ஸ்ரீ கிருஷ்ணபாதம்

ஸ்ரீகிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம். கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.
ஸ்ரீ கிருஷ்ணபாதம்
Published on

கிருஷ்ண ஜெயந்தி அன்று தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

எனவே கிருஷ்ணஜெயந்தி அன்று வீட்டை சுத்தப்படுத்தி அலங்கரித்து குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் வீட்டு வாசலில இருந்து பூஜை அறை வரையில் சின்னக்கண்ணன் நடந்து வருவது போல் அவனது பாதச்சுவடுகளை ஸ்ரீகிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம்.

இதனால் கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரக்கோலம் (ரங்கோலி), மலர் அலங்காரம், பூக்கோலமிடுவர். அதை நமது இல்லங்களிலும் செய்து கிருஷ்ணரை வரவேற்க வேண்டும். இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களை பதித்து நடந்து வந்து பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக் கொள்கிறார் என்பதாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com