search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெம்போ"

    • சிகிச்சையில் இருந்த பாட்டியும் சாவு
    • குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜவகர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    கன்னியாகுமரி,நவ.20-

    கொட்டாரம் ராமர் கோவில் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜவகர் (வயது 31). இவர் தண்ணீர் கேன் போடும் டெம்போவில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவரது பாட்டி புஷ்பம் (75) உடல்நிலை பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை உடன் இருந்து கவனித்து வந்த ஜவகர், பாட்டி இறந்து விடுவாரோ என்ற மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இதனால் மனம் உடைந்த அவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜவகர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    அதன் பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதற்கிடையில் பாட்டி புஷ்பமும் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்து விட்டார். பேரனை தொடர்ந்து பாட்டியும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மஞ்சத்தோப்பு பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கொல்லங்கோடு :

    கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) அருள்பிர காஷ், சப்-இன்ஸ் பெக்டர் ஹரிகுமாரன் நாயர் மற்றும் போலீசார் கிராத்தூர் பகுதியில் கடந்த 7-ந்தேதி ரோந்து சென்றனர்.

    அப்போது கிராத்து ரை அடுத்த கரியறவிளை பகுதியில் ஒரு மினி டெம்போவில் கேரளாவுக்கு செம்மண் கடத்திக் கொண்டு வருவதை பார்த்து டெம்போவை தடுத்து நிறுத்தி னர். அப்போது திடீரென்று ஓட்டுநர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து போலீசார் டெம்போவை பறிமுதல் செய்து டிரைவரை தேடி வந்தனர். மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜன் என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மஞ்சத்தோப்பு பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கொல்லங் கோடு போலீஸ் இனெ்ஸ் பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று தலைமறைவாக இருந்த ராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நள்ளிரவு 12 மணிக்கு தூத்துக்குடி நோக்கி புறப்பட்டு சென்றது.
    • கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்று ரோட்டோரமாக இருந்த மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் உள்ள ஒரு மீன் கம்பெனியில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்று நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தூத்துக்குடி நோக்கி புறப்பட்டு சென்றது.

    இந்த டெம்போவில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கணவன்-மனைவியான ராஜீவ் (வயது 31), டிஜினா (28) ஆகியோரும் அங்குள்ள ஒரு மீன் கம்பெனியில் வேலை செய்வதற்காக சென்றனர். இந்த டெம்போ அஞ்சுகிராமம் அருகே 4 வழிச்சாலையில் செல்லும் போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்று ரோட்டோரமாக இருந்த மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

    இதில் அந்த டெம்போவில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த டிஜினா (28) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த விபத்தில் அவரது கணவர் ராஜீவ் மற்றும் டிரைவர் ஆகிய 2 பேரும் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலகம் மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி அந்த டெம்போவில் படுகாயத்துடன் இருந்த டிஜினாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுராபிரிஜியா ஓட்டி வந்த தண்ணீர் டேங்க் ஏற்றி வந்த டெம்போ பன்னீர்செல்வம் மீது மோதியது
    • சிகிச்சை பலனின்றி பன்னீர் செல்வம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி :

    தென்தாமரைகுளம் அருகே உள்ள முகிலன்குடியிருப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 70). இவர் அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 24-ந்தேதி பன்னீர் செல்வம் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரியில் இருந்து மணக்குடி சாலையில் முகிலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் கீழமணக்குடி அருகே உள்ள ஒரு தும்பும் மில்லில் வேலை பார்த்து வரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மதுராபிரிஜியா ஓட்டி வந்த தண்ணீர் டேங்க் ஏற்றி வந்த டெம்போ பன்னீர்செல்வம் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பன்னீர் செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பன்னீர் செல்வம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மூத்த மகள் அகிலா தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அதிர்ச்சி அடைந்த அவர் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்வையிட்டார்
    • பெட்டிக்கடையை மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்த 5 பேர் சேர்ந்து ஒரு டெம்போவில் ஏற்றி சென்றது

    கன்னியாகுமரி :

    கொல்லங்கோட்டை அடுத்த மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 55). இவரது மனைவி இந்திரா மேபல் (53). இவர் மஞ்சத்தோப்பு பகுதியில் சுமார் 1 வருடமாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் கடையை திறப்பதற்காக வழக்கம் போல் நேற்று காலை கடைக்கு வந்து பார்த்தார். அப்போது அவரது கடையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்வையிட்டார். அதில், சுமார் 12.30 மணிக்கு இந்த பெட்டிக்கடையை மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்த 5 பேர் சேர்ந்து ஒரு டெம்போவில் ஏற்றி சென்றது தெரியவந்தது. இது குறித்து இந்திரா மேபல் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிரைவரின் கால் முறிந்தது
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 31).

    இவர் நெல்லை மாவட் டத்தில் இருந்து டெம்போ வில் வாழை கண்கள் ஏற்றி கொண்டு மார்த்தாண் டத்தை அடுத்த வெட்டு மணி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென டெம்போ பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி உள்ளது.

    இதனால் டெம்போவின் முன்பகுதி சேதம் அடைந் துள்ளது. இதில் ஏற்பட்ட விபத்தில் டெம்போ ஓட்டுநர் இசக்யப்பனின் கால் முறிந்தது.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
    • குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மங்கலம் சந்திப்பு பகுதியில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் அரசு பள்ளிகூடம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    எப்போதும் பரப்பரப் பாக காணப்படும் இந்த பகுதியில் பட்டணம் பேச்சிப்பாறை பட்டணம் கால்வாய் பாய்கிறது. இங்கு அடிக்கடி இரவு நேரங்களில் கோழி கழிவுகளை மர்ம நபர்கள் சானல் கரை யோரம் கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது.

    இதனால் சுகாதாரகேடு ஏற்பட்டு வந்தது.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குலசேகரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்த னர். போலீசார் வந்து பார்வை யிட்டு அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வந்தார்கள். நேற்று வழக்கம்போல் இரவில் அந்த பகுதியில் மினி டெம்போவில் ஒரு பேரல் நிறைய கோழி கழிவு களை கொண்டுவந்து சாலை யோரம் கொட்டிவிட்டு பேரல்நிறைய சானலில் இருந்து தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார்கள்.

    இதுபற்றிய தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பொன்மனை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ராதா கிருஷ்ணன் தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து மினி டெம்போவை சுற்றி வளைத்து பிடித்தார்கள்.

    இது பற்றி குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    • போலீசார் அபராதம் விதித்தனர்
    • கடத்த முயன்ற மணலிக்கரை பகுதியை சேர்ந்த ஒருவர் கைது

    கன்னியாகுமரி:

    கொற்றிகோடு சப் இன்ஸ்பெக்டர் றசல் ராஜ் தலைமையில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தக்கலை அருகே கைசாலவிளை என்ற பகுதியில் அனுமதி இல்லாமல் பாறை கற்கள் உடைத்து வாகனத்தில் கடத்தபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்த போது கடத்தல்காரர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்று டெம்போவில் கருங்கல் கடத்த முயன்ற மணலிக்கரை பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது 22) என்பவரை கைது செய்தனர். அவர் ஒட்டி வந்த டெம்போவையும், கருங்கல்லையும் பறிமுதல் செய்தனர்.

    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • விசாரணையில் டெம்போவை தீ வைத்து எரித்த வாலிபர் கைது

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த குழுமைகாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது.இதுபற்றி அப்பகுதி மக்கள் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

    இதில் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் டெம்போவின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்து தீ வைத்து எரித்து இருந்தது தெரியவந்தது .இது குறித்து தனிப்பிரிவு எஸ். ஐ. சிவசங்கர் தனிப்பிரிவு ஏட்டு சுஜி ஆகியோர் மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வில்லுக்குறி பகுதியில் நடந்து சென்ற வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்.

    அப்பொழுது குழுமைக்காடு பகுதியில் நிறுத்தி இருந்த டெம்போவை தீ வைத்து எரித்த நபர் அவர்தான் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு நடந்த விசாரணையில் தீ வைத்து எரித்த வாலிபர் ராஜேஷ் (வயது 27) என்பதும் அவர் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகர்கோவில் புவியியல் மற்றும் சுங்கத்துறை தனிப்படையினர் வாகன தணிக்கை
    • இரணியல் போலீஸ் விசாரணை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி இயக்குனர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று காலை தோட்டியோடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை நிறுத்தியபோது டெம்போ டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    டெம்போவை தனிப்படை போலீசார் சோதனை செய்தபோது, அதில் அரசு அனுமதி இன்றி எம்சாண்ட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. டெம்போவுடன் அவற்றை பறிமுதல் செய்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • செம்மண் கடத்தியவர்கள் தப்பி சென்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே நல்லூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக நல்லூர் கிராம அலுவலர் செலஸ்டின் ராஜீக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது, அங்கு செம்மண் கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் செம்மண் கடத்த பயன்படுத்திய டெம்போ மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கண் இமைக்கும் நேரத்தில் டெம்போ, பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • தூக்கி வீசப்பட்ட பெண்ணை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே வெள்ளிகோடு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி மேரி ஏஞ்சல் (வயது 62).

    இவர் நேற்று மாலை வெள்ளி கோட்டில் உள்ள ஒரு கடையில் பொருள்கள் வாங்க சென்றார். அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவிலை நோக்கி ஒரு டெம்போ வேகமாக வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் டெம்போ, பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பெண்ணை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

    இது குறித்து அவரது மகன் லீபன்ஸ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து நிற்காமல் சென்ற டெம்போ டிரைவரை தேடி வருகின்றனர்.

    ×