search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்கள்"

    • இந்துக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் அனைத்து ஒன்றியங்கள், வட்டங்களில் நடத்தப்பட்டது.
    • தமிழக மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களை காக்க முன்வர வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கோவில்களின் அவல நிலை குறித்து கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜூலை 16-ந் தேதி, 'நம்ம சாமி, நம்ம கோவில், நாமே பாதுகாப்போம்' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இந்து முன்னணி கொள்கை விளக்கம், இந்துக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் அனைத்து ஒன்றியங்கள், வட்டங்களில் நடத்தப்பட்டது.

    மொத்தம் 3,500 இடங்களில் நடந்த தெருமுனை கூட்டங்களில், 1.75 லட்சம் மக்கள் பங்கேற்றனர். 10 லட்சத்துக்கும் அதிகமான துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

    கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள சீர்கேடுகள் குறித்தும், இந்துக்களின் நம்பிக்கைகள் திட்டமிட்ட ரீதியில் கொச்சைப்படுத்தும் தி.மு.க., - தி.க., - காங்., - கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் கட்சி என, ஆகிய கட்சிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர் களான சமூக ஊடகத்தினர் (யூ-டியூபர்) பற்றியும்,இந்து விரோத செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது

    இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு அந்தந்த பகுதியில் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட் சமயத்தில் ராளமான மக்கள், அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களின் அவல நிலை குறித்து கூறினர்.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்கள் அவல நிலையில் உள்ளது.

    இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, 'அரசே கோவிலை விட்டு வெளியேறு,' என்ற கோஷத்தை முன்னிறுத்தி, தமிழக கவர்னர் ரவியை சந்தித்து அறிக்கை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களை காக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • ராஜபாளையம் அருேக அம்மன் கோவில்களில் தங்கத்தாலி-வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது.
    • இதுகுறித்து கீழராஜாகுலராமன் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வடகரை தேவி ஆற்றங்கரை பகுதியில் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட இந்த கோவி லில் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடை பெறும் அப்போது திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரி சனம் செய்வார்கள். மற்ற நாட்களில் கோவில் பூட்டி யே கிடக்கும்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று நிர்வாகி பொன்னை யா கோவிலை திறந்தார். அப்போது கோவில் சன்னதி யில் பொருட்கள் சிதறி கிடந்தன. காளியம்மன், மாரியம்மனுக்கு அணிவிக் கப்பட்டு இருந்த 2 தங்கதாலி கள், பூஜை அறையில் இருந்த 80 கிராம் வெள்ளி பொருட் கள் ஆகியவை திருடு போயி ருந்தன. இதன் மதிப்பு ரூ. 26 ஆயிரம் ஆகும்.

    இதுகுறித்து பொன்னையா கீழராஜாகுலராமன் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் லவ குசா வழக்குபதிவு செய்து கோவிலில் நகை, வெள்ளிப் பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • அடிவாரத்து பிரகலாத வரதன் கோயிலே அகோபில மடத்தின் தலைமையகம்.
    • திருமங்கையாழ்வாரைத் தடுத்து ஆட்கொண்டு அஷ்டாக்ஷரம் உபதேசித்த பதி.

    அகோபிலம் (சிங்கவேள் குன்றம்):

    ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் நந்தியாலின் தென்கீழ் 48 கி.மீ. தூரத்தில் நவநரசிம்ம தலம் உள்ளது. இந்த மலையில் 9 கி.மீ. ல் அகோபில நரசிம்மர் கோயில். குடவரை நரசிம்மர் வெளியான தூண் 2கி.மீ ல் உள்ளது.

    அடிவாரத்து பிரகலாத வரதன் கோயிலே அகோபில மடத்தின் தலைமையகம். இம்மடத்தின் அழகிய சிங்க ஜீயர், ஸ்ரீரங்கத்தில் செய்த அபூர்வ கோபுரத் திருப்பணியை எவரும் மறக்க முடியாது. ஆதிசங்கரரை, காபாலிகர்களிடமிருந்து, நரசிம்மர் காப்பாற்றிய தலம்.

    வேளுக்கை:

    காஞ்சிபுரத்தில் திருத்தண்கா சமீபம். ஸ்ரீ அழகியசிங்கர் கோயில். மேற்கு திசையில் அசுரர்களை தடுத்தபின், பெருமாள், யோக நரசிம்மராக, தானே விரும்பித் தங்கிவிட்ட இடம்.

    திருவாழித் திருநகரி:

    சீர்காழியின் தென்கீழ் 6 கி,மீ ல் திருவாழி. அங்கிருந்து வடகீழ் 4 கி.மீ திருநகரி. தேவாரத்தில் வலஞ்சுழியும், கொட்டையூரும் போல திருவாலி லக்ஷ்மி நரசிம்மரும், திருநகரி தேவராஜனும் சேர்ந்தே போற்றப்பட்டுள்ளனர். நாங்கூர் 11 திருப்பதிகளுள் ஒன்று.

    சிவத்தலம். சத்திமுத்தத்தில் சிவனும், அம்பிகையும் போல பிராட்டியும் பெருமாளும் ஆலிங்கனக் கோலம். திருமங்கையாழ்வாரைத் தடுத்து ஆட்கொண்டு அஷ்டாக்ஷரம் உபதேசித்த பதி.

    நாகை (நாகப்பட்டினம்):

    நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சையின் கிழக்கே 90 கீ.மீ அபூர்வமான அஷ்டபுஜநரசிம்மர் திருமேனி உள்ளது. துருவனும் ஆதி சேடனும் பணிந்தது.

    தஞ்சைமாமணிக்கோயில் (வெண்ணாற்றங்கரை):

    தஞ்சைக்கு வடக்கே திருவையாறு வழியில் 6 கி.மீ. அருகருகே 3 பெரிய விஷ்ணு கோயில்கள். ஒன்றாகவே பாடப்பட்டவை. நீலமேகப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள் மற்றும் நரசிம்மன் கோயில்கள்.

    தஞ்சகன், தண்டகன், கஜமுகன் ஆகியோரின் கெடுமையிலிருந்து மக்களைத் திருமால் காத்த பதி. திவ்யப்ரபந்தம் கூறி வணங்கிடலாகாத தினங்களில் தேசிகப்ரபந்தம் பாராயணம் செய்யுமாறு நயினாச்சாரியார் நியமித்த பதி.

    திருக்கோஷ்டியூர்:

    (தென்) திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை வழி 7 கி.மீ. உரகமெல்லணையான் கோயில்.

    மகாவிஷ்ணு நின்று, இருந்து, கிடந்த, நடந்து, கூத்தாடும் 5 நிலையில் தரிசனமளிக்கும் பதி. 1000 ஆண்டுகட்கு முன்பே, கீழோர் எனப்பட்டவரை, திருக்குலத்தோர் என்று கூறி, தான் நரகம் சென்றாலும், அனைவரும் உய்வதற்காக ,யாவரும் அறியுமாறு ராமானுஜர் நாராயண மந்திரத்தை உரக்கக் கூவிய தலம்.

    மகாமகக்கிணறு சிறப்பு. வைணவ மறுமலர்ச்சியில் முக்கிய ஸ்தலம். சிவனும் சேர்ந்து அருளும் பதி. மயனும், விஸ்வகர்மாவும் இணைந்து எழுப்பியது. தென்புற நரசிம்மர் தெற்காழ்வார் இரண்யனைப் பிடித்த கோலம். வடபக்க நரசிம்மர் வடக்காழ்வார் இரண்யவதம் செய்த கோலம். இரண்டுமே மிகப்பெரிய திருவுருவங்கள்.

    • பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று.
    • தமிழ்நாட்டில் சுமார் 100 கோயில்கள் உள்ளன.

    விஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன. அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று.

    அப்பெயரோடு தமிழ்நாட்டில் சுமார் 100 கோயில்கள் உள்ளன. அங்கெல்லாம், பெருமாள் வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப்படுவதில்லை.

    உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன. அவை:

    1. அகோபில நரசிம்மர்

    2. அழகிய சிங்கர்

    3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர்

    4. உக்கிர நரசிம்மர்

    5. கதலி நரசிங்கர்

    6. கதலி லக்ஷ்மி நரசிம்மர்

    7. கதிர் நரசிம்மர்

    8. கருடாத்ரிலக்ஷ்மிநரசிம்மர்

    9. கல்யாணநரசிம்மர்

    10. குகாந்தர நரசிம்மர்

    11. குஞ்சால நரசிம்மர்

    12. கும்பி நரசிம்மர்

    13. சாந்த நரசிம்மர்

    14. சிங்கப் பெருமாள்

    15. தெள்ளிய சிங்கர்

    16. நரசிங்கர்

    17. பானக நரசிம்மர்

    18. பாடலாத்ரி நரசிம்மர்

    19. பார்க்கவ நரசிம்மர்

    20. பாவன நரசிம்மர்

    21. பிரஹ்லாத நரசிம்மர்

    22. பிரஹ்லாத வரதநரசிம்மர்

    23. பூவராக நரசிம்மர்

    24. மாலோல நரசிம்மர்

    25. யோக நரசிம்மர்

    26. லட்சுமி நரசிம்மர்

    27. வரதயோக நரசிம்மர்

    28. வராக நரசிம்மர்

    29. வியாக்ர நரசிம்மர்

    30. ஜ்வாலா நரசிம்மர்

    ஸ்ரீ நரசிம்ம மஹா மந்திரம்

    ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும்

    ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்

    ந்ருஷம்ஹம் பீஷணம் பத்ரம்

    ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

    • புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
    • சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.

    வேதாரண்யம்:

    ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.

    பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இதேபோல், வேதாரண்யம் நகரின் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் மாணிக்கவாசகருக்கு பவுர்ணமியை முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர்.

    தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்க வாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு தெற்கு பகுதியில் உள்ள மவுனமகான் சித்தர் பீடத்தில் தினசரி பூஜை களுடன் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    மகானுக்கு பிடித்த பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் வைத்து வழிபட்டு பக்தர்களுக்கு வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.

    பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் கடல் அன்னைக்கு பக்தர்கள் சிறப்பு தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    • 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர்.
    • தஞ்சையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான முத்து பல்லக்கு திருவிழா நேற்று தொடங்கியது.

    தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர், முருகப்பெரு மான், குறிச்சி தெருவில் உள்ள முருகன், மேல அலங்கம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள முருகர், கீழவாசல் வெள்ளை விநாயகர், உஜ்ஜையினி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, தெற்கு ராஜ வீதி கமலரத்தின விநாயகர், காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர், வடக்கு வாசல் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து முருகர், விநாயகர், மேல வெளி ரெட்டிப்பாளையம் சாலை வெற்றி முருகன் உள்பட 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் எழுந்தருளினர்.பல்லக்குகள் பூக்களாலும், பல வண்ண காகிதங்களாலும், மின் விளக்குகளாலும் கலைநயத்துடன் வடிவ மைக்கப்பட்டு இருந்தன.

    பல்லக்குகள் அனைத்தும் தெற்கு வீதி, கீழவீதி ,மேல வீதி, வடக்கு வீதி ஆகிய 4 ராஜ வீதிகளிலும் மேள தாளங்கள் முழங்க வலம் வந்தன.

    அப்போது தஞ்சையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.

    இருந்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முத்து பல்லுக்கு வீதி உலாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இரவில் தொடங்கிய வீதி உலா விடிய விடிய இன்று காலை வரை நடைபெற்றது.

    வீதி உலா முடிந்த பின்னர் மீண்டும் பல்லக்குகளில் இருந்து

    சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்ற டைந்தன.

    • 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளுவர்.
    • 6-ந் தேதி காலை மீண்டும் சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான முத்து பல்லக்கு திருவிழா நாளை இரவு தொடங்கி 6-ந் தேதி அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி தஞ்சையில் உள்ள கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகிய சுவாமிகள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 வீதிகளிலும் உலா வருவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர், முருகப்பெருமான், குறிச்சி தெருவில் உள்ள முருகன், மேலஅலங்கம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள முருகர், கீழவாசல் வெள்ளை விநாயகர், உஜ்ஜையினி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, தெற்கு ராஜ வீதி கமலரத்தின விநாயகர், காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர், வடக்கு வாசல் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து முருகர், விநாயகர், மேல வெளி ரெட்டிப்பாளையம் சாலை வெற்றி முருகன் உள்பட 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் முத்துப் பல்லக்கில் எழுந்தருளி நாளை இரவில் தஞ்சையில் உள்ள 4 ராஜ வீதிகளிலும் வீதி உலா வர உள்ளது.இந்த பல்லக்குகள் எல்லாம் அந்தந்த கோவில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சை தெற்கு வீதி, கீழவீதி, மேலவீதி, வடக்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வரும். நாதஸ்வர கச்சேரி மற்றும் வான வேடிக்கைகளுடன் விடிய விடிய இந்த திருவிழா நடைபெற உள்ளது. 6-ந் தேதி காலை மீண்டும் சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்றடையும்.

    திருவிழாவை முன்னிட்டு அந்தந்த கோவில்களில் முத்துப் பல்லக்கு தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர்-காளியம்மன் கோவில்களில் துணிகர கொள்ளை நடந்துள்ளது.
    • கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு பூசாரி வன்னியராஜ் வழக்கம் போல் கோவிலை பூட்டி சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்குவந்த மர்மநபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்து காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு தப்பினர். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த பூசாரி வன்னியராஜ் கதவு உடைக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பணம் கொள்ளை போயி ருந்தது.

    இதுகுறித்து குடியிரு ப்போர் நலச்சங்க செயலாளர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    காளியம்மன் கோவில்

    ஆலங்குளம் தேவர் நகர் முக்கு ரோடு பகுதியில் கரையடி கருப்பசாமி கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு இந்த கோவிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் அங்கிருந்த அம்மனின் 6கிராம் நகை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கிரீடம் ஆகியவற்றை திருடி கொண்டு தப்பினர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் கொள்ளை கும்பல் சிறிய கோவில்களை குறிவைத்து நகை-பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில்.திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமாரவலசு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • 75 ஆண்டுகள் பழமையான இந்த வழிபாட்டுத் தலங்களை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
    • பழமையான வழிபாட்டு தலங்கள் இடித்து அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லக்கையன்கோட்டை முதல் அரசபிள்ளைபட்டி வரை ரூ.87.50 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் ரெயில் நிலையம் அருகே கோவில்கள், மசூதி உள்ளிட்டவை ஆக்கிரமிப்பில் இருந்தன.

    75 ஆண்டுகள் பழமையான இந்த வழிபாட்டுத் தலங்களை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. வழிபாட்டுத்தலங்களை அகற்றுவது தொடர்பாக இந்து, முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இப்பகுதியில் அமைந்த பழமையான காவடியப்ப சுவாமி கோவில், தன்னாசியப்பன் கோவில், 2 விநாயகர் கோவில், டவுன் பள்ளிவாசல் ஆகியவற்றை இடிக்க நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பாபுராமன், ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துசாமி, டி.எஸ்.பி. முருகேசன், முன்னிலையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    பழமையான வழிபாட்டு தலங்கள் இடித்து அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • ராமநாதபுரத்தில் கோவில்கள், தேவாலயங்களில் புத்தாண்டு வழிபாடு நடந்தது.
    • இறைமக்கள் மற்றும் பங்குப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.



    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் தலைமை குருக்கள் மோகன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

     ராமநாதபுரம்

    ஆங்கில புத்தாண்டை யொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்கள், தேவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் தலைமை குருக்கள் ஆர். எஸ். மோகன் தலைமையில் நே ற்று இருமுடி கட்டுதலும். அன்னதானமும் நடந்தது. இரவு சிறப்பு பஜனை, சிறப்பு அபிஷேகம் நடந்த பின் இரவு 12 மணிக்கு வல்லபை அய்யப்பனுக்கு புத்தாண்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி, சபரிமலை யாத்திரை புறப்பாடு நடந்தது.

    கொரோனா பரவல் நீங்கி, மக்கள் நலமுடன் வாழவும், மழை வேண்டியும் தலைமை குருக்கள் ஆர். எஸ். மோகன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. குடும்பம் சகிதமாய் பங்கேற்ற பக்தர்கள், வழிபாடு நடத்தி புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டினர். பின்னர் காப்பு கட்டிய பக்தர்கள் தலைமை குருக்கள் மோகன் தலைமையில் பஸ்களில் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பன் சேவை நிலையம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம் வழி விடு முருகன் கோவிலில் நடந்த புத்தாண்டு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை வழிபாடு செய்தனர். உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவில், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ராமநாதபுரம் தூய ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடந்த சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு, பரதர்தெரு புனித அந்தோணியார் சர்ச்சில் நள்ளிரவு 12 மணியளவில் பிறந்த புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும்நடந்தன. பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். கிறிஸ்துவின் மறையுரை அருளப்பட்டது.

    ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைபரிமாறிக் கொண்டனர். பண்ணாட்டார் தெருவில் உள்ள அந்தோணியார் சர்ச்சில் புத்தாண்டையொட்டி சிறப்பு ஆராதனை நடந்தது. சி.எஸ்.ஐ. தூய பேதுரு சர்ச்சிலும் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது.

    முத்துப்பேட்டை புனித காணிக்கை அன்னை சர்ச் சில் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு கூட்டுத்தி ருப்பலி நடந்தது. உலக மக்களின் ச மா தானத்தைவலியுறுத்தியும், நன்மை வேண்டியும், ஜெபம் நடத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.இறைமக்கள் மற்றும் பங்குப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

    ×