search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udumalai temples"

    • கிருஷ்ணரின் அவதாரங்களை அலங்கரித்து சிறப்பு பூஜை செய்து கொண்டாடுகின்றனர்.
    • கண்ணன் பிறந்த நாளையொட்டி, சந்தான கோபால கிருஷ்ணன் சேவை நடந்தது.

    உடுமலை :

    உடுமலை, பெரியகடை வீதியில் உள்ள நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா துவங்கியது.

    நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஆவணி மாதம், கிருஷ்ணரின் அவதாரங்களை, ஒவ்வொரு நாளும் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்து, கிருஷ்ணஜெயந்தி விழாவை கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நேற்று துவங்கியது. செப்டம்பர் 2 ந்தேதி வரை நடக்கிறது. முதல் நாளான்று பூமிநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாளுக்கு காலை, 4 மணிக்கு கண்ணன் பிறந்த நாளையொட்டி, சந்தான கோபால கிருஷ்ணன் சேவை நடந்தது. பெருமாளுக்கு சிவப்பு நிற பட்டுடுத்தி, மயிலிறகு சூடி, மலர் அலங்காரத்துடன் கோபால கிருஷ்ண அலங்காரத்தில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி மற்றும் சென்னியோங்கு பாசுரங்கள் சேவை நடந்தது.

    திரளான பக்தர்கள் பங்கேற்று, 'நாராயண நாமம்', கூறி வழிபட்டனர். தொடர்ந்து 'வெண்ணைய்த்தாழி கண்ணன்' அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர், மற்றும் ஸ்ரீ ராமானுஜா சாரிடபிள் டிரஸ்டியினர் செய்திருந்தனர்.

    • ஆடி மாத பிறப்பை சிறப்பு வழிபாட்டுடன் மக்கள் வரவேற்றனர்.
    • வனதுர்க்கையம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    உடுமலை:

    மங்களகரமான புண்ணிய மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தையொட்டி உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது

    அம்மனுக்கு விரதமிருந்து, ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த நாட்களில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வகையில் ஆடி செவ்வாய்க்கிழமையான இன்று உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இதே போல் குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூரத்துக்கான சிறப்பு பூஜைகள் தொடங்கியது. திருப்பாவை, திருவெண்பாவை வாசகங்களை உள்ளடக்கிய பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் ஆடி மாத பிறப்பை சிறப்பு வழிபாட்டுடன் மக்கள் வரவேற்றனர்.

    உடுமலை அமராவதி நகர் சித்தி விநாயகர் கோவிலில் ஆடி மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த, சித்தி விநாயகர், மூஷிக வாகனம், ஸ்ரீ சதாசிவ லிங்கேஸ்வரர், வனதுர்க்கையம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    ×