search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ண ஜெயந்தி விழா"

    • முதுகுளத்தூர், மானாமதுரையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் நாயக்கர் தெருவில் அமைந்துள்ள கண்ணன்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் சுப்பையா தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. கண்ணன். ராதை வேடமிட்ட சிறுவர் சிறுமிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் செல்லையா, மணி, செந்தில் கண்ணன், சிவமுருகேசன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கவுன்சிலர் சத்தியநாதன், கா.வினோத்குமார், முத்துமணி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுந்தரபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் குழந்தை கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை கள் நடைபெற்றது. கோவில் முன்பு நூற்றுக்கணக்கான குழந்தைகள் ராதை கிருஷ்ணன் வேடமிட்டு கோலாட்டம் ஆடினார்கள். ஸ்வாமி வேடத்தில் வந்த குழந்தைகள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல் சாஸ்தாநகர், அழகர் கோவில் தெரு, ெரயில்வே காலணி மற்றும் கொன்னக்குளம், வேதியேரேந்தல், செய்களத்தூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

    • கிருஷ்ணர் மண் உண்ட லீலையை மாணவ-மாணவிகள் தத்ரூபமாக நடித்து காட்டினர்.
    • மழலையர் பிரிவு மாணவ- மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து உலா வந்தனர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. மாணவி ஸ்வேதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். மாணவி ஐஸ்வர்யா வரவேற்று பேசினார். மாணவி காளிபிரியா பரதநாட்டிய நடனமாடினார்.

    நிகழ்ச்சியில் கிருஷ்ண லீலைகளில் ஒன்றான கிருஷ்ணர் மண் உண்ட லீலையை மாணவ-மாணவிகள் தத்ரூபமாக நடித்து காட்டினர். இதில் மழலையர் பிரிவு மாணவர் ரித்விக் விஸ்வா கிருஷ்ணராகவும், மாணவி குங்கும காயத்ரி யசோதாவாகவும் வேடமணிந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவி மிருதுளா ஜெனனி குழுவினர் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா என்ற பாடலுக்கு நடனமாடினர். மழலையர் பிரிவு வகுப்பு மாணவ- மாணவிகள் கிருஷ்ணர் மற்றும் ராதை போல் வேடமணிந்து உலா வந்தனர்.

    நிகழ்ச்சியில் ஆசிரியைகள் மஞ்சுளா, பார்வதி ஆகியோர் மாகோலமிட்டு பள்ளியை அலங்கரித்தனர். மாணவி ரட்சனா நன்றிகூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கிருஷ்ண அவதாரம் ஹிந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும்.
    • நந்தருக்கும், யசோதாவுக்கும் குழந்தை பிறந்ததை கோகுலமே கொண்டாடியது. குழந்தைக்கு நந்தர் கிருஷ்ணர் என்று பெயரிட்டார்.

    மஹா விஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    கிருஷ்ண அவதாரம் ஹிந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் ஆலோசனைகளே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது.

    இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    கிருஷ்ண ஜெயந்தியைப் பற்றி சில விவரங்கள்...

    கிருஷ்ணரின் பிறப்பு

    தேவகியும், கம்சனும் சகோதர சகோதரிகள். தனது தங்கை தேவகிக்கும், வாசுதேவருக்கும் பிறக்கும் 8வது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிகழும் என்று வானத்தில் இருந்து ஒரு குரல் கூற, அதனால் அச்சமுற்ற கம்சன் தேவகியையும், வாசுதேவரையும் சிறையில் அடைத்து தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.

    இருவருக்கும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கம்சன் ஈவு-இரக்கமின்றி கொன்று வந்தான். இவ்வாறாக 7 குழந்தைகளையும் கம்சனே கொன்றான். தேவகி 8வது முறையாக கர்பமுற்றாள். அதே சமயம் வாசுதேவரின் நண்பரும் ராஜாவுமான நந்தாவின் மனைவி யசோதாவும் கர்பமுற்றாள்.

    இந்நிலையில் ஆவணித் திங்கள் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று இரவு நேரத்தில் கிருஷ்ணர் பிறந்தார் (அவதரித்தார்). அதே சமயம் யசோதாவும் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்.

    அப்போது சிறைக்குள் விஷ்ணு தோன்றி, இக்குழந்தையை கோகுலத்தில் உள்ள யசோதாவின் வீட்டில் கொண்டு சென்று சேர்த்துவிடு. அங்கு அவளுக்குப் பிறந்திருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடு என்று வாசுதேவருக்கு ஆணையிட்டார்.

    வாசுதேவரும் கிருஷ்ணரை கூடையில் சுமந்தபடி கொட்டும் மழையில் கோகுலத்தை நோக்கிச் சென்றார். அங்கு கிருஷ்ணரை வைத்துவிட்டு, பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்தார் வாசுதேவர்.

    அந்த பெண் குழந்தை வந்ததும், 8வது குழந்தை பிறந்த செய்தி கம்சனுக்கு எட்டியது. உடனடியாக விரைந்து வந்த கம்சன், அந்த பெண் குழந்தையை கொல்ல முயன்றபோது, அது அவனது பிடியில் இருந்து விலகிச் சென்று காளித் தோற்றம் கொண்டு பேசியது, கம்சனே உன்னைக் வதம் செய்வதற்கான 8வது குழந்தை கிருஷ்ணன் பிறந்துவிட்டான். அவன் வேறொரு இடத்தில் வளர்ந்து உன்னைக் கொல்ல வருவான் என்று கூறி மறைந்தது.

    இதையடுத்து தேவகியையும், வாசுதேவரையும் கம்சன் விடுதலை செய்தான்.

    அதே நேரத்தில், நந்தருக்கும், யசோதாவுக்கும் குழந்தை பிறந்ததை கோகுலமே கொண்டாடியது. குழந்தைக்கு நந்தர் கிருஷ்ணர் என்று பெயரிட்டார்.

    அந்த தினத்தை கோகுலமே கொண்டாடியது. தற்போது இந்தியாவிலும், உலக நாடுகளில் வாழும் இந்தியர்களும் கிருஷ்ண ஜெயந்தி விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

    கிருஷ்ணருக்குப் பிடித்த இனிப்புகள்: அவல் லட்டு, சேமியா பாயசம்.

    • வாலாஜா தன்வந்திரி பீடத்தில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெரு முயற்சியுடன் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கும் இதர 89 பரிவார தெய்வங்களுக்கும் திருச்சன்னதிகள் அமைத்து உலக மக்கள் நலன் கருதி அவ்வப்போது சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் கோகுலாஷ்டமியை முன்னிட்டும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவீன முறையில் கல் ஊஞ்சலில், ஒரு அடி உயர தவழ்ந்த கோலத்தில் உள்ள நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள், மஹா அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தம்பதியர் குழந்தை பாக்யம் பெற வேண்டியும், குடும்ப ஒற்றுமை, அகந்தை அகன்றிட, திருமணத்தடை அகல, செல்வம் பெருக, வயல்களில் விளைச்சல் அதிகரிக்க, அமைதி நிலவ, ஆற்றல் பெருக, வறுமை இல்லா வாழ்வு அமைய வேண்டி ஸ்ரீ கிருஷ்ணயாகம், கூட்டு பிரார்த்தனையுடன் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், சீடை, முறுக்கு, தட்டை, அப்பம், லட்டு போன்ற பல்வேறு பலகாரங்கள் பழங்கள் வைத்து நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மேலும் அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜையும், அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது.

    இந்த பூஜையில் வீடு, மனை வாஸ்து தோஷங்கள் நீங்கவும், கெட்ட சக்திகள் விலகவும், குடும்பத்தில் சச்சரவுகள் நீங்க, தாம்பத்ய உறவில் விரிசல் அகல, நல்ல வேலை கிடைக்க பிரார்த்தனை நடைபெற்றது.

    பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஹோம பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • சிறுவர்கள் கிருஷ்ணர் வேடம் அணிந்து பங்கேற்றனர்.

    புதுக்கோட்டை:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தங்களது வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து மகிழ்ந்தனர். மேலும் குழந்தை பருவத்தில் கண்ணன் வீட்டிற்கு வருவது போன்று வாசலின் நுழைவுவாயிலில் இருந்து பூஜை அறை வரை சிறு குழந்தைகளின் கால் தடங்களை பதித்து, கண்ணன் விரும்பும் சீடை, முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை படைத்து வழிபாடு நடத்தினார்கள். இதனால் கிருஷ்ணர் தங்கள் இல்லத்துக்குள் வந்து ஆசி வழங்குவார் என்பது ஐதீகம்.

    புதுக்கோட்டை விட்டோபா பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சிறுவர்கள் கண்ணன், ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். இதேபோல் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டையில் கிருஷ்ணா பக்தி இயக்கம் சார்பில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மேலும் கிருஷ்ணர், ராதை அலங்காரம் போட்டி நடைபெற்றது. இதில் சிறுவர்- சிறுமிகள், கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து பங்கேற்றனர்.

    மணமேல்குடி அருகே பொன்னகரத்தில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் சீதேவி, பூதேவி உடனுறை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியொட்டி பெருமாளுக்கு தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    கிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி கந்தர்வகோட்டை அருகே உள்ள கொத்தகப்பட்டி கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பின்னர் கிருஷ்ணருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
    • குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

    தேன்கனிக்கோட்டை

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ராம ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

    மேலும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, விசேஷ பூஜைகள் நடைபெற்ற பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் நகர செயலாளர் பாலாஜி , இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திக், பாஜக மாவட்ட செயலாளர் பார்த்திபன், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நடன போட்டி, பேச்சு போட்டி, மாறு வேட போட்டிகள் நடத்தப்பட்டன.
    • மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை பள்ளியின் நிறுவனர் வி.எம்.அன்பரசன் வழங்கி பாராட்டினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளியில் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகிறது.

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நடன போட்டி, பேச்சு போட்டி, மாறு வேட போட்டிகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை பள்ளியின் நிறுவனர் வி.எம்.அன்பரசன் வழங்கி பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் சங்கீதா அன்பரசன், சி.பி.எஸ்.இ. பள்ளியின் முதல்வர் ஷர்மிளா, மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ரமணன், பள்ளி மேலாளர் பூபேஷ்குமார் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • பள்ளி குழந்தைகள், கண்ணன்- ராதை வேடமிட்டு, பஜனை பாடல்கள் பாடியபடியும், உறியடித்தும் விழாவை கொண்டாடினர்.
    • சிறப்பு விருந்தினர்கள் கிருஷ்ணர் வரலாறுகள் மற்றும் அவதார நோக்கங்களை விளக்கி பேசினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் வட்டாரத்தில் உள்ள பள்ளிகள், கோவில்களில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. பள்ளி குழந்தைகள், கண்ணன்- ராதை வேடமிட்டு, பஜனை பாடல்கள் பாடியபடியும், உறியடித்தும் விழாவை கொண்டாடினர். சிறப்பு விருந்தினர்கள் கிருஷ்ணர் வரலாறுகள் மற்றும் அவதார நோக்கங்களை விளக்கி பேசினர். பாடல், ஆடல், நாட்டிய நடன போட்டிகளும் நடந்தன.

    திருப்பூர் காமநாயக்கன்பாளையத்திலுள்ள ஸ்ரீபூமி நீளாதேவி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியை முன்னிட்டு, பஜனை குழுவினர், பல்லக்கில் கிருஷ்ணரை அலங்கரித்து, ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதன்பின், சிறப்பு பஜனைகளுடன்வழிபாடு, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உறியடி திருவிழா, மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகளும் நடந்தது.கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கரிவரதராஜ பெருமாள் கோவில், மூகாம்பிகை நகர், அம்ச விநாயகர் கோவில், முனி யப்பன் கோவில் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் உள்ளிட்டவற்றில், உறியடி திருவிழா நடந்தது.

    காங்கயம் தாலுகா வள்ளியரச்சல் கிராமம் பெருங்கருணைபாளையத்தில் உள்ள பால கிருஷ்ணசுவாமி ஆலயத்தில் கோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை 8.45 மணிக்கு விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்ய பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. காலை 10..30 மணிக்கு கோபூஜை, 11 மணிக்கு மூலவர் உற்சவர் சிறப்பு அபிஷேகம், சங்காபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12.05 மணிக்கு மகாதீபாராதனை, திருவீதி உலா, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடந்தது. மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    உடுமலை சின்னவாளவாடியில், ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கோவிலில், கோகுலாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாப்படும். இதைெயாட்டி ேநற்று இரவு 7 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது. நாளை காலை, 8 மணிக்கு, ஸ்ரீ சுதர்சன ேஹாமம், காலை, 10 மணிக்கு மேல், 12 மணிக்குள், ருக்மணி, சத்யபாமா, சமேத வேணுகோபால சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    பகல் 12மணிக்கு மேல், திருவாராதனம், சாற்றுமறை, தீபாராதனை, தீர்த்தம் வழங்கப்பட்டது. மாலை, 3மணிக்கு, ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருவீதி உலாவும், இரவு 7மணிக்கு, உறியடி உற்சவமும் நடைபெறுகிறது.பின்னர், அன்னபிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதேப்போல் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்கள், பள்ளிகளில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

    • கிருஷ்ணரின் அவதாரங்களை அலங்கரித்து சிறப்பு பூஜை செய்து கொண்டாடுகின்றனர்.
    • கண்ணன் பிறந்த நாளையொட்டி, சந்தான கோபால கிருஷ்ணன் சேவை நடந்தது.

    உடுமலை :

    உடுமலை, பெரியகடை வீதியில் உள்ள நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா துவங்கியது.

    நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஆவணி மாதம், கிருஷ்ணரின் அவதாரங்களை, ஒவ்வொரு நாளும் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்து, கிருஷ்ணஜெயந்தி விழாவை கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நேற்று துவங்கியது. செப்டம்பர் 2 ந்தேதி வரை நடக்கிறது. முதல் நாளான்று பூமிநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாளுக்கு காலை, 4 மணிக்கு கண்ணன் பிறந்த நாளையொட்டி, சந்தான கோபால கிருஷ்ணன் சேவை நடந்தது. பெருமாளுக்கு சிவப்பு நிற பட்டுடுத்தி, மயிலிறகு சூடி, மலர் அலங்காரத்துடன் கோபால கிருஷ்ண அலங்காரத்தில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி மற்றும் சென்னியோங்கு பாசுரங்கள் சேவை நடந்தது.

    திரளான பக்தர்கள் பங்கேற்று, 'நாராயண நாமம்', கூறி வழிபட்டனர். தொடர்ந்து 'வெண்ணைய்த்தாழி கண்ணன்' அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர், மற்றும் ஸ்ரீ ராமானுஜா சாரிடபிள் டிரஸ்டியினர் செய்திருந்தனர்.

    • மழலையர் பிரிவு( எல். கே.ஜி, யு. கே. ஜி ) மாணவர்கள் கண்ணன்களாகவும் ராதைகளாகவும் வேடமிட்டு அசத்தினர்.
    • கீதையின் சுலோகங்களை மழலை மொழியில் ஒப்புவித்து அசத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மழலையர் பிரிவு( எல். கே.ஜி, யு. கே. ஜி ) மாணவர்கள் கண்ணன்களாகவும்ராதைகளாகவும் வேடமிட்டு கீதையின் சுலோகங்களை மழலை மொழியில் ஒப்புவித்து அசத்தினர்.

    ஒவ்வொரு மாணவரும் கிருஷ்ணர்களாகவும், மாணவிகள் ராதையாகவும் வேடமணிந்து இருந்தது மிகவும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி, செயலாளர் கீர்த்திகாவாணிசதிஷ், பொருளாளர் சுருதி வேலுசாமி, பள்ளி முதல்வர் ஏ.எஸ். மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

    • நாளை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மாலை 5 மணிக்கு தொடங்குகிறது
    • இதில் கிருஷ்ண பகவானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்படுகிறது.

    திருச்சி,

    திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவார பஸ் நிறுத்தம் வ.உ.சி. தெருவில் இஸ்கான் அமைப்பின் கோவில் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ண பகவான் வழிபாடு பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. ஆகையினால் ஆண்டு தோறும் இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதில் கிருஷ்ண பகவானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்படுகிறது. பின்னர் விழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நந்த புத்திரதாஸ், பாலாஜி கோபால் தாஸ் சுவாமிகள் செய்துள்ளனர்.

    • நாளை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது
    • விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை (18-ந்தேதி) தொடங்குகிறது.

    நாளை காலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், பகல் 12 மணிக்கு பணிவிடையும், உச்சி படிப்பும், மாலை 6 மணிக்கு பணிவிடையும், உகபடிப்பும், இரவு 8 மணிக்கு முகிலன்விளை பிரம்ம சக்தி அம்மன் பஜனை குழுவினரின் பஜனையும், நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடையும், உகபடிப்பும், கிருஷ்ணன் பிறப்பும், திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (19-ந்தேதி) வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு பணி விடையும், உகப்படிப்பும், 8 மணிக்கு நாதஸ்வர இசையும், பகல் 12 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும் மாலை 5 மணிக்கு அய்யாவின் வாகன பவனியும், 6 மணிக்கு அன்னதர்மமும், இரவு 7 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், 8 மணிக்கு சிறுவர், சிறுமியருக்கான கலை நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் தங்ககிருஷ்ணன் தலைமையில் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    ×