search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை
    X

    நீலகிரியில் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை

    • அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், விழாக்கள் நடைபெற்று வருகிறது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ஊட்டி:

    ஆடி மாதம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், விழாக்கள் நடைபெற்று வருகிறது. நேற்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதம் என்பதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    மசினகுடி அருகே பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மனுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல் கூடலூர் 2-ம் மைல், வன துர்க்கையம்மன் உள்பட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் காலை 5 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் தொடர்ந்து ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், ஏராளமான பெண்கள் உட்பட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். முன்னதாக வரலட்சுமி விரதம் இருந்த பெண்கள் வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்களுக்கு வழங்கினர்.

    ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதேபோல் அரசு ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓம்சக்தி பத்திர காளியம்மன் கோவில், காந்தல் மூவுலக அரசியம்மன் கோவில் உள்பட பல்ேவறு அம்மன் கோவில்களில் நேற்று பூஜை நடந்தது.

    Next Story
    ×