search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி சாவு
    X

    ஸ்ரீகண்டன்

    தக்கலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி சாவு

    • சாமியார்மடம் சந்திப்பு பகுதியில் சென்ற போது விபத்து
    • தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஏற்றக்கோடு கண்ணன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது 31), தொழிலாளி.

    இவர் நேற்று தக்கலையில் பணி செய்துள்ளார். பின்னர் இரவில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குப் புறப்பட்டார். தக்கலையில் இருந்து மார்த்தாண்டம் சாலையில் ஸ்ரீகண்டன் சென்றார்.

    சாமியார்மடம் சந்திப்பு பகுதியில் சென்ற போது, பின்னால் டாரஸ் லாரி வந்தது. அந்த லாரி எதிர்பா ராதவிதமாக, ஸ்ரீகண்டன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீகண்டன் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிேசாதனை செய்த டாக்டர்கள், ஸ்ரீகண்டன் இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து அவரது சகோ தரர் மஞ்சாடி பாலு, தக்கலை போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த விரிகோடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் தனேந்திரன் (36) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×