search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்கலை"

    • பாஜக பெண் கவுண்சிலர் உள்பட 3 பேருக்கு போலீசார் வலை வீச்சு
    • போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே மேக்காமண்டபம் காஞ்சிரத்துகோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்பர்ஜன் (வயது 42).இவர் காஞ்சிரத்துகோணம் பகுதியில் கிளிஸ்தவ சபை நடத்தி வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி தக்கலை அருகே பத்மனாபபுரம் அரண்மனை அருகில் தனது காரில் வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அப்போது பாஜக கவுன்சிலர் ஷீபா மற்றும் கணவர் நாகராஜன், பத்மனாபபுரம் பகுதியை சேர்ந்த வவ்வால் என்ற ராஜன் மற்றும் சாரோடு பகுதியை சேர்ந்த வின்சென்ட் சர்சில் ஆகி யோர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி ஸ்பர்ஜனை தாக்கி காரையும் உடைத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த ஸ்பர்ஜன் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பார்வதிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

    இதுப்பற்றி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் 4 பேர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று மதியம் பத்மனாபபுரம் பகுதியில் வைத்து ராஜனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்
    • தக்கலை வட்டவழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் அதிகாரிகள் வாகனச் சோதனை

    கன்னியாகுமரி:

    தக்கலை வட்டவழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பரைகோடு வழியாக ஒரு சொகுசு வேன் வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் வேனை தடுத்து நிறுத்திய போது நிற்காமல் வேக மாக சென்றது. உடனே அதிகாரிகள் பின் தொடர்ந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சென்று சுவாமி யார்மடம் பகுதியில் மடக்கி பிடித்தனர். உடனே வேன் டிரைவர் சம்பவ இடத்தில் வாகனத்தினை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.

    பின்னர் வாகனத்தினை சோதனை செய்த போது அதில் மீன் வைக்கும் பெட்டிகளை அடுக்கி அதன் அடிப்பகுதியில் நூதன முறையில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி கடத்துவதற்கு ஏதுவாக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து வாகனத்துடன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    பறிமுதல் செய்த வேனை தக்கலை தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பஸ்சில் பயணிகள் யாரும் இல்லை.
    • நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி எம் சேண்ட் ஏற்றி கொண்டு டாரஸ் லாறியை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் அழைத்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் பனிமனை யில் இருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று நாகர்கோவில் நோக்கி சென்றது. தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே வரும் போது எதிரே நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி எம் சேண்ட் ஏற்றி கொண்டு டாரஸ் லாறி வந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் முன் பகுதி சேதமடைந்தது. பஸ்சின் கண்ணாடி முழுவதும் உடைந்தது.

    பஸ்சில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இந்த விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் டாரஸ் லாறி ஓட்டி வந்த டிரைவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணத்தை தடுத்து நிறுத்திய பட்டதாரி பெண்
    • ஆசைக்கு இணங்காததால் தொடர்பை துண்டித்ததாக போலீசில் புகார்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மூலச்சல் பந்திவெட்டான் பாறவிளை பகுதியைச் சேர்ந்த 24 வயது எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் தக்கலை தாரோடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் சுபின் (27) என்பவருக்கும் சமூக வலை தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காதலன் சுபின் சரியாக பேச வில்லையாம். பட்டதாரி பெண் போன் செய்தாலும் எடுக்காமல் துண்டித்துள்ளார். இதனால் சுபின் பற்றி விசாரித்த போது அவருக்கு வேறு ஓரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானதும், 23-ந் தேதி (இன்று) திரும ணம் நடக்க உள்ளதும் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பட்டதாரி பெண், நேற்று மாலை தக்கலை போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை சுபின் திருமணம் செய்ய உள்ளதாக அவர் தெரி வித்தார். இது தொடர்பாக தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சுபின் வீட்டுக்குச் சென்று விசா ரணை நடத்தினர். அப்போது காதல் விவகாரம் உண்மை தான் என தெரிய வந்தது. இதனால் சுபின் திருமணம் தடை பட்டது.

    இது தொடர்பாக பட்டதாரி பெண் போலீசில் கொடுத்த புகாரில், கடந்த 3½ ஆண்டுகளாக நானும் சுபினும் காதலித்து வந்தோம். விடுமுறை கிடைக்கும் போது நேரில் சந்தித்து பேசுவோம். சில மாதங்களுக்கு முன்பு அவர் உல்லாசமாக இருக்க விரும்பினார்.

    ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. அதன் பிறகு சுபின் நடவடிக்கை யில் மாற்றம் ஏற்பட்டது. என்னுடன் பேசுவதை தவிர்த்தார். நான் போன் செய்தாலும், இணைப்பை துண்டித்தார். மேலும் சில நாட்களாக அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்தது.

    நண்பர்கள் மூலம் விசாரித்த போது, சுபினுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் வேறு வழியின்றி புகார் கொடுக்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.

    புகார் கூறப்பட்டுள்ள சுபின், தற்போது சென்னையில் பணியில் உள்ளார். திருமணத்திற்காக விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். திருமணம் தடை ஆனதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினரிடமும் பட்டதாரி பெண்ணிடமும் போலீசார் பேசி வருகின்றனர்.

    • சாமியார்மடம் சந்திப்பு பகுதியில் சென்ற போது விபத்து
    • தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஏற்றக்கோடு கண்ணன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது 31), தொழிலாளி.

    இவர் நேற்று தக்கலையில் பணி செய்துள்ளார். பின்னர் இரவில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குப் புறப்பட்டார். தக்கலையில் இருந்து மார்த்தாண்டம் சாலையில் ஸ்ரீகண்டன் சென்றார்.

    சாமியார்மடம் சந்திப்பு பகுதியில் சென்ற போது, பின்னால் டாரஸ் லாரி வந்தது. அந்த லாரி எதிர்பா ராதவிதமாக, ஸ்ரீகண்டன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீகண்டன் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிேசாதனை செய்த டாக்டர்கள், ஸ்ரீகண்டன் இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து அவரது சகோ தரர் மஞ்சாடி பாலு, தக்கலை போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த விரிகோடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் தனேந்திரன் (36) என்பவரை கைது செய்தனர்.

    • போலீசார் அபராதம் விதித்தனர்
    • கடத்த முயன்ற மணலிக்கரை பகுதியை சேர்ந்த ஒருவர் கைது

    கன்னியாகுமரி:

    கொற்றிகோடு சப் இன்ஸ்பெக்டர் றசல் ராஜ் தலைமையில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தக்கலை அருகே கைசாலவிளை என்ற பகுதியில் அனுமதி இல்லாமல் பாறை கற்கள் உடைத்து வாகனத்தில் கடத்தபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்த போது கடத்தல்காரர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்று டெம்போவில் கருங்கல் கடத்த முயன்ற மணலிக்கரை பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது 22) என்பவரை கைது செய்தனர். அவர் ஒட்டி வந்த டெம்போவையும், கருங்கல்லையும் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்
    • கொற்றிகோடு போலீசார் ஆற்றுகோணம் சென்று மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    கன்னியாகுமரி:

    பொங்கல் அன்று தக்கலை அருகே கைசாலவிளை மேக்காமண்டபம் பகுதியில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஒவ்வொரு வீடாக சென்று பார்ப்பதும் செல்வதுமாக இருந்துள்ளார்.

    இதை கவனித்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூதாட்டியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவரது பெயர் கமலாட்சி எனவும், தனது மகளுக்கு பொங்கல் கொண்டு வந்ததாகவும் வீடு அடையாளம் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தனது மகளின் பெயர் ஊர் கேட்ட போது மகள் பெயர் கிரேசி எனவும் ஊர் பெயர் தெரியவில்லை எனவும் கூறினார். மேலும் தனது மகளை பார்க்க மேக்காமண்டபம் வந்து இந்த பாதை வழியாக வருவேன் எனவும் கூறினார்.

    பொதுமக்கள் மூதாட்டியை அமர வைத்து விசாரிக்க தொடங்கினர். பல மணி நேரம் ஆன பின்பும் மகள் வீடு கண்டுபிடிக்க முடியாததால் கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மூதாட்டியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூதாட்டியின் வீடு புதுக்கடை காட்டுவிளை என கூறியதால் போலீசார் புதுக்கடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் மூதாட்டியின் போட்டோவையும் அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக புதுக்கடை போலீசார் விசாரணை செய்த போது மூதாட்டியின் கணவர் செல்லையா எனவும், அவர் இறந்த பிறகு மகன் தாஸ் வீட்டில் வசித்து வருவதும் பொங்கல் அன்று மகளை பார்க்க பொங்கல்படி கொண்டு சென்றுள்ளார். மகளின் வீடு ஆற்றுகோணம் பகுதியில் உள்ளது என தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து கொற்றிகோடு போலீசாருக்கு புதுக்கடை போலீசார் தெரிவித்தனர். பின்னர் கொற்றிகோடு போலீசார் ஆற்றுகோணம் சென்று மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மூதாட்டி தனது மகளையும், பேரக்குழந்தையும் பார்த்து கண் கலங்கினார். பின்னர் மூதாட்டியை அவரது மகளுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். மூதாட்டி வீடு அடையாளம் தெரியாமல் தவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடைபெற்றது.
    • அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு பொதுமக்கள் பயன்பெற வேண்டும்.

    நாகர்கோவில்:

    தமிழக அரசு துறைகளின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.இந்த திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படக் கண் காட்சி நடத்தப்படுகிறது.

    அதன்படி தக்கலை ஒன்றியம், திக்கணங்கோடு பகுதியில் அரசின் சாத னைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன் பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண் காட்சி நடைபெற்றது.

    இதுகுறித்து கலெக்டர் அரவிந்த் கூறுகையில், ஏழை, எளிய, கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி நடக்கிறது.

    அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெற்று பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமூக வலைதளத்தில் வைரலான விபத்து காட்சிகளால் பரபரப்பு
    • படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அழகியமண்ட பம் அருகே சம்பவத்தன்று ஒரு கார் வேகமாக சென்றது. அந்தக் கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அதே வேகத்தில் சென்ற கார் சாலையின் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது.மேலும் சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஆட்டோ வையும் இடித்து சேதப்படு த்தியது. இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில் கட்டுப் பாட்டை இழந்த கார், இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மோதிய காட்சிகள் சமூக வலை தளத்தில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனைத் தொடர்ந்து விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்தது கருங்கல் பகுதியைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவர் என்பதும் அவர் தனது பெண் நண்பருடன் வந்த போது தான் விபத்து ஏற்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

    விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் வந்த பிலாங்காலை சேர்ந்த சோனி (வயது43) படுகாய மடைந்த நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் சேத மடைந்த ஆட்டோவில் இருந்த டிரைவர் இரவி புதூர் கடை பகுதியை சேர்ந்த எட்வின் வசந்த் என்பவரும் காயம் அடைந்தார்.

    • இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை பழகத்திற்கு அடிமையானார்.
    • இவர் பெற்றோர் அறிவுரை கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே பருத்தி கோட்டை விளை காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் பீட்டர் தாமஸ். இவரது மகன் விஜின் பிரகாஷ் (வயது 24). என்ஜினீயரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை பழகத்திற்கு அடிமையானார்.

    இவரை பெற்றோர் அறிவுரை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விஜின் பிரகாஷ் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். தாய் மேரி விஜிலா இதை பார்த்து அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். டாக்டர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை விஜின் பிரகாஷ் உயிரிழந்தார்.

    இது சம்பந்தமாக தாய் மேரி விஜிலா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடுகிறார்கள்
    • தக்கலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடக்கிறது

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே முளகுமூடு, மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் டக்ளஸ் (வயது 55). கூலி தொழிலாளி.

    டக்ளசின் மனைவி வனஜா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று இரவு டக்ளஸ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு பொருள் வாங்க முளகுமூட்டுக்கு சென்றார். அப்போது முப்பதாங்கல் மெயின் ரோட்டில் வரும் போது எதிரே வந்த வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட டக்ளசை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது சம்மந்தமாக மனைவி வனஜா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் உடலை கைப்பற்றி தக்கலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் டக்ளஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் ஏது என அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    • போலீசாருடன் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார்
    • குடும்பத்தோடு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

    கன்னியாகுமரி:

    புத்தாண்டையொட்டி வெளி மாவட்டங்களில் வேலை பார்த்து வந்த பலரும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

    மேலும் வெளியூர்களில் தங்கி மீன்பிடித்த மீனவர் கள் பலரும் ஊருக்கு வந்துள்ளனர். இதை யடுத்து மாவட்டம் முழுவ தும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று இரவு வடசேரி, தக்கலை, குளச்சல், கன்னி யாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். புத்தாண்டை வரவேற்கும் வகையில் தக்கலை பஸ் நிலையம் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் அவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.

    நிகழ்ச்சி யில், ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், தக்கலை இனஸ் பெக்டர் நெப்போ லியன், வர்த்தக சங்க துணை தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் பல்வேறு தெரு வீதிகளில் இளைஞர்கள், வாலிபர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி னார்கள். புத்தாணை் டையடுத்து இன்று காலையில் திற்பரப்பு அருவியில் கூட்டம் அலை மோதியது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வந்த நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அருவியில் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்தனர்.

    மாத்தூர் தொட்டில் பாலம் குளச்சல் பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. குடும்பத்தோடு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்திருந்தனர். அவர்கள் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    ×