search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் கோவில்களில் தங்கத்தாலி-வெள்ளி பொருட்கள் கொள்ளை
    X

    அம்மன் கோவில்களில் தங்கத்தாலி-வெள்ளி பொருட்கள் கொள்ளை

    • ராஜபாளையம் அருேக அம்மன் கோவில்களில் தங்கத்தாலி-வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது.
    • இதுகுறித்து கீழராஜாகுலராமன் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வடகரை தேவி ஆற்றங்கரை பகுதியில் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட இந்த கோவி லில் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடை பெறும் அப்போது திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரி சனம் செய்வார்கள். மற்ற நாட்களில் கோவில் பூட்டி யே கிடக்கும்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று நிர்வாகி பொன்னை யா கோவிலை திறந்தார். அப்போது கோவில் சன்னதி யில் பொருட்கள் சிதறி கிடந்தன. காளியம்மன், மாரியம்மனுக்கு அணிவிக் கப்பட்டு இருந்த 2 தங்கதாலி கள், பூஜை அறையில் இருந்த 80 கிராம் வெள்ளி பொருட் கள் ஆகியவை திருடு போயி ருந்தன. இதன் மதிப்பு ரூ. 26 ஆயிரம் ஆகும்.

    இதுகுறித்து பொன்னையா கீழராஜாகுலராமன் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் லவ குசா வழக்குபதிவு செய்து கோவிலில் நகை, வெள்ளிப் பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    Next Story
    ×