தக்கலை அருகே அனுமதி இல்லாமல் கருங் கல் கொண்டு சென்ற டெம்போ பறிமுதல்

போலீசார் அபராதம் விதித்தனர்கடத்த முயன்ற மணலிக்கரை பகுதியை சேர்ந்த ஒருவர் கைது
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

கொற்றிகோடு சப் இன்ஸ்பெக்டர் றசல் ராஜ் தலைமையில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தக்கலை அருகே கைசாலவிளை என்ற பகுதியில் அனுமதி இல்லாமல் பாறை கற்கள் உடைத்து வாகனத்தில் கடத்தபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்த போது கடத்தல்காரர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்று டெம்போவில் கருங்கல் கடத்த முயன்ற மணலிக்கரை பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது 22) என்பவரை கைது செய்தனர். அவர் ஒட்டி வந்த டெம்போவையும், கருங்கல்லையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com