர் அணியின் கீப்பர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் 16 முறை டக் அவுட்டில் வெளியேறி உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக மந்தீப் சிங், சுனில் நரேன் (15 முறை) உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்