search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்கள்"

    • பல்வேறு காரணங்களால் கோவில்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் மாயமானது.
    • மீதம் உள்ள நிலங்களும் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    குடிமங்கலம்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்களில் நித்ய கால பூஜைகள், திருவிழாக்கள், பராமரிப்பு பணிகள் நிறைவாக நடக்கும் வகையில் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பல்வேறு காரணங்களால் கோவில்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் மாயமானது.

    அரசு உத்தரவு அடிப்படையில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க இந்து சமய அற நிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.நிலங்கள், வணிக மனைகள், வீட்டு மனைகள் குறித்து முழுமையாக ஆவணங்கள் சேகரித்து இணைய தளத்தில் ஏற்றும் பணியும் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1,410 கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு சொந்தமாக 49 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் உள்ளன.கோவில்களுக்கு சொந்தமானது, ஆண்டு குத்தகை,பயன்படுத்தாமல் உள்ள நிலங்கள், ஆக்கிரமிப்பு நிலங்கள் என அனைத்து வகையான நிலங்களையும் அளவீடு செய்து மீட்க வருவாய்த்துறை மற்றும் நில அளவீடு துறையில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அக்குழுவினர் ஒவ்வொரு நிலங்களையும் நவீன உபகரணங்கள் கொண்டு அளவீடு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோவில் நிலங்களில் இந்து சமய அறநிலையத்துறை பெயர் பொறித்த தனித்துவமான எல்லை கற்கள் தயாரித்து கோவில்கள் சார்பில் அக்கற்கள் நிலங்களில் நடும் பணியும் துவங்கியுள்ளது.

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியிலுள்ள பழமையான கோவில்களுக்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இப்பணி நடந்து வருகிறது.

    இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து பழைய ஆவணங்கள் அடிப்படையில் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.தற்போது கோவில் வசம் உள்ள நிலங்கள், குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நிலங்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் என அனைத்து நிலங்கள் குறித்தும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்புக்குழு பழைய ஆவணங்கள் அடிப்படையில் கோவில் நிலங்கள் குறித்து கணக்கெடுத்து அதில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.இதில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அறநிலையத்துறை சட்டத்தின் அடிப்படையில் உடனடியாக அகற்றப்படுகிறது.

    அதே போல் முறைகேடாக பெயர் மாற்றம் செய்திருந்தால் மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக உரிய முறையில் பெயர் மாற்றம் செய்து மீட்கப்படுகிறது. அனைத்து நிலங்களும் மீட்கப்பட்டு எல்லை கற்கள் மற்றும் சுற்றிலும் கம்பி வேலி பாதுகாப்பு ஏற்படுத்தவும் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    தற்போது உடுமலை, தாராபுரம் பகுதிகளில் ஏறத்தாழ 7,300 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலங்களும் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் கோவில் வசம் உள்ள நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலங்கள் என டிஜிட்டல் சர்வே மேற்கொள்ள நிலங்களில் கோவிலுக்கு சொந்தமான நிலம் என அடையாளப்படுத்தும் வகையில் அறநிலையத்துறை என தனித்துவப்படுத்தும் வகையில் எல்லை கற்கள் தயாரிக்கப்பட்டு அவை அனைத்து கோவில் நிலங்களிலும் நடப்பட்டு வருகிறது.கோவில் நிதி நிலைமைக்கு ஏற்ப அடுத்த கட்டமாக கம்பி வேலி பாதுகாப்பும் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • கோவில்களில் இரவு காவல் பணிக்கு தகுதி திறமை வாய்ந்த காவலாளிகளை நியமிக்க வேண்டும்.
    • கூடுதல் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம்:

    கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -திருப்பூரில் கோவில் பூசாரி ஒருவர் கொல்லப்பட்டது மிகவும் துரதிஷ்டவசமானது.இந்த சம்பவத்திற்கு கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

    தமிழகத்திலுள்ள பெரும்பாலான கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் இரவு நேர காவலாளிகளாகவும் வேலை பார்த்து வருகின்றனர். கோவில்களில் இரவு காவல் பணிக்கு தகுதி திறமை வாய்ந்த காவலாளிகளை நியமிக்க வேண்டும்.செலவை குறைக்கும் நோக்கில், சில கோவில்களில் இதுபோன்ற அவலம் நிலவுகிறது. உயிரிழந்த பூசாரிக்கு நீதி கிடைக்க வேண்டும். அவரது குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.கூடுதல் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு கூடுதல் பொறுப்பாக காவலாளிகளாக வேலை வழங்குவதை கோவில் நிர்வாகங்கள் தவிர்க்க வேண்டும். கோவில்களில் காவலாளிகளை நியமிப்பதுடன், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3 கோவில்களில் 8 ஏக்கர் 84 செண்ட் நிலம் மீட்கப்பட்டது.
    • ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலின், குழுக் கோவிலான பழைய பேரா–வூரணி பிரசன்ன வெங்கடேச–பெருமாள், செங்கமங்கலம் தெய்வாங்கப் பெருமாள், மார்க்கண்டேஸ்வரர் ஆகிய மூன்று கோவில்களுக்கும் சொந்த மான ஆக்கிரமிப்பு நிலம் மீட்க முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து தஞ்சாவூர் இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையர் நாகையா, இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் சங்கர், நில அளவையர் ரெங்கராஜன், பேராவூரணி சரக ஆய்வாளர் அமுதா ஆகியோர் முன்னி–லையில், நீலகண்ட பிள்ளையார் கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் ஆக்கிரமிப்பு தாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் தீர்வு காணப்பட்டு, ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்து கோயில் நிலம் மீட்கப்பட்டு அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்டு, அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.

    மொத்தம் 3 கோவில்களில் 8 ஏக்கர் 84 செண்ட் நிலம் மீட்கப்பட்டது. அதாவது ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். ஆக்கிர–மிப்பு மீட்பு பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    • ராமநாதபுரம், ரகுநாதபுரம் கோவில்களில் நவராத்திரி உற்சவ விழா நடந்தது.
    • கடந்த மாதம் 26-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கடந்த மாதம் 26-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாட்களும் வல்லபை மஞ்சமாதா பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வல்லபை கொலு மண்டபத்தில் பள்ளி மாணவர்களின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

    விஜயதசமியை முன்னிட்டு நேற்று இரவு 7 மணிக்கு வல்லபை மஞ்ச மாதாவிற்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டு உற்சவ மூர்த்தி புறப்பாடு நடந்தது.

    கோவில் முன்பு உள்ள திடலில் வில்லில் இருந்து அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்தார்.

    ராமநாதபுரம் சமஸ்தா னம் அரண்மனை வளா கத்தில் உள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு கடந்த மாதம் 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் நவராத்திரி விழா தொடங்கியது.

    விழாவையொட்டி அம்மன் காமதேனு, சிம்மம், ரிஷபம் ஆகிய வாகனத்தில் அருள் பாலித்தார். நேற்று விஜயதசமியை முன்னிட்டு இரவு அம்மன்தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி பரிவார தெய்வங்களுடன் கேணிக்கரை ரோட்டில் உள்ள மகர் நோன்பு திடலில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அசுரன் மீது அம்பு எய்யும் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதே போல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், வன சங்கரியம்மன் கோவில்களில் அம்மன் அலங்காரத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.

    கன்னிகா பரமேஸ்வரி கோவில், மகா சக்திநகர் மாரியம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் வைத்து பூஜைகள் நடந்தது. ராமநாதபுரம் ரெயில்வே பீடர் ரோடு வெட்டுடையாள் காளியம்மன் கோவில், பிள்ளைக்காளியம்மன் கோவில், கலெக்டர் அலுவலக வளாகம் மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் விஜயதசமி சிறப்பு அலங்காரத்தில் வழிபாடு நடந்தது.

    அழகன் குளம் ஆண்டாள் சமேத சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

    • மானாமதுரை கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
    • இங்கு சித்திரை, ஆடி மற்றும் நவராத்திரி விழாக்கள் நடைபெறும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றுகரையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோமநாதர் கோவில் உள்ளது. இங்கு சித்திரை, ஆடி மற்றும் நவராத்திரி விழாக்கள் நடைபெறும்.

    சாரதா நவராத்திரி விழா நேற்று இரவு தொடங்கியது. வருகிற 5-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.அம்மன் சன்னதியில் அமைக்கப்பட்ட கொலு பொம்மைகளை ஏராள மான பக்தர்கள் பார்வையிட்டனர்.

    மானாமதுரை ஆதனூர் சாலையில் உள்ள நலம்தரும் சீரடிபாபா கோவிலில் நவராத்திரி உற்சவவிழா தொடங்கியது. வருகிற 5-ந்தேதி கலசபூஜை, வித்யாரம்பம், அன்னதானம் நடைபெறுகிறது. மெயின் பஜாரில் உள்ள தியாகவிநோதப் பெருமாள் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாதொடங்கியது.

    இதில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. வருகிற 5-ந்தேதி புதிய குதிரை வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • இக்கோவில்களுக்கு பக்தா்களால் தானமாக வழங்கப்பட்ட ஏறத்தாழ 500 ஏக்கா் நிலங்கள் உள்ளன.
    • கோவில் நிலங்களை மீட்டு அதிக வருமானம் வரும் வகையில் முறைப்படி குத்தகைதாரா்களை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோவில், தெய்வநாயகி உடனமா் சோழீஸ்வர சுவாமி, வள்ளியிரச்சல் அழகு நாச்சியம்மன், மாந்தீஸ்வரா், வரதராஜப் பெருமாள், புஷ்பகிரி வேலாயுதசாமி, முத்தூா் சோழீஸ்வரா், மங்கலப்பட்டி உமய காளியம்மன், பாண்டீஸ்வரா், நாச்சிபாளையம் செல்லாண்டியம்மன், சேனாபதிபாளையம் திருமலை அம்மன், குருக்கத்தி செல்லாண்டியம்மன், லக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரசுவாமி, வரதராஜப் பெருமாள், காவலிபாளையம் பொன்னாச்சியம்மன், உத்தமபாளையம் மாரியம்மன், காசிவிஸ்வநாதா், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி, மாரியம்மன், கண்ணபுரம் விக்ரம சோழீஸ்வரா், மாரியம்மன், செல்வவிநாயகா், பூசாரிவலசு திருமங்கிரிகுமாரசாமி, பொன்பரப்பி கன்னிமாா் சுவாமி ஆகிய கோவில்கள் உள்ளன.

    இக்கோவில்களுக்கு பக்தா்களால் தானமாக வழங்கப்பட்ட ஏறத்தாழ 500 ஏக்கா் நிலங்கள் உள்ளன. கோவில் பராமரிப்புக்கு பணம் தருவதாக ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் பேரில் பெரும்பாலான இந்த நிலங்கள் பல தலைமுறைகளாக பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அரசு உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைப்படுத்த தற்போது அறநிலையத் துறை நில அளவையாளா் ராகவேந்திரா் தலைமையில், செயல் அலுவலா் ராமநாதன் முன்னிலையில் அளவீடு செய்யும் பணி துவங்கி ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. கோவில் நிலங்களை மீட்டு அதிக வருமானம் வரும் வகையில் முறைப்படி குத்தகைதாரா்களை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி குழந்தைகள், கண்ணன்- ராதை வேடமிட்டு, பஜனை பாடல்கள் பாடியபடியும், உறியடித்தும் விழாவை கொண்டாடினர்.
    • சிறப்பு விருந்தினர்கள் கிருஷ்ணர் வரலாறுகள் மற்றும் அவதார நோக்கங்களை விளக்கி பேசினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் வட்டாரத்தில் உள்ள பள்ளிகள், கோவில்களில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. பள்ளி குழந்தைகள், கண்ணன்- ராதை வேடமிட்டு, பஜனை பாடல்கள் பாடியபடியும், உறியடித்தும் விழாவை கொண்டாடினர். சிறப்பு விருந்தினர்கள் கிருஷ்ணர் வரலாறுகள் மற்றும் அவதார நோக்கங்களை விளக்கி பேசினர். பாடல், ஆடல், நாட்டிய நடன போட்டிகளும் நடந்தன.

    திருப்பூர் காமநாயக்கன்பாளையத்திலுள்ள ஸ்ரீபூமி நீளாதேவி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியை முன்னிட்டு, பஜனை குழுவினர், பல்லக்கில் கிருஷ்ணரை அலங்கரித்து, ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதன்பின், சிறப்பு பஜனைகளுடன்வழிபாடு, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உறியடி திருவிழா, மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகளும் நடந்தது.கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கரிவரதராஜ பெருமாள் கோவில், மூகாம்பிகை நகர், அம்ச விநாயகர் கோவில், முனி யப்பன் கோவில் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் உள்ளிட்டவற்றில், உறியடி திருவிழா நடந்தது.

    காங்கயம் தாலுகா வள்ளியரச்சல் கிராமம் பெருங்கருணைபாளையத்தில் உள்ள பால கிருஷ்ணசுவாமி ஆலயத்தில் கோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை 8.45 மணிக்கு விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்ய பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. காலை 10..30 மணிக்கு கோபூஜை, 11 மணிக்கு மூலவர் உற்சவர் சிறப்பு அபிஷேகம், சங்காபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12.05 மணிக்கு மகாதீபாராதனை, திருவீதி உலா, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடந்தது. மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    உடுமலை சின்னவாளவாடியில், ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கோவிலில், கோகுலாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாப்படும். இதைெயாட்டி ேநற்று இரவு 7 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது. நாளை காலை, 8 மணிக்கு, ஸ்ரீ சுதர்சன ேஹாமம், காலை, 10 மணிக்கு மேல், 12 மணிக்குள், ருக்மணி, சத்யபாமா, சமேத வேணுகோபால சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    பகல் 12மணிக்கு மேல், திருவாராதனம், சாற்றுமறை, தீபாராதனை, தீர்த்தம் வழங்கப்பட்டது. மாலை, 3மணிக்கு, ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருவீதி உலாவும், இரவு 7மணிக்கு, உறியடி உற்சவமும் நடைபெறுகிறது.பின்னர், அன்னபிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதேப்போல் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்கள், பள்ளிகளில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

    • வீட்டுக்கு ஒரு விருட்சம்-ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தை உலக புவி தினத்தன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
    • 75 அமைப்புகளை சேர்ந்தவர்கள் நூலகங்கள், கோவில்கள், குளக்கரைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 75 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    தஞ்சாவூர்:

    75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 75 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக்குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம்-ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தை உலக புவி தினத்தன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    அதன்தொடர்ச்சியாக 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 அமைப்புகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 75 இடங்களில் 75 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கீழ்கோவில்பத்து ஊராட்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    இதில் இந்திய செஞ்சிலுவை சங்கம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், இன்னர்வீல் சங்கம், ஜே.சி.ஐ. அமைப்பு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பெண்கள் இயக்கம், நேரு யுவகேந்திரா இளைஞர் மன்றங்கள், தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை தன்னார்வலர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 75 அமைப்புகளை சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொது இடங்கள், ஆஸ்பத்திரிகள், போலீஸ் நிலையங்கள், நூலகங்கள், கோவில்கள், குளக்கரைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 75 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் அனைத்து அமைப்புகளுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டுக்க ளையும், வாழ்த்து களையும் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் வேளா ண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், கும்ப கோணம் கோட்டாட்சியர் லதா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலைச்செல்வன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) சங்கர், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், இணை செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், விழாக்கள் நடைபெற்று வருகிறது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ஊட்டி:

    ஆடி மாதம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், விழாக்கள் நடைபெற்று வருகிறது. நேற்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதம் என்பதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    மசினகுடி அருகே பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மனுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல் கூடலூர் 2-ம் மைல், வன துர்க்கையம்மன் உள்பட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் காலை 5 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் தொடர்ந்து ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், ஏராளமான பெண்கள் உட்பட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். முன்னதாக வரலட்சுமி விரதம் இருந்த பெண்கள் வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்களுக்கு வழங்கினர்.

    ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதேபோல் அரசு ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓம்சக்தி பத்திர காளியம்மன் கோவில், காந்தல் மூவுலக அரசியம்மன் கோவில் உள்பட பல்ேவறு அம்மன் கோவில்களில் நேற்று பூஜை நடந்தது.

    • கூடலூர் 2-ம் மைல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஊட்டி:

    ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் திருவிழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று 2-வது ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். மங்கல பொருட்கள் முன்னதாக கூழ் ஊற்றப்பட்டது. மேலும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து இரவு 8 மணி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இது தவிர கூடலூர் 2-ம் மைல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோன்று ஊட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு காலை முதல் மாலை வரை ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கற்பூரம் ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

    சிறப்பு பூஜை அரசு ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓம்சக்தி பத்ர காளியம்மன் கோவில், அக்ரஹாரம் பகுதியில் உள்ள துளிர் காத்த அம்மன் கோவில், காந்தல் மூவுலகரசியம்மன் கோவில், கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோத்தகிரி கடைவீதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது

    • ஆடி மாதம் ஆடிப்பெரும் விழா சிறப்பாக நடைபெறுகிறது.
    • 26 ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தன்வந்திரி ஹோமம் நடக்கிறது.

    உடுமலைட:

    உடுமலையின் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடிப்பெரும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஆடி திருவிழா ஆடி முதல் வெள்ளியையொட்டி காலை 11 மணிக்கு திருமஞ்சனம், உச்சிக்கால பூஜை நிகழ்ச்சிகளும் மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம் ,மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை வழிபட்டனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வெண்பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் சில பக்தர்கள் கம்பங்கூழ் தயாரித்து பாத்திரங்களில் கொண்டு வந்திருந்தனர். அதுவும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் யு. எஸ். எஸ். ஸ்ரீதர், செயல் அலுவலர் சி. தீபா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    உடுமலை நேரு வீதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளியையொட்டி மகாலட்சுமி ஹோமம் மாலை லலிதா சகஸ்ர நாம குங்கும அர்ச்சனை நடந்தது. 26 ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தன்வந்திரி ஹோமம் நடக்கிறது. 29ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீ துர்கா ஹோமமும்ஆகஸ்ட் 1ந் தேதி மாலை 6 மணிக்கு ஆடிப்பூரம் ஊஞ்சல் உற்சவம், தொடர்ந்து அம்மனுக்கு வளையல்அலங்காரம் நடைபெறுகிறது. ஆகஸ்டு 2ந்தேதி காலை 10 மணிக்கு திருப்புகழ் பாராயணமும் தொடர்ந்து காலை 11 மணிக்கு ஸ்தல விருட்ச பூஜை, வன்னி அத்தி மரத்திற்கு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • கொங்கராயக்குறிச்சியில் முற்கால பாண்டியன் மாறன் சடையனால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வலம்புரி பிள்ளையார் கோவில் உள்ளது.
    • 1899 முதல் 1905-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்ட அலெக்சாண்டர் ரியா தனது ஆய்வு அறிக்கையில் இதற்கான சான்றுகளை கூறியுள்ளார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணிக்கரையில் கொங்கராயக்குறிச்சி அமைந்துள்ளது.

    வலம்புரி பிள்ளையார் கோவில்

    வரலாற்று பெருமை வாய்ந்த இவ்வூரில் முற்கால பாண்டியன் மாறன் சடையனால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வலம்புரி பிள்ளையார் கோவில் உள்ளது.

    மண்ணில் புதைந்து தற்போது சில வருடங்களுக்கு முன்பு வெளிப்பட்ட வீரபாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 11-ம் நூற்றாண்டில் ஜடவர்மன் ஸ்ரீ வல்லப பாண்டியனால் கட்டப்பட்டது.

    பைரவர்

    தென் சீர்காழி என்றழைககப்படும் இந்த சிவன் சட்டநாதர் என்றழைக்கப்படும் பைரவர் மிகவும் பழைமையானாவர்.

    இந்த கோவில்கள் இரண்டும் மண்ணுக்குள் புதைந்தே காணப்படுகின்றது. அதிலும் பழைய வெயிலுகந்தம்மன் மற்றும் மாலை அம்மன் கோவில்கள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்து கோவிலின் விமானங்கள் மட்டுமே வெளியே தெரியும்படி காட்சியளிக்கிறது.

    அடிக்கடி வரலாற்று ஆற்று வெள்ளத்தில் அழிந்து போன இந்த ஊரில் தான் 19-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ பிரசங்கியார் ரேணியஸ் அடிகளார் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கிறிஸ்தவ குடியிருப்புகளை உருவாக்கியுள்ளார்.

    தொல்லியல் துறை நடவடிக்கை

    வீரபாண்டீஸ்வரர் கோவிலை போன்று இவ்வூரில் மேலும் பல கோவில்களையும் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இந்த ஆலயங்களை வெளியே கொண்டு வர தமிழகம் மற்றும் மத்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுகக வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து இந்த ஊரை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் விக்னேஷ் கூறியதாவது:-

    எங்கள் ஊரில் பல கோவில்கள் மண்ணுக்குள் புதைந்து உள்ளது. கொங்கராயக்குறிச்சியின் வரலாறு 9ம் நூற்றாண்டுடன் நிறைவு அடையவில்லை.

    உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் வரலாற்றுடன் இணைந்து முடிவுரை இல்லாத வரலாற்றில் பயணிக்க தொடங்கியுள்ளது.

    அலெக்சாண்டர் ரியா

    இதற்கான சான்றுகளை 1899 முதல் 1905-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்ட அலெக்சாண்டர் ரியா தனது ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளார்.

    அதன்படி, தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஆதிச்சநல்லூருக்கு எதிரே அமைந்துள்ள கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கல் கட்டுமானம் ஒன்றை கண்டதாகவும், ஆதிச்ச நல்லூர் தாழிக்காட்டில் புதைக்கப்பட்ட மனிதர்களின் வாழ்விடம் கொங்கராயக்குறிச்சியாக தான் இருந்திருக்க வேண்டும் என்றும் அலெக்சாண்டர் இரியா தெரிவித்துள்ளார்.

    இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வூரின் பழம்பெயர் முதுகோனூர் என்பதை மண்ணுக்குள் புதைந்து காணப்படும் வலம்புரி பிள்ளையார் கோவில் 10-ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகின்றது.

    வாய்மொழி கதைகள்

    இந்த கொங்கராய குறிச்சியில் இருந்த பூர்வகுடி களே ஆதிச்சநல்லூர் தாழிக்காட்டில் புதையுண்டு உள்ளனர் என்பதை உணர்த்தும் விதமாக கொங்கராயக்குறிச்சி மக்களிடம் இன்று வரை வாய்மொழி கதைகள் வழக்கத்தில் உள்ளது.

    மேலும், கொங்க ராயக்குறிச்சி கிராமத்தின் காடு, திரடு போன்ற பல்வேறு பகுதிகளில் பானை ஓடுகள், தாழியின் சிதைந்த பாகங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன.

    இந்த பானை ஓடுகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதிகளில் கிடைத்த பொருட்களை ஒத்தே காணப்படுகின்றது. இப்படி பல சான்றுகள் ஆதிச்ச நல்லூர் கொங்க ராயக்குறிச்சி வரலாற்று தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.

    எனவே, ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைந்த முதுமக்களின் வாழ்விடங்களை கண்டறிய வேண்டும் என்றால் கொங்க ராயக்குறிச்சி கிராமத்தில் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது ஆதிச்ச நல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளும் மத்திய தொல்லியல் துறை யினரும், தாமிரபரணி கரையில் உள்ள அகழாய்வு இடங்களை தேடி ஆய்வு செய்யும் மாநில தொல்லியல் துறையினரும் கொங்க ராயகுறிச்சி மீது அதிக ஈடுபாடு கொண்டு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும். இங்குள்ள பழமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×